வருமுன் காக்க



நன்கு படித்த, பணம் நிறைந்த குடும்பத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது.  மணமகனோ மிகவும் நல்லவர்.  நல்ல வேலை பார்ப்பவர்.  குடும்பமோ மிகவும் எளிமைப்பட்டது.  மணமகள் குடும்பம் பெரும் பணக்காரக் குடும்பம்.  திருமணத்தின் அத்தனைப் பொறுப்புகளையும் மணமகளின் வீட்டார் பொறுப்பெடுத்துக் கொண்டனர்.  மணமகள் வீட்டாருக்கு மிகவும் மகிழ்ச்சி.  விதவிதமான உணவுகள், ஆடம்பரமான செலவுகள் செய்யப்பட்டன.  படிப்பும், சம்பளமும் மணமகனுக்கும், மணமகளுக்கும் ஒத்துப் போனாலும் மனஅளவில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வும், தாழ்வு மனப்பான்மையும் சில நாட்களிலே வந்தது.  மணமகளின் ஆடம்பரச் செல்வைக் கிரகிக்க முடியாமல் அந்த ஆண் திணறினான்.  ஏதாவது சொன்னால் என்ன இது பிச்சைகாரத்தனமாக இருக்கிறது என்று ஒரே வார்த்தையில் கணவனின் வாயை மூடிவிடுவாள்.  சுதந்திரமாகப் பறந்த கிளி கூண்டுக்குள் அகப்பட்டது போன்று மணமகன் தாழ்வு மனப்பான்மையில் சிக்கித் தவித்தான்.

குடும்ப வாழ்வில் ஈடுபடுமுன், வரன் பார்க்கும்போதே குடும்பத்தின் அந்தஸ்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.  நாம் ஒரு குடும்பத்தில் மணமகனையோ, மனமகளையோ தேர்ந்தெடுக்கும்போது குடும்பத்தின் பொருளாதார நிலையைப் பற்றிய தெளிவு இருக்க வேண்டும்.  நாம் அந்தக் குடும்பத்தில் சென்று வரும்போது மதிக்கப்படுவோமா? நம்முடைய குடும்பத்திற்கும் அவர்கள் குடும்பத்திற்கும் ஒத்துப்போகுமா? மருமகனாக, மருமகளாக நடத்தப்படுவோமா அல்லது வேலைக்காரனாக, வேலைக்காரியாக அந்நியனாகப் பார்க்கப்படுவோமா என்பதனை உணர்ந்து திருமணத்தை நடத்த வேண்டும்.

ஒருவர் பணம் படைத்தவராகவும் மற்றவர் வறியவராகவும் இருக்கும் போது தாழ்வு மனப்பான்மை நிச்சயமாக வர வாய்ப்பு உள்ளது.  இதேபோன்று படிப்பு மற்றும் பதவி வகிப்பதிலும் உள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒருவரையொருவர் சகித்துக் கொள்ள முடியாத திராணியற்றவர்களாக மாற்றி விடுகிறது.  குடும்பநிலை அறிந்து திருமணம் செய்வதே சிறந்தது. 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் : சந்தோஷமான குடும்பம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு  ஏற்றதுணையை  எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி , திருநெல்வேலி திருமண்டலம்

புதிய செய்திகளை Daily படிக்க இந்த Blog ஐ Subscribe பண்ணுங்கள்

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி