நல்ல பாம்பு


ரயில் பயணம் என்பது இனிமையானது. முன்பின் தெரியாத பலரை நாம் சந்திக்கிறோம், பிரிகிறோம். சில வேளையில் ரயிலில் சந்தித்த நபர்களை நாம் நண்பர்களாக மாற்றிக் கொள்ள நமது தொலைபேசி எண்களை கொடுக்கிறோம். ஆனால் அவர்கள் நல்லவர்களா அபாயகரமானவர்கள் என்பது நமக்குத் தெரியாது. யாரும் தான் மோசமானவன் என்று வெளிப்புறமாக சொல்லிக் கொண்டு அலைவது இல்லை. பாம்புக்கு பெயர்தான், நல்லபாம்பு ஆனால் விஷம் நிறைந்தது.

ராமச்சந்திரன் ஒரு நல்ல பாம்பு என்று தெரியாமல் ரயிலில் போகும்போது சிரித்தாள். நட்பை தொடர்ந்தாள். பொறியியல் படித்த அவன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தான். அவள் சென்னையில் டிப்ளமோ படிப்பை கல்லூரியில் படித்தாள். சிலரிடம் பழக ஆரம்பித்தாள். அவர்களின் குணம் வெளிப்படும். பாம்போடு விளையாடும்போது நன்றாகத் தான் தெரியும். ஆனால் அது முற்றிலுமாக உடலை சுற்றிக் கொண்டு நம்மை நெறிக்க ஆரம்பிக்கும். அப்பொழுது இந்த விளையாட்டு வினையாக அல்லவோ மாறிப்போகும் என்று நினைத்து விடுபட நினைத்தாலும் பாம்பு விடாமல் நம்மை நெறித்து தீங்கு செய்ய ஆரம்பித்துவிடும். அதுபோல் தான் ஸ்வேதா பேச்சை ராமச்சந்திரனுடன்  நிறுத்தினாலும் அவன் தொடர விரும்பினான். விலக நினைத்த ஸ்வேதாவிடம் கடைசியாக பேசி விடுவதாக கூறி விட்டு சந்தர்ப்பத்தை, பயன்படுத்த ஆரம்பித்தான்.

தன்னுடைய பேச்சின் படி தன்னை விரும்பவில்லை என்றால் எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற வெறித்தனத்தால் கத்தியை கையோடு கொண்டு வந்தான். இளங்கன்று பயமறியாதது போல் பேசி, விஷப்பாம்பு கத்தியால் அவள் கழுத்தை குறிவைத்து கொண்டே பேசினான். வாக்குவாதம் வளர வளர தன் வெறித்தனத்தை காட்ட ஆரம்பித்தான். பொதுமக்கள் அவனைப் பிடிக்க முயன்றபோது தன்னுடைய கத்தியால் தன் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றான்.

ரயிலில் பயணிக்கும் நபர்களோடு நட்பு பாராட்டும் போது மட்டுமல்ல, தற்செயலாக சந்திக்கும் நபர்களை நண்பர்களாக மாற்றுமுன் மூர்க்கமாக, வன்செயல் செய்கிறவர்களா என்று யோசித்துக் தான் பழக வேண்டும். சொல் அளவிலான மூர்க்கம் என்பது பேசுதல், திட்டுதல், சத்தமிட்டு பேசுதல், கெட்ட வார்த்தைகளால் பிறரை காயப்படுத்துதலோடு நின்று விடும். ஆனால் இது வளர்ந்து செயல் அளவிலான மூர்க்கமாக மாறும் போது அடித்தல், உதைத்தல், குத்துதல், வெட்டுதல், Acid ஊத்துதல்,   துப்பாக்கியால் சுடுதல் போன்ற உச்சக்கட்டத்திற்கு கொண்டு போய்விடுகிறது. இது உச்சகட்ட மூர்க்க செயல்.

சிலருடைய வாழ்க்கையில் அவர்களின் திட்டங்களும், கனவுகளும் நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் வரும்போது தான் மூர்க்கமான செயல்களில் ஈடுபடுகின்றனர். தன்னுடைய கனவை நிறைவேற்ற மறுக்கிறவர்களோடு பேசி பார்க்கின்றனர், கெஞ்சி பார்க்கின்றனர், முடியாதபோது மிரட்டிப் பார்க்கின்றனர். ஒரு கட்டத்தில் கடும் கோபமாக மாறி விடும் போது பிறரை தீர்த்து விடும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.

வாழ்க்கையில் எது சந்தோஷம் என்று நினைத்தோமோ அதுவே கிடைக்காதபோது வாழ்ந்தது போதும் என்ற மனநிலைக்குள் வந்து விடுகின்றனர். இனி வாழ்க்கையை தொடர்ந்து பயனில்லை என்ற எண்ணமே தற்கொலைக்கு தூண்டுகிறது.

தான் விரும்பிய பெண் தன்னோடு உள்ள தொடர்பை தவிர்த்த போது மன சோர்வு ஏற்பட்டு விடுகிறது. அதே வேளையில் அவனுடைய வாழ்க்கையின் ஆர்வத்தையும் இழக்கச் செய்துவிடுகிறது. எதிர்காலத்தில் எப்படி வாழவேண்டும் என்று மனக் கோட்டை கட்டினானோ அது தகர்ந்து விட்டதால் தான் அவனும் தற்கொலை செய்து கொள்ள முயலுகிறான்.

இயேசுவின் சீடர் யூதாஸ்காரியோத்து கூட, பெண் ஒருவர் விலையுயர்ந்த தைலத்தை இயேசு கிறிஸ்துவின் பாதத்தில் பூசிய போது ஏன் இந்த வீண் செலவு என்று மிரட்டினான். இதை விற்று ஏழைகளுக்குக் கொடுக்கலாமே என்று கெஞ்சிப் பார்க்கிறான். பணம் கிடைத்தால் கொஞ்சத்தை திருடி கொள்ளலாம்! ஆனால் அதற்கு இயேசு கிறிஸ்து மசியவில்லை!! எனவே மிஞ்சி பார்க்கிறான், இயேசு கிறிஸ்துவை பணத்திற்காக முத்தம் கொடுக்க!!! மூன்றரை வருடங்கள் பழகினோமே இந்த ஈனச் செயலை செய்யலாமா என்று அவன் யோசிக்கவில்லை. தன் விருப்பம் நிறைவேறாத போது இந்த இயேசு கிறிஸ்து இருப்பதினால் தனக்கு பயனில்லை என்ற முடிவுக்கு வருகிறான். எனவே யூதாஸ் முத்தம் கொடுத்து இயேசு கிறிஸ்துவுக்கு முடிவு கட்ட விரும்பினான். இன்று சிலர் முகத்தில் acid ஊற்றி முடிவு கட்டுகின்றனர். ஆனால் ஸ்வேதாவிற்கு கத்தியால் முடிவு கட்டினான். இன்றும் பல இயேசுகள் பலவிதமாக மரணிக்கின்றனர்! யூதாஸ்களை கண்டுபிடிப்பது தான் கடினம்!!

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி