மக்கு குழந்தையா? கவலையை விடுங்கள்


ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் பாடங்களை அப்படியே கிளிப்பிள்ளைப் போல் திரும்ப சொல்கிறவர்கள் அறிவாளிகள் என்றும், மறந்து விடுகிற பிள்ளைகள் மக்குகள் என்று ஆசிரியர்கள் வகைப்படுத்துகின்றனர். இந்த மக்குகள் கூட்டத்தில் தான் ஐன்ஸ்டீன் என்ற சிறுவன் இருந்தான்.

Brilliant ஆக இருந்தால் நண்பர்கள் சூழ்வார்கள். ஆனால் மக்கு ஐன்ஸ்டீன் உடன் எந்த நண்பர்களும் விளையாடக் கூட அவனை சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். ஒதுக்கப்பட்ட சிறுவன் ஐன்ஸ்டீன் தனிமையில் கற்பனை உலகத்தில் பறந்துக் கொண்டிருந்தான்.

Sir, ஒளிக்கதிர் மேல் உட்கார்ந்து பயணம் செய்தால் எப்படி இருக்கும் என்று கேட்க, ஆசிரியர் அட முட்டாளே எவனாவது ஒளிக்கதிர் மேல் உட்காரமுடியுமா? கொஞ்சமாவது லாஜிக்காக சிந்திக்கிறாயா? என்று தலையில் குட்டி உட்காரவைத்து விட்டனர்.

ஆனால் அவரது (Theory of Relativity) சார்பு நிலைக் கோட்பாடு என்ற தத்துவம் அவரை உலகில் சிறந்த அறிஞராக வெளிப்படுத்தியது. அவரிடம் எப்படி இளம் வயதிலே (வயது 26) இப்படிப்பட்ட கண்டுபிடிப்பை உங்களால் தரமுடிந்தது என்று கேட்டனர். அதற்கு அவர் “இந்த கண்டுபிடிப்புக்கு காரணம் என் இளம் வயதில் மந்தமாக இருந்த அறிவின் மூலமாகத்தான், இந்த மகத்தான கண்டுபிடிப்பை நான் கண்டுபிடிக்க முடிந்தது” என்றார்.

ஐன்ஸ்டீன் ஜெர்மனியில் பிறந்த யூதர். எனவே பல எதிர்ப்புகள் மத்தியில் உருவானவர். ஐன்ஸ்டீன் இரண்டு உலக யுத்தங்களைக் கண்டவர். அவரது விஞ்ஞான சூத்திரம் தான் அணுகுண்டை தயாரிக்கும் வழியை கற்றுக்கொடுத்தது. அதற்காக வருந்தினார்.   தொடர்ந்து அவர் கூறும் போது இனி ஒரு உலக யுத்தம் ஏற்படுமானால் ஒரு நாடு மற்ற நாட்டை அழிப்பதோடு மட்டும் நிற்காமல், விஞ்ஞானத்தினால் உருவான எல்லாம் அழிந்து மனிதன் காட்டுவாசியைப் போல் மீண்டும் காணப்படுவான் என்று திட்டவட்டமாக கூறினார்.

ஒரு மக்கு குழந்தை எப்படி விஞ்ஞான உலகத்தின் உச்சத்தில் வர முடிந்தது என்பது எல்லாருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இதை எப்படியாவது தெரிந்துக் கொள்ள ஆசைப்பட்டார் Dr. தாமஸ் ஹார்வே. 1955ம் ஆண்டு ஐன்ஸ்டீன் இறந்த போது அவரது, உடலை பிரேத பரிசோதனை செய்ய பிரின்ஸ்டன் மருத்துவமனை (Princeton Hospital) வந்த போது Pathologist ஆக பணிபுரிந்த Dr. தாமஸ் ஹார்வே அவரது மூளையை எடுத்து பாரமால்டி ஹைடு (Formaldehyde) என்ற திரவத்திற்குள் பத்திரமாக ஆய்வு செய்ய வைத்துக் கொண்டார்.

1980ம் வருடம் ஆராய்ச்சியின் முடிவை வெளியிட்டார். மூளை வளர்ச்சி என்பது மரபு வழியாக (Genetic) வருவது அல்ல. ஒரு குழந்தை வளரும் போது அனுபவிக்கிற உணர்ச்சிகளும், அனுபவங்களும் மூளையின்  வளர்ச்சியில் முக்கிய பங்கை எடுத்துக் கொள்ளுகிறது என்று கூறினார்.

திருமறையில் யோசேப்பு ஒரு செல்லப்பிள்ளையாக வீட்டிற்குள்ளே வலம் வரும் வரையிலும் அவன் பெரியவனாக, அறிவுள்ளவனாக மாற முடியவில்லை. இறைவன் அவனை போத்திபார் வீட்டிலும், பின்பு சிறைச்சாலையிலும் பல்வேறு அனுபவங்களைக் கொடுக்கிறார். இறுதியில் எகிப்து நாட்டை காப்பாற்றும் மிகப்பெரிய உணவுக்கிடங்குளை உருவாக்கும் சிந்தனையை முன்னெடுத்து வைத்து பார்வோனை பரவசப்படுத்தினான். இறுதியில் நாட்டின் பிரதம மந்திரியாக மாறிவிடுகிறான். 

உங்கள் குழந்தைகளைப் பார்த்து நீ ஒரு மக்கு ஒன்றுக்கும் உதவ மாட்டாய் என்று அவமானப்படுத்தாதிருங்கள். அவர்களுக்குள்ளும் அளப்பெரிய ஆற்றல் புதைந்து இருக்கிறது. நல்ல சூழல்களில் பிள்ளைகள் வளருவதற்கு மட்டும் உதவுவதற்கு பாருங்கள். இறைவன் உங்கள் பிள்ளைகளைக் கொண்டு சிறந்த காரியங்களை செய்வதற்கு திட்டம் வைத்துள்ளார்.

ஐன்ஸ்டீன் தன்னுடைய அறிவு உலகை அழிப்பதற்கு பயன்படுத்தப்பட்டதற்காக வருத்தப்பட்டார். ஆனால் தாமஸ் ஆல்வா எடிசன் தன் கண்டுபிடிப்புகளைக் குறித்து குறிப்பிடும் போது, 'என் படைப்புகள் உலகை அழிப்பதற்கு அல்ல, ஆக்கப்பூர்வமானவை' என்று மனம் மகிழ்ந்தார். உங்கள் பிள்ளைகள் உலகில் ஆக்கபூர்வமான செயல்களுக்கு திரும்ப, பயன்படுத்த ஆண்டவர் தாமே உதவிப் புரிவார்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு :  நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி