உண்மையை உரக்க சொல்வோம்



துவக்க காலங்களில் பூமியானது தட்டையாக இருக்கிறது என்று நம்பி வந்தனர். ஆனால் பூமி ஒரு பந்து போல கோள வடிவத்தில் இருக்கிறது என்பதனை கோபர்னிகஸ் மற்றும் கலிலியோ போன்றோர்கள் உலகிற்கு அறிவித்தனர்.

இதனைக் கேட்ட மக்கள் அவர்களைப் பார்த்து சிரித்தனர். பூமி உருண்டையாக இருந்தால் மனிதர்கள் எப்படி உலகில் வாழ முடியும் என்ற கேள்வியை எழுப்பினர்.

பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டும், சூரியனைச் சுற்றியும் வருகிறது என்பது கேட்பவர்களை வியப்பிற்குள்ளாக்கியது. இதனை உலகிற்கு கூறியவர்களை உலகம் பகடி பண்ணியது. உச்சகட்டமாக   கலிலியோவை சிறைக்கும் தள்ளியது.

பூமி சுற்றினால் மனிதன் எப்படி உலகில் செயல்பட முடியும் என்று கேலிப்பேசி கேள்வியை எழுப்பினர். ஆனால் தங்களது கண்டுபிடிப்புகளை மக்களுக்கு சரியாக விளக்க முயன்றனர்.

உலகம் ஏற்றுக் கொள்ள முடியாத புதுமையை நிரூபித்துக் காட்டுவதற்கு காலம் எடுத்துக் கொண்டது. ஆனால் உண்மையை மறைக்கவில்லை. தெளிவுபட எடுத்துக் கூறி வரலாற்றில் நிரந்தர இடத்தைப் பிடித்துக் கொண்டனர்.

இன்று தொடர்ந்து நடக்கிற விண்வெளி ஆராய்ச்சியால் பூமி தன்னைத்தான் சுற்றி வருகிறது என்றும், பூமி போன்ற கோள வடிவமான கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகிறது என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

அன்பிற்குரியோரே, மனிதன் தன்னுடைய முயற்சிகளை ஒரு நாளும் நிறுத்திக் கொள்ளக் கூடாது. பல விதமான தோல்விகளும், பல இடற்பாடுகள், பல கேலிப் பேச்சுக்களும் நம்மை சுற்றி வலம் வரலாம். ஆனால் விடா முயற்சியும், தன்னம்பிக்கையும், இழந்து விடக்கூடாது. எப்பொழுது முயற்சிகளை நாம் விட்டு விடுகிறோமோ அப்பொழுதே வாழ்க்கை ஒன்றுமில்லாததாக தோன்றி விடும். இன்று பல தற்கொலைகள் ஒவ்வொரு நாளும் நடப்பதை தினசரி நாளேடுகளில் நாம் காண்கிறோம். பலருடைய வாழ்க்கையில் ஏற்படுகிற தோல்விகளை தங்களால் தாங்கிக் கொள்ள முடியாதவர்களாகக் காணப்படுகின்றனர். உண்மைகள் மறுக்கப்படும் போது வாழ்ந்து என்ன பயன் என்று பதறுகின்றனர்.    

இன்றைய வாழ்க்கை முறை என்பது மிகுந்த சிக்கல்கள் நிறைந்ததாகவும், போட்டி மனப்பான்மையுடையதாகவும், நிலையான தன்மையை இழந்ததாகவும், பாதுகாப்புணர்வு அற்றதாகவும், பயங்கள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. அதேவேளையில் கூட்டுக்குடும்பம் என்பது சிதைந்துப் போய் விட்டது. இதனால் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது முற்றிலும் குறைந்துவிட்டது. ஆலயம் செல்வது என்பது நேரத்தை வீணடிப்பது என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் வளர்ந்து வருவதால் மக்களுடைய மனப்போராட்டங்களுக்கு ஆறுதல் சொல்ல வழி இல்லாமல் போய் விட்டது. வெளி உலகில் போராடுவதற்கு குடும்பம் உறுதுணையாக இருக்க வேண்டும். ஆனால் குடும்ப வாழ்வே கேள்வி குறியாக மாறி விடுவதால் மனிதன் போராடுகிற சக்தியையே இழந்து விடுகிறான்.

சாதிக்க வேண்டிய மனிதன் மனச்சோர்வடைந்து தள்ளாடுகிறான். ஆனால் நம் கண் முன் நிறுத்த வேண்டிய நபர் யார் என்றால் நமது அருமை இரட்சகர் இயேசு கிறிஸ்து தான். அவர் யூத சமயத்தில் கண்ட உண்மைக்கு மாறான மனிதநேயமற்ற செயல்களை எல்லாம் துணிந்து எதிர்க்கிறார். வாழ்க்கையில் வந்த பிரச்சனைகளை கண்டு தயங்காமல், துணிவுடன் எதிர்த்தார். அவர் ஒரு நாளும் மனச்சோர்வோடு காணப்பட்டதாக திருமறையில் காண முடியவில்லை. அவரையே தமது தலைவராக முன் வைத்து செயல்படுவோம். உண்மையை உரக்கச் சொல்வோம்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

தேன் தடவிய வார்த்தைகள்

உண்மையை மூலதனமாக்கு