Posts

Showing posts from August, 2021

கொஞ்சம் பறக்க விடுங்களேன்

Image
அன்று கவின் குடும்பத்தினரை வீட்டிற்கு அழைத்திருந்தார் ஜீன். மாலை வேளையில் குடும்பமாய் காரில் வந்து இறங்கினார். அப்பொழுது அவர் தன் மனைவி மற்றும் திருமணமான மகளுடன் வந்து இறங்கினார். ஜீன் அவளை பார்த்தவுடன் மிகுந்த மகிழ்ச்சி, எப்படிம்மா இருக்கிறா? Husband எப்படி இருக்கிறாங்க? என்றார். நல்லா இருக்கிறேன் uncle என்றவள் husband பற்றி ஒன்றும் கூறவில்லை. ஏம்மா எங்க வீட்டுக்கு அவரையும் அழைத்து வந்து இருக்கலாமே என்று கூற,  அவள் - uncle அவரை பற்றி என்னிடம் ஒன்றும் கேட்காதீங்க என்றாள். ஜீனுக்கு சற்று மனது குழம்பியது. கவினை நோக்கி பார்த்தார். அதற்குள்ளாக கவின் முந்திக் கொண்டார், “அவன் ஒன்றுக்கும் உதவ மாட்டான், தெரியாமல் மாட்டிக் கொண்டோம்” என்றார். கவின் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்க, அவரது மகள் அங்கும் இங்குமாய் பார்த்து ஜீன் கேள்விகளை கண்டு கொள்ளவே இல்லை. வந்ததும் வராததுமாய் தெரியாமல் கேட்டு கஷ்டப்படுத்தி விட்டோமே என்று வருத்தப்பட்ட ஜீன், “வாங்க வீட்டிற்குள் போகாமல் வெளியேயே பேசிக் கொண்டிருக்கிறோம்” என்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். மாலை மயங்கும் போது அப்படியே கவின் மகள் ஜான்சி, வீட்டிற்கு பி

அன்னப்பறவை

Image
நகோமி தன் மருமகளை மகளைப் போலவே வைத்துக்கொள்வாள். தன் மருமகளை யாராகிலும் குறை கூறினால் காதுகொடுத்து கேட்க மாட்டாள். ஒவ்வொரு நாளும் ஆண்டவரிடம் வேண்டிக் கொள்வாள். ஆண்டவரே உமது வேதத்தில் உள்ள நகோமியைப் போல என் மருமகளை நேசிக்க எனக்கு பலன் தாரும் என்று வேண்டிக் கொள்வாள். அந்த ஆலயத்திற்கு வருகிறவர்களே ஆச்சர்யப்பட்டு போவார்கள். இரண்டு பேரும் ஒரே மாதிரி சேலையை கட்டிக்கொண்டு ஆலயத்திற்கு வருவதும், வெளியே சென்றால் மாமியார் மருமகளுக்கு பிடிக்கிறதை தேடுவதும், மருமகள் மாமியாருக்கு பிரியமானதை வாங்குவதும் எல்லாருக்கும் கன்னத்தின் மேல் கை வைக்க தான் செய்தது. அன்று எலிசபெத் ஏதேன் தோட்டத்திற்குள் நுழைந்த சர்ப்பமாக உள்ளே ஊர்ந்து வராமல் நடந்து வந்தாள். இப்பொழுதுதான் சர்ப்பம் பல வண்ண சேலை, சுடிதார்களில், கோர்ட்டு, சூட்களில் உலாவருகிறதே! கண்கள் உள்ளவன் கண்டுகொள்ளக்கடவன். மெதுவாக chessல் shoulderஐ இறக்கினாள் எலிசபெத். அக்கா மருமகள் வேலைக்கு போயாச்சா? என்று கேட்டுக் கொண்டாள். உள்ளே மருமகள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு, மெதுவாக அடுத்த காயை நகர்த்தினாள். உங்க மருமகளை பற்றி தான் உங்ககிட்ட பேச வந்தேன்! உங்க

Leading இல்லீங்க

Image
Bankல் பணியாற்றிய ஜான்சனுக்கு பல வரன்கள் வந்தது. இருப்பினும் அவன் மனதிற்குள் நம்மைப்போல அரசு உத்தியோகத்தில் இருக்கிற பெண் தான் வேண்டும் என்று உறுதியாக இருந்தான். பெற்றோரும் அவ்வாறே இருந்தனர். மாப்பிள்ளை bankல் பணியாற்றியதால் அதிக demand இருந்தது. சில வரன்கள் எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்று வந்தால், ஜெபித்து சொல்லுகிறோம் என்பார்கள். சில நாள் கழித்து ஜெபித்தோம், ஒரு leadingம் இல்லீங்க என்று பதில் சொல்லி கழித்து விடுவார்கள். இறுதியாக அரசு பணியாற்றுகிற ஒரு பெண் வந்து சிக்கினாள். ஆனால் மிகவும் குறைந்த சம்பளம் தான். இருப்பினும் இருக்கிறதை வைத்து சமாளித்து விட வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். ஜோராக நிச்சயதார்த்தம் நடந்தது. மணமகன் வீட்டிலிருந்து ஏறக்குறைய 50 பேர் சென்று நன்றாக சாப்பிட்டுவிட்டு வந்தார்கள். திருமண நாள் குறிக்கப்பட்டது. திடீரென்று ஒரு phone call வந்தது. தரகர் தான் பேசினார். பொண்ணு governmentல மிகவும் உயர்ந்த post. சம்பளம் மணமகனை காட்டிலும் அதிகம், dowryயும் அதிகம் தருவதற்கு ஆயத்தம், அதோடு 10 லட்சத்திற்கு கார் ஒன்றும் தருவதாக கூறினார். உடனே ஜெபிக்க ஆரம்பித்தனர். ஏற்கனவே நி

மூழ்கிய பாவிகள்

Image
எப்பொழுதெல்லாம் மாமியார் வீட்டுக்கு வருகிறார்களோ, அப்பொழுதெல்லாம் மருமகளுக்கு ஜுரம் வந்துவிடும். கணவனுக்கு புரியாத புதிராக இருக்கும்! ஓன்று அவரே உட்கார்ந்து அம்மாவுக்கு சாப்பாடு செய்வார் அல்லது கடையில் இருந்து சாப்பாடு வாங்கி கொடுப்பார். ஆண்டவரிடம் வேண்டினார், ஆண்டவரே எப்படியாவது எங்க அம்மா வரும் போது என் மனைவி சுகமாய் வாழ உதவிடும் என்று கெஞ்சினார். வாதத்திற்கு மருந்து உண்டு, பிடிவாதத்திற்குதான் இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லையே. எதிர்பாராத விதமாக ஒரு போதகர் அந்த ஊருக்கு வந்தார். பாவத்திலிருந்து விடுதலை பெற முழுக்கு ஞானஸ்நானம் எடுத்தால்தான் பரலோகம் என்றார்! முதல் ஆளாக மனைவி அழுகையோடும், கண்ணீரோடும் ஒப்புக்கொடுத்து, மூழ்கி ஞானஸ்நானம் எடுத்துவிட்டு சாட்சி கூறினார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம், கர்த்தர் இப்பொழுதுதான் என்னுடைய எல்லாப் பாவத்திலிருந்தும் விடுதலை செய்துள்ளார் என்றாள். கணவனுக்கு மிக்க சந்தோஷம். அடுத்தநாள் எதிர்பாராதவிதமாக மாமியார் வருகை என்று phone மூலம் செய்தி வந்தது. மகனுக்கு எந்த டென்ஷனும் இப்பொழுது இல்லை! எங்க அம்மா அவங்க மருமகள் கையால செய்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு மனத

ஐ லவ் சீடா

Image
ஆன்ட்வெர்ப் என்ற உயிரியல் பூங்கா பெல்ஜியம் நாட்டில் உள்ளது. இப்பூங்காவில் ஏராளமான மனித குரங்குகள் கண்ணாடி கூண்டிற்குள் அடைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் 38 வயது நிரம்பிய சீடா என்ற மனித குரங்கும் வாழ்ந்து வருகிறது. இந்த பூங்காவில் வரும் மக்கள் இந்த கண்ணாடி வழியாகவே இந்த மனித குரங்குகளிடம் நேரத்தை மகிழ்ச்சியுடன் செலவிடுவர். இவ்வாறு வருகைத் தருபவர்களில் அடிய் டிம்மர்மேன்ஸ் என்ற பெண் இங்குள்ள மனித குரங்குகளில் குறிப்பாக சீடா என்ற மனித குரங்கிடம் அதிக நேரம் செலவிட்டு மகிழ்ந்து வந்தார். நாட்கள் செல்ல செல்ல வாரத்திற்கு நான்கு நாட்கள் சீடாவிடம் நேரத்தை செலவிட வந்தார். ஒரு நாளுக்கு சுமார் 15 மணி நேரம் சீடாவிடம்  செலவிடும் அளவிற்கு சென்றார். கண்ணாடி வழியாக இருவரும் முத்தமிட்டு மகிழ்ந்தனர். மனித குரங்காகிய சீடா இப்பொழுது முற்றிலும் மாறிவிட்டது. மற்ற யாரைப்பார்த்தாலும் "சீசீ இந்த பழம் புளிக்கும்" என்று யாரையும் கண்டுக்கொள்ளாமல் வெறுத்தது. குறிப்பாக தன்னுடைய மனித குரங்குகள் இனத்தையும் கூட கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டது.  நிலைமை மோசமடைவதைக்கண்ட பூங்கா பராமரிப்பாளர்கள் அடிய் க்

எண்ணித் துணிக

Image
ஜவகர்லால் நேருவும், காந்தியும் நடந்து போய் கொண்டிருந்தனர். அவர்கள் போகிற வழியிலே சிறிய நீரோடை ஓன்று ஓடிக் கொண்டிருந்தது. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, சற்று இளைஞராகக் காணப்பட்ட நேரு ஓடி சென்று அதைத் தாண்டினார். காந்தியடிகள் சற்று வயதானவர், அவர் அந்த தண்ணீரின் வழியாக மெதுவாக நடந்து வந்தார். சிரித்துக்கொண்டே நேரு காந்தியடிகளைப் பார்த்துச் சொன்னார், "பார்த்திர்களா, நான் எப்படி தாண்டி வந்துட்டேன்," என்று! பதிலுக்கு, காந்தியடிகள் நேருவைப் பார்த்து "நான் முன் வைத்தக் காலை பின் வைக்காதவன்" என்றார். காந்தியடிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர். குறிப்பாக உப்பு என்னும் உரிமையைப் பெறுவதற்காக ஆறு வார காலம் திர்மானம் எடுப்பதற்கு காத்திருந்தார். ஆழ்மனதில் இருந்து ஒரு உந்துதல் வந்த போது அப்பொழுது வைசிராயாக இருந்த இர்வின் பிரபுவுக்கு உப்பு வரி என்னும் கொடுமையை நீண்ட கடிதம் மூலம் தெரியப்படுத்தினார். சத்தியாகிரகம் என்பது மாபெரும் சக்தி என்பதை ஆங்கிலேயருக்கு உணர்த்த தனது ஆசிரமத்திலிருந்து 240 மைல்கள் தொலைவிலுள்ள தண்டி கடற்கரையைத் தேர்ந்தெடுத்து நடந்து பிரிட்ட

நாங்க வேற மாதிரிங்கோ

Image
1814 ஆம் ஆண்டு மே மாதம் திருவாங்கூர் அரசு ஒரு சுற்றறிக்கை ஆணையினைப் பிறப்பித்தது. கிறிஸ்தவத்தை தழுவின நாடார் பெண்கள் சீரியன் கிறிஸ்தவ பெண்களைப் போலவும், மாப்பிள்ளை சாதியைச் சார்ந்த பெண்களைப் போலவும் ரவிக்கை (குப்பாயம்) அணிந்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. உயர்சாதியினர் இதற்கு எதிராக செயல்பட்டனர். 1822ம் ஆண்டு மேமாதம் கல்குளம் என்ற பகுதியில் கிறிஸ்தவத்திற்கு மாறிய பெண்கள் மேலாடை அணிந்து சென்ற போது அவர்கள் ரவிக்கைகளை கிழித்து மரங்களில் தொங்க விட்டு அவமானப்படுத்தினர். இதற்கு எதிர்முனைத் தாக்குதலாக நாடார் பெண்கள் நாயர் பெண்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர். ஏன் இவ்வளவு கலவரம்? தாழ்ந்த ஜாதி பெண்ணுக்கு அவளது எஜமான் ஆண்டுக்கு ஓன்று அல்ல இரண்டு முண்டுகள்(Towel)  தான் கொடுப்பார். இந்த முண்டு அவளது இடுப்பிலிருந்து முழங்கால் வரை மட்டுமே மறைக்கும். காலையிலிருந்து மாலை வரை நாற்று நடுவதற்காக சகதிக்குள் சென்று வேலைச் செய்ய வேண்டும். ஒரு அறுவடையிலிருந்து மறு அறுவடை வரையிலும் இது தான் அவர்கள் உடை. இவ்வாறு உடுத்துவதால் அழுக்கடைந்து நாற்றம் வீசி தீண்டதகாதவர்கள் போலவே மாறி விட்டனர். இதற்கு முடிவுக்கட்டதான் மீ

மதி, மதிப்புக் கூடும்

Image
கலைஞர் கருணாநிதி அவர்கள் ஒரு தம்பதியை வாழ்த்தும் போது ஒரு உதாரணத்தை கூறினார். அது இன்றும் தம்பதியினருக்கு பயனுள்ளதாகவே இருக்கும். ஒருநாள் ஒரு இளம் தம்பதியினர் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தார்கள். தங்கள் கஷ்டங்கள் போவதற்காக என்ன செய்யலாம் என்று திட்டமிட்டார்கள். ஒரு சிந்தனை உதித்தது. தன் வீட்டில் இருந்த மாட்டை, சந்தையில் விற்று அதில் வரும் பணத்தை கொண்டு ஒரு சிறிய கடை ஒன்றை வைக்க முடிவெடுத்தனர். காலை வேளையில் மாட்டை பிடித்துக் கொண்டு, சந்தையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். நடந்து செல்லும்போது ஒருவன் அந்த வழியாக வந்தான். மெதுவாகப் பேச்சுக் கொடுத்துக் கொண்டே போய்க் கொண்டிருந்தவனுக்கு மனதில் பட்டது “இவனைப் பார்த்தால் சரியான ஏமாளி போல் அல்லவா தெரிகிறது” என்று யோசித்தவன்  நைசாக ஒரு planயை கொடுத்தான். ஏம்பா இந்த மாட்டை கஷ்டப்பட்டு சந்தைக்கு கொண்டு போறா, பேசாம எங்க வீட்டில உள்ள ஆட்டுக்குட்டியை தருகிறேன். அதை கொண்டு போ, அந்த மாட்டை எனக்குக் கொடுத்து விடு என்றான். யோசித்துப் பார்த்தான். ஆமாம் அதுவும் நல்ல ஐடியாவாக தான் தெரிகிறது. ஆடு என்றால் easyயாக தான் இருக்கும் என்று அதை வாங்கிக்கொண்டு, மாட்டை அடுத்தவ

நேசித்தது கிடைக்காவிடில், கிடைத்ததை நேசி

Image
கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவத்தில் பணியாற்றியவர் சர் வில்லியம் ஹென்றி ஸ்லிமென் என்பவர். இங்கிலாந்து நாட்டைச் சார்ந்தவர். இராணுவத்தில் உயர் பதவியான ராணுவ தளபதி பதவி கிடைக்கும் என்று நம்பி வந்தவருக்கு அது கிடைக்காமல் போய்விட்டது. கவர்னர் ஜெனரலின் ஏஜெண்டுக்கு உதவியாளராகவே இருக்க முடிந்தது. அவர் கீழ் நிலையான கேப்டன் பதவியில் இருந்து கொண்டிருந்தார். இருப்பினும் 1822-ஆம் ஆண்டு நரசிங்கப்பூர் மாவட்டத்தில் பணியாற்றிய போது கிடைத்த வசதிகளை வைத்துக்கொண்டு மிக நேர்த்தியாக தனது கடமைகளை நிறைவேற்றி அனைவரின் பாராட்டையும் பெற்றுக் கொண்டார். வட இந்தியாவில் யாத்ரீகர்களை திருட்டு கும்பல் கொள்ளையடிப்பது மிகவும் யாத்திரிகர்களுக்கு அச்சுறுத்தலாகவே இருந்தது. மக்களை கொள்ளையடித்த பின் கொன்று விடுவதற்காகவே தாங்கள் படைக்கப்பட்டதாக எண்ணி  இந்த மக்களை கொன்று குவித்தனர். பக்ராம் என்ற கொள்ளையன் 719 பயணிகளை கொன்றதாக மெடௌ டெய்லர் (Meadow Taylor) என்பவரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளான். ஆண்டுக்கு ஏறக்குறைய 30,000 யாத்திரிகர்களை கொன்று குவிக்கப்பட்ட நிலையில், ஸ்லிமென் இந்தக் கொள்ளை கும்பல்களை அடியோடு ஒழித்துக் கட்டினார்.

சமையலுக்கு ஒன்று சமயத்திற்கு ஒன்று

Image
பெண்மணிகள் சிலர் எப்பொழுதும் ஆலயம், உபவாச கூடுகை, பெண்கள் கூடுகை, சிறப்பு கூடுகை என்று ஆலயத்திலேயே தஞ்சம் புகுந்து  கொள்ளுகிறார்கள். அவர்கள் சற்று எச்சரிக்கையாய் இருக்க வேண்டும் என்பதற்கு மறைந்த சகோதரர் D.G.S தினகரன் அவர்கள் ஒரு சம்பவத்தை ஒரு கூடுகையில் வேடிக்கையாக பகிர்ந்து கொண்டார்கள். அது இன்றும் அனேகருக்கு எச்சரிக்கையாகவே இருக்கிறது. ஒரு பெண்மணி மிகவும் ஆலயத்தை நேசிக்கிறவர்களாக இருந்துள்ளார். ஆலயத்தில் நடக்கிற அத்தனை கூடுகையிலும் தவறாமல் கலந்து கொள்ளுவார். உபவாச கூடுகை என்றால் முதல் ஆளாக இருப்பார். அதேவேளையில் நாமே சாப்பிடாமல் இருக்கிறோம். வீட்டில் உள்ளவர்களும் உபவாசம் இருந்தால் என்ன? என்று பிள்ளைகளுக்கு கணவருக்கு கூட சமையல் எதுவும் செய்யாமல் போய் விடுவார் கணவன், பிள்ளைகள் பசியினால் இருந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் அவர்கள் இருந்ததால் கணவன் அடிக்கடி மனைவிடம் சண்டையிட்டு உள்ளார். ஆனால் அதையெல்லாம் சட்டை செய்யாமல் போய்க் கொண்டே இருந்துள்ளார். ஒரு நாள் திடீரென்று ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து வீட்டிற்கு கூட்டி வந்துள்ளார். கணவர் வீட்டில் ஒரே சண்டை இறுதியாக அந்த பெண் பாஸ்டரிடம

அவரே விட்டுக் கொடுத்துவிட்டார்.

Image
திடீரென்று வீட்டு கதவு தட்டப்பட்டது. வீட்டிற்குள் TV volume அதிகமாக இருந்தது. கொஞ்ச நேரமாக வந்தவர் நின்று கொண்டே இருந்தார். வீட்டிற்குள் பயங்கர சண்டை நடந்து கொண்டிருந்தது. மீண்டும் கதவை தட்டினார். மெதுவாக கதவைத் திறந்தாள் அமுதா. வாங்க மாமா வாங்க, வாங்க. பிள்ளைங்க TV volumeயை கூட்டி வைச்சுக்கிட்டு எங்கேயோ போயிட்டாங்க என்று சமாளித்தாள். இதைப்போன்ற பல சமாளிப்புகளையெல்லாம் தெரியாதவரா  என்ன, Mr.டேவிட். தெரிந்துதான் வந்திருக்கிறார். தன்னுடைய மருமகளும், மகனும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் வெறும்  மோதலிலேயே காலத்தை கழிக்கிறாங்க என்று. வந்தவர் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, நான் கிளம்புறேம்மா. அதுக்கு முன்னால ஒரு சின்ன game வைக்க விரும்புகிறேன். நீயும் உன் கணவரும் இதுல பங்கு பெறனும். வெற்றி பெறுகிறவர்களுக்கு ஒரு தங்க மோதிரம் என்றார். மருமகளுக்கு ஒரே சிரிப்பு, மாப்பிள்ளையை அழைத்து வந்தாள். மெதுவாக game உடைய rules and regulationsயை விவரித்தார். கையிலே வைத்திருந்த பெரிய நூல்கண்டை பிடித்து இருவர் கையிலேயும் இரண்டு பக்கங்களை கொடுத்தார். யார் வேகமாக இழுத்து இதை அறுந்து போக செய்கிறீர்களோ அவர்களுக்கு

தள்ளாடும் நீதிமான்

Image
நோவாவைக் குறித்து இறைவனின் கூற்று "உன்னை நீதிமானாகக் கண்டேன்" (ஆதி 7:1) நோவாவின் காலத்தில் மக்கள் துன்மார்க்கமாக வாழ்ந்தார்கள். இறைவனின் பார்வையில்  அது வருத்தத்தைக் கொடுத்தது. உலகத்தையே அழிக்க கடவுள் நினைத்த போது நோவாவுக்கு கடவுளின் கண்களில் தயவு கிடைத்தது. அப்படிப்பட்ட உத்தமன் நோவா, பெரிய அழிவிற்கு பின்பு திராட்சை செடிகள் நட்டு பயிரிடுகிறவனாக மாறிவிட்டான்.   எப்படியோ நோவாவுக்கே தெரிந்துள்ளது திராட்சை ரசத்தை குடிக்கலாம் என்று! அதுவும் வெறி கொள்ளும் அளவிற்கு குடித்துவிட்டு உடை உடலில் இல்லாததுக் கூட தெரியாமல் விழுந்து கிடந்துள்ளான்.  உடையில்லாமல் இருப்பதை நோவாவின் மகன் கண்டு தன் சகோதரருக்கு சொல்ல அவர்கள் ஒரு துணியால் மூடிப் போடுகின்றனர். இந்த சம்பவத்தின் இறுதியில் காமை சபித்துவிடுகிறார் நோவா!    குடித்தது நோவா! சபிக்கப்பட்டது மகன்!! எவ்வளவு பெரிய வேதனையான அனுபவம். இது நடந்தது பல ஆண்டுகளுக்கு முன்.  இப்பொழுது நடந்தது வித்தியாசமானது "தூத்துக்குடி மாவட்டத்தில் போதையில் கணவர் மனைவியை சித்திரவதைச் செய்துள்ளார். தாங்க முடியாமல் வெகுண்டு எழுந்த மாமியாரும், மனைவியும் கணவன் கழுத்த

மகாத்மாவானாலும் தலை உருளத்தான் செய்யும்

Image
படித்தவர், படிக்காதவர், மதிப்பு மிக்கவர், மதிப்பு குறைந்தவர், ஆசிரியர், ஆசிரியை, மருத்துவர், கண்டுபிடிப்பாளர், கணக்கர், தொலைநோக்கு பார்வையுள்ளவர், அரசியல்வாதி, நாத்தீகவாதி, ஆத்தீகவாதி, புண்ணியவான், அயோக்கியன் யாராக இருந்தாலும் மனைவி, கணவர் என்ற குடும்பம் அமைப்புக்குள் செல்லும் போது ஏற்படும் போர் அப்பப்பா  தாங்க முடியாது. காலையிலே 6 மணிக்கு போர் ஆரம்பிக்கும் 10 மணிக்கு போர் நிறுத்த அறிவிப்பு வரும். திடீரென்று குண்டு மழைப் பொழியும், நேரத்தைப் பார்த்தால் 10.01 தான் ஆயிருக்கும். இதுவெல்லாம் எதிர்பாராத தாக்குதல்கள், கொரில்லா போர் போன்ற தாக்குதல்கள் எப்பொழுதும் ஏற்படலாம். முன் அறிவிப்போடு தான் சண்டை வரும் என்பதல்ல எப்பொழுதெல்லாம் மேக மூட்டங்கள் காணப்படுகிறதோ அப்பொழுதெல்லாம் மழைப் பெய்யதான் செய்யும். ஐயோ நம்ம வீடு தான் இப்படி எப்பொழுதும் சண்டைக்காடாக காணப்படுகிறதென்றால் மகாத்மாவின் வீட்டிலும் நடந்த காரியத்தை பார்க்கும் போது நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியும். சரி வீடு என்றால் சண்டை, சச்சரவு இருக்கத்தான் செய்யும் என்ற மன நிலை நமக்குள்ளும் வந்து விடும். மகாத்மா காந்திக்கும், கஸ்தூரிபாவு

அரட்டல் உருட்டல்

Image
அது ஒரு கிராமம். திருமணம் என்றாலே ஊர் முழுவதும் சாப்பாடு போட்டு ஒரே அமர்க்களம் தான். காலையிலே மணமகன் ஊருக்குள்ள வந்த போது ஐயோ நம்ம ஊரு வெள்ள காக்காவை, வெளியூரு அண்ட காக்கால்ல கூட்டிகிட்டு போக வந்திருக்குது என்று பேச ஆரம்பித்தனர். அரசல் புரசலாக மணப்பொண்ணு காதில வந்து போட்டுட்டாங்க. மணப்பெண்ணின் கனவுக் கோட்டை கேட்ட நேரத்திலேயே mass sliding ஆரம்பித்தது.  தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள். முன்ன பின்ன மணமகனை மணமகள் பார்த்தது கிடையாது. எல்லாரும் சொல்வதைக் கேட்டதும் அவளால் பொறுக்க முடியவில்லை. நல்ல சொத்து, பத்து இருக்குது. சும்மா அடுத்தவங்க பேசுகிறதைக் கேட்டுக்கிட்டு அழாதே. அப்பா காதுல விழுந்ததுன்னா அவ்வளவு தான் என்று சொல்லி ஆலயத்திற்கு dress பண்ணி அனுப்பிவைத்தாள் தாய். ஏதெனில் ஆதிமணம் பாட மெல்ல மெல்ல தயங்கி மணமகனை பார்த்துக்கிட்டு நடந்தாள். நனைஞ்ச பனை மரமாய் நெடுநெடுவென்று சந்தன கலர் சட்டையும், வேஷ்டியுமாய் வைச்ச கண் மாறாம பொண்ணை பார்த்துக் கிட்டு நின்னாரு மாப்பிள்ளை. வாழ்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் என்று வாக்கு வாங்க - வாக்கு வாங்க கண்ணீருடன் தலையை  ஆட்டிக்கிட்டே நின்னிச்சுத

பாவங்க புரட்டி எடுக்காதேயுங்க

Image
தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது நூதன போராட்டம் ஒன்றைப் பார்த்து வியந்து போனேன். பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு  நல சங்கம் வேண்டும் என்ற கோரிக்கையோடு சில ஆண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஒருவரிடம் நிருபர் கேள்விக் கேட்கிறார், என்ன நீங்க உங்க மனைவி கிட்ட ரொம்பவும் பாடுபடுகிறீர்களா? என்றார். அதற்கு அந்த நபர் "ஐயோ, என் மனைவி என்னா அடி அடிக்கிறா என்னால தாங்க முடியலீங்க!" என்று கூறினார். என்னோடு தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த நபர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம்… ஒரு நாள் அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தேன். அப்பொழுது ஒரு நண்பர் வந்தார். அவர் குடியிலிருந்து விடுதலைப் பெற்றவர். சில வருடங்களாக எங்களுடன் இணைந்து தான் பெற்ற விடுதலையை  மற்றவர்களுக்கும் கூறி வருபவர். அன்று சோகத்தோடு என்னை சந்திக்க வந்தார். ஐயா நான் தற்கொலைச் செய்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். நான் சீக்கிரம் சாவதற்காக கடவுளிடம் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள் என்று கண்ணீர் மல்கினார். விஷயத்தை கூறுமாறு கேட்டேன். இவர் மொடா குடிகாரராக இருக்கும் போது வீட

வேண்டாம் Reverse Gear

Image
சில இளைஞர்களுடைய திறமையை கண்டு வியந்து போய் ஐயோ எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க என்று மூக்கு மேல் கை வைக்க வேண்டிய சூழல் நமக்கு வருகிறது. ATMல் அடுத்தவர்கள் பணம் எடுத்துவிட்டு சென்றபின், ATM கார்டு இல்லாமல் மற்றவர்கள் பணத்தை அபேஸ் செய்து பெரிய ஆளாய் மாறுவது ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவர் pocketல் உள்ள ATM கார்டை, அவர்கள் அறியாமல் இருக்கும் போது ஸ்கேன் செய்து தங்கள் அக்கவுண்டிற்கு பணத்தை அனுப்பி விடுவது ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு கோடிக்கு வாங்கின காரை ஒரு ரூபாயை கொண்டு திறந்து, உள்ளே உள்ள laptop, பணப்பையை தூக்கி செல்வது ஆச்சரியமாக இருக்கிறது. நம்முடைய செல்போனை hack செய்து, நம் விருப்பம் இல்லாமல் நம்முடைய account பணத்தை தன்னுடைய accountக்கு மாற்றி பணத்தை ஸ்வாகா செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. இப்படி திறமைகளை புறவாசல் வழியாக பயன்படுத்தி முன்னுக்கு வர சில இளைஞர்கள் முற்படுகின்றனர். நேர்மையான வழியில் சம்பாதித்தால் என்று தான் முன்னுக்கு வரமுடியும் என்று தப்புக் கணக்குப் போடுகின்றனர். ஆனால் நேர்மையான வழியில் நமது திறமைகளை பயன்படுத்தினால் தான் நாம் நிரந்தரமாக முன்னுக்கு செல்ல முடியும். வாழ்க்கையில்

Operation Barbarossa

Image
கிரிக்கெட் விளையாட்டு வீரர் டோனி ஒரு நாள் மாலையில் அவருடைய சகாக்களுடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார். நான் யோசித்தேன் கிரிக்கெட் விளையாடுகிறவர், கால்பந்தும் நன்றாக விளையாடுகிறாரே, ஒருவேளை கிரிக்கெட் மார்க்கெட் குறைந்தால் கால்பந்தை தூக்கிக்கொண்டு கிளம்பி விடுவாரோ என்று நினைத்தேன். ம்..கூம் கொஞ்ச நேரத்திற்குப் பிறகு மட்டையை தூக்கிகிட்டு கிளம்பிட்டார். கால்பந்தை அப்புறம் அவரு கண்ணால பார்க்கிறதை கூட நாளேடுகளில் பார்க்கமுடியவில்லை அவருடைய நோக்கம் எல்லாம், மூச்சு எல்லாம் கிரிக்கெட், கிரிக்கெட், கிரிக்கெட். கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுகிறதற்கு தான் கால்பந்து என்பது அவரது கொள்கை. இளைஞர்கள் இன்று பல்வேறு நெருக்கங்களுக்குள் தள்ளப்படுகின்றனர். எதை படிப்பது? எதை படித்தால் வேலை கிடைக்கும்? எதை படித்தால் pocket நிரம்பும்? எதை படித்தால் உட்கார்ந்து கொண்டே சம்பளம் வாங்க முடியும்? என்று எண்ணி எண்ணி எதைப் படிக்க என்றே தெரியாமல் திக்குமுக்காடுகின்றனர். பொறியியல் படிப்புகளை படிக்கும் போதே கலைக் கல்லூரியில் சேர்ந்திருந்தால் வேலை கிடைக்குமே என்று மனம் மறுதிசைக்கு தாவுகிறது. எனவே பொறியியல் முடித்துவிட்டு மீண

கொஞ்சம் தூங்க விடுங்க மம்மி

Image
சூரிய உதயத்தை இன்று அனேக சிறுபிள்ளைகள் பார்த்ததே இல்லை. அவர்கள் எழுகிற நேரமெல்லாம் காலை 9, 10, 11 மணிக்குத்தான். அதற்கு முன்பாக எழுப்பினால் “ஏன் என்னை disturb பண்ணுறீங்க. எனக்கு தான் இன்றைக்கு school, college, work கிடையாதே. அப்படி இருக்கும்போது என்னை தொந்தரவு செய்யாமல் விட்டு விட வேண்டியது தான”  இது பிள்ளைகளுடைய வாதம். வாதத்திற்கு supportஆக சில பெற்றோர் என் பிள்ளை இரவு முழுவதும் விழித்தே இருக்கிறாள். Laptopலே  தான் இருக்கிறார்கள். என்ன செய்ய பிள்ளைகளுக்கும் நேரம் போக மாட்டேங்குது. வெளியே விடுகிறதற்கும் பயமா இருக்குது. காலம் கெட்டுப் போய் கிடக்கிறது. வெளியே போய் பிள்ளைகள் பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாமல் சும்மா Laptop, Mobile phone என்று இருந்துட்டா நமக்கு பிரச்சனை இல்லை என்று நினைத்து சரி நம்ம பிள்ளை தான, அடுத்த ரூமில் தானே இருக்கிறார்கள், பார்த்து விட்டு போகட்டுமே என்று பெற்றோர்கள் தங்கள் தாராளத்தை காண்பிக்கின்றனர். பிள்ளைகளுக்கும் இப்படிப்பட்ட பெற்றோரின் தாராள மனப்பான்மையால் இரவு முழுவதும் facebook, twitter, whatsapp, instagram என்று பார்த்துவிட்டு, மிகப்பெரிய சாதனையை செய்து முடித்த