துவக்க காலங்களில் பூமியானது தட்டையாக இருக்கிறது என்று நம்பி வந்தனர் . ஆனால் பூமி ஒரு பந்து போல கோள வடிவத்தில் இருக்கிறது என்பதனை கோபர்னிகஸ் மற்றும் கலிலியோ போன்றோர்கள் உலகிற்கு அறிவித்தனர் . இதனைக் கேட்ட மக்கள் அவர்களைப் பார்த்து சிரித்தனர் . பூமி உருண்டையாக இருந்தால் மனிதர்கள் எப்படி உலகில் வாழ முடியும் என்ற கேள்வியை எழுப்பினர் . பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டும் , சூரியனைச் சுற்றியும் வருகிறது என்பது கேட்பவர்களை வியப்பிற்குள்ளாக்கியது . இதனை உலகிற்கு கூறியவர்களை உலகம் பகடி பண்ணியது . உச்சகட்டமாக கலிலியோவை சிறைக்கும் தள்ளியது . பூமி சுற்றினால் மனிதன் எப்படி உலகில் செயல்பட முடியும் என்று கேலிப்பேசி கேள்வியை எழுப்பினர் . ஆனால் தங்களது கண்டுபிடிப்புகளை மக்களுக்கு சரியாக விளக்க முயன்றனர் . உலகம் ஏற்றுக் கொள்ள முடியாத புதுமையை நிரூபித்துக் காட்டுவதற்கு காலம் எடுத்துக் கொண்டது . ஆனால் உண்மையை மறைக்கவில்லை . தெளிவுபட எடுத்துக் கூறி வரலாற்றில் நிரந்தர இடத்தைப் பிடித்துக் கொண்டனர் . இன்று தொடர்ந்து ...
உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சாப்பிட உட்கார்ந்திருந்தேன் . உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது . நான் சாப்பிட ஆரம்பிக்கும் போது ஒரு முடி ஓன்று இருப்பது போல் தெரிந்தது . மெதுவாக எடுத்து வெளியே வைத்தேன் . உறவினர் பார்த்து விட்டார்கள் என்னது முடியா ? என்றார்கள் . நான் அது ஓன்று மில்ல , " நம்முடைய உறவு வளருது வேறு ஒன்றுமில்லை " என்று கூறிவிட்டு சாப்பிட ஆரம்பித்தேன் . எனக்குத் தெரியும் என் உறவினர் ஒரு கோபக்கார ஆசாமி . மனைவியை வறுத்தெடுத்து விடுவார் . ஆனால் நான் முந்திக் கொண்டதால் மனைவியும் கணவனும் சிரித்துக் கொண்டே மீண்டும் சாதத்தை என் இலையில் வைத்தார்கள் . வார்த்தைகள் என்பது கொல்லவும் செய்யும் , உயிர்பிக்கவும் செய்யும் . சில வேளைகளில் உணர்ச்சி வசப்பட்டு பேசும் வார்த்தைகள் தடித்ததாக , பிறரைக் காயப்படுத்துவதாக அமைந்து விடுகிறது . சில வேளைகளில் மனைவி , கணவனிடையே பேசப்படும் வார்த்தைகளில் கொஞ்சமும் ஈரபசை இல்லாமல் அனல் வீசும் வார்த்தைகளாக தொடர்ச்சியாக வரும் போது வாழ்க்கையை பாலைவனமாக்கி வி...
இளைஞர்கள் படித்து முடித்த பின் சரியான வேலையில் அமர்வது என்பது முக்கியமான ஓன்று . அதற்காக எவ்வளவு கம்பெனிகளுக்கு Biodata வை அனுப்பமுடியுமோ அவ்வளவுக்கு அனுப்பிக் கொண்டே இருப்பார்கள் . இடை விடாமல் interview க்கு செல்லுவார்கள் . பெற்றோர்கள் இளைஞர்களைப் பார்த்து இந்த வேலையாவது கிடைக்குமா ? அல்லது போக்கு வரத்து காசு தான் வீணா ? என்று அலுத்துக் கொள்வார்கள் . அப்படித்தான் பல இடங்களுக்கு நடையாய் நடந்தான் ஒரு இளைஞன் . கடைசியில் ஒரு வேலையும் சரியாக அமையவில்லை . சரி கிடைக்கிற கொஞ்ச பணத்தைக் கொண்டாவது வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு கால் நடை மருத்துவரிடம் வேலைக் கேட்டு நின்றான் . அவன் வந்த நேரத்திலே அவர் தன்னுடைய பழைய காரை விற்பதற்காக ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தார் . கார் நன்றாக ஓடினால் வாங்கிக் கொள்ளுகிறேன் என்று கூறினார் வந்தவர் . மருத்துவர் எப்படியாவது வண்டியைத் தள்ளி விட வேண்டும் என்று எண்ணினார் . வண்டி வாங்குபவரின் வீடு வரை போகுமானால் அதற்கு பணம் கொடுத்து வாங்கிக் கொள்ளுகிறேன் என்று முடித...
Comments
Post a Comment