நினைவாற்றல் வேண்டுமா?


மனோ கல்லூரிக்குள் கால் எடுத்து வைத்த போதே உள்ளமெல்லாம் பட்டாம் பூச்சி போல் சுதந்திரமாக பறப்பதை உணர்ந்தான். இது வரையிலும் ஆசிரியர்களும், பெற்றோர்களும் படி படி என்று திணித்தது முடிந்துப் போன உணர்வு மேலோங்கியது.

காலரை தூக்கி விட்டுக் கொண்டு, கையில் நாய் செயின் போன்ற ஒன்றை சுற்றிக் கொண்டு, காளானைப் போன்று தலை முடியைத் திருத்தி, வண்ணப் பறவையைப் போன்று தலையில் சாயம் தீட்டி, கிழிந்த உயரக பேண்ட்யைப் போட்டுக்கொண்டு, சட்டை பொத்தானை மேலே சரியாக பூட்டாமல் திறந்துப் போட்டுக் கொண்டு, கழுத்தில் தாலிச்செயின் போன்று உருட்டு சங்கிலியைப் போட்டுக்கொண்டு, வாயில் எதையோ தினிக்கிறானே என்ன என்று மூன்றாம் ஆண்டு மாணவன் ரோஜரை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் மனோ.

எதேட்சையாக ரோஜரின் பார்வையில் சிக்கிக் கொண்டான் மனோ. ஹலோ Bro என்ன First year ஆ? பார்த்தாலே தெரியுதே, Bro இது இவன் என்னத்தை உதட்டுக்குள் திணிக்கிறானே என்று தானே நினைக்கிற! வேறு ஒன்னும் இல்ல, இதை உதட்டுக்குள்ள வைச்சிக்கிட்டா Concentration Power அப்படி இருக்கும் !! வைச்சிப்பாருங்க bro, சின்ன வயசு, சொல்லிக் கொடுங்கப்பா !!!

இல்லண்ணேன்! எனக்கு பழக்கம் இல்லை என்னை விட்டு விடுங்க என்று நகண்டான் மனோ! மனதுக்குள் எதை எதையெல்லாம் நினைத்தவனுக்கு முதல் நாள் அனுபவமே வித்தியாசமாக இருந்தது. நாமும் கொஞ்சம் வைத்துப்பார்த்தால் தான் என்ன? எல்லாவற்றையும் அனுபவித்துப் பார்த்திர வேண்டியது தான், களவையும் கற்று மறக்க வேண்டுமே என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்.

மாலை வேளை பஸ் foot boardல் தொங்கிக் கொண்டு ஜாலியாக அரட்டையடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

வீட்டிற்குள் யாரோ வந்திருப்பார்கள் போலத் தெரிந்துக் கொண்டு மெதுவாக வீட்டிற்குள் நுழைந்தான் மனோ. மாமாவைப் பார்த்ததும் உற்சாகத்துடன் மாமா எப்படி இருக்கிறீங்க என்று கையைப் பிடித்தான்.

மாமாவோ நல்லா இருக்கறேன் என்று தலையை மட்டும் அசைத்தார். பழைய புன்னகையைக் காணவில்லை. வாயில் ஏதோ புண் போன்று தெரிந்தது...ஏதோ பிரச்சனைப் போல என்பதை சொல்லாமல் புரிந்துக் கொண்டான்.

Dressயை  மாற்றும் படி அறைக்குள் நுழைய முயன்ற போது உள்ளே அம்மாவும், அத்தையும் பேசுகிற குரல் மெதுவாகக் கேட்டது, "நான் எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன், பான்பராக், குட்காவைப் பயன்படுத்தாதேயுங்கள் என்று, அந்த மனுஷன் கேட்கவே இல்லை. இப்பொழுது உதட்டில் துவாரம் விழுந்தது போல் பெரிய புண்ணாகிவிட்டது. கேன்சர் நல்லா பரவிவிட்டது என்று டாக்டர் கூறிவிட்டார். மகள் திருமணத்தைக் கூட பார்க்க முடியுமோ என்று இப்பொழுது ஏங்குகிறார்".

மனோவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது போல் இருந்தது. மேலெல்லாம் அப்படியே வியர்த்தது. பான்பராக், குட்கா போன்ற போதைப் பொருட்களை உட்கொண்டால் புற்றுநோய் வரும் என்பது எங்கேயோ படித்தது நியாபகத்திற்கு வந்துப் போனது.

நமது நாட்டில் சுமார் 1 கோடியே 86 லட்சத்து 44 ஆயிரம் பேர் போதை பொருட்கள் மற்றும் மாத்திரைகளைப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் 1 லட்சத்து 54 ஆயிரம் பேர் இதற்கு அடிமையாக உள்ளனர்.

மதுவுக்கு அடிமையானவர்கள் 15 கோடியே 1 லட்சத்து 16 ஆயிரம் பேர் இந்தியாவில் உள்ளனர் என்றும், தமிழகத்தைப் பொறுத்தவரை 90 லட்சம் பேர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

நம்நாட்டில் கஞ்சாவைப் பயன்படுத்துவது 2 கோடியே 90 லட்சம் பேர்.  இதில் தமிழகத்தில் 1 லட்சத்து 4 ஆயிரம் பேர்.

கஞ்சாவை, குட்காவை, பான்பராக்கை பயன்படுத்துவதால் concentration power கூடுகிறதா, மகிழ்ச்சி பெருகுகிறதா என்றால் இல்லை, துன்பம் தான் பெருகுகிறது. குறிப்பாக நரம்புத்தளர்ச்சி, நினைவாற்றல் குறைதல் தான் ஏற்படும்.

ஏன் இவை உடலுக்கு தீங்கு இழைக்கின்றன என்பதை மனநல மருத்துவர் சிவபாலன் அவர்கள் குறிப்பிடும் போது, பான்பராக், குட்கா போன்றவைகள் பாக்குத்தூள், பதப்படுத்தப்பட்ட புகையிலை, பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கப்படும் கிளாட்சு அமிலம், சாயப்பட்டறைகளில் பயன்படுத்தப்படும் கேச்சல் கெமிக்கல், மண்ணெண்ணெய், சுண்ணாம்பு, பேக்கிங் சோடா ஆகியவை தான் குட்காவுக்கான மூலப்பொருட்கள் என்கிறார். இவ்வாறு தாயாரிக்கப்படுவதால் புற்றுநோய் மனிதனுக்கு வருகிறது. இந்தியா தான் உலகளவில் 4 வது இடத்தில் அதாவது 25% புற்று நோயாளிகளைக் கொண்ட நாடாக விளங்கி வருகிறது.   இந்தியாவில் 6 மணி நேரத்திற்கு ஒருவர் வாய்ப் புண் புற்று நோயால் இறக்கிறார் என்பது எவ்வளவு வேதனையான விஷயம்.

"உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே" (பிரச 5:6). "சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார்" (பிர 3:17). நாம் செய்கிற செயல்கள், பழக்கங்கள் என்பது நம்மை முற்றிலுமாக கெடுக்கிறதாக இருக்குமானால் அதைச் செய்யக் கூடாது. நமது உடல் இறைவன் தங்கும் ஆலயம். எந்த ஒரு மனிதனும் போதைப் பொருளை உட்கொண்டே பிறக்கவில்லை. இவைகள் இடையிலே வந்தவை, ஆகவே இடையிலே இதை விட்டு விட்டால் உங்கள் பிள்ளைகளின் நல் வாழ்வை கண்டு சந்தோஷப்படலாம், இல்லையென்றால் கண்ணீர் வடிக்கும் நாட்கள் வரும்!   தூக்கி வீசிவிடுங்கள் தவறான பழக்க வழக்கங்களை!! கர்த்தர் உங்களுக்கு பெலன் கொடுப்பார்!!!

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி