மனித இனம் அழிந்துவிடும்

குடும்ப கட்டுப்பாடு பற்றியதான கருத்தரங்கு இந்தியாவில் 1952ம் ஆண்டு நடைபெற்றது. அந்த கருத்தரங்கில் அப்பொழுது துணை ஜனாதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணன் பேசியது மக்களை மிகவும் சிந்திக்க வைத்தது.

குழந்தைகளை, பெண்களின் கருப்பைக்கு கடவுள் அனுப்பி வைக்கிறார். அவர் விருப்பத்தில் நாம் எப்படி குறுக்கிட முடியும் என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் அவர்களுக்கு எனது பதில் என்னவென்றால் குழந்தைகளை நமக்குக் கொடுக்கும் கடவுள் நமக்கு அறிவையும் கொடுத்திருக்கிறார். எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகளை நாம் மனதில் கொண்டு நமது அறிவை நாம் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் மனித இனமே அழிய நேரிடும் என்று கூறினார்.  

அன்று குடும்ப கட்டுப்பாட்டை வலியுறுத்தி பேசினார் துணை ஜனாதிபதி. ஆனால் இன்று இயற்கை முழுவதுமாக இரசாயணத்தினால் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. சமையலுக்கு பயன்படுத்தப்படும் வெண்டைக்காய் கூட பளபளப்பாக சந்தையில் வந்து இறங்கியதும், மக்கள் fresh ஆக இருக்கிறதே என்று அள்ளிக் கொண்டு போய் சமையல் செய்கின்றனர். ஆனால் அந்த வெண்டைக்காய் பறிப்பதற்கு முன்தினம் உயிரைப் பறிக்கக் கூடிய விஷம் நிறைந்த மருந்துகளை அடித்து அவ்வளவு பளபளப்பாக மாற்றியுள்ளனர் என்பது எத்தனை பேருக்குத்  தெரியப் போகிறது.

சாப்பிடுகிற அரிசியை முன்பு இயற்கையான உரங்களை அடிப்படையாகக் கொண்டு விவசாயம் செய்தனர். இன்று நடுவையில் இருந்து அறுவடை வரையிலும் உயிரை எடுக்கும் இரசாயண மருந்திலேயே வளர்ந்து முதிர்ந்து நம் வீட்டிற்கு வருகிறது. அரிசியாக மாற்றும் போது கூட புழு, பூச்சிப் பிடிக்கக் கூடாது என்பதற்கும் விஷத்தை தான் கலந்து விடுகின்றனர்.

சாப்பிடுகிற ஆப்பிள் பழத்தை எடுத்தால் ஒரு மாதம் ஆனாலும் fresh ஆக காட்சியளிப்பது எப்படி? இவ்வாறு ஒவ்வொரு பழவகைகளும் பழுக்க வைப்பதற்கு கூட இரசாயனத்தின் வாசனையிலேயே மாற்றம் நடைபெறுகிறது.

இன்று குடும்ப கட்டுப்பாடு பண்ண மருத்துவமனைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. நாமே நம்மை சிறுமைப்படுத்திக் கொள்ளுகிறோம். முக்கு மூலைகளிலெல்லாம் பணக்காரர்களால் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள மருத்துவமனைகள் பெருகி வருகிறது. மனித இனம் என்பது தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் சூழல் பெருகி வருகிறது.

சிக்கன் 65, burger, pasta, pizza என்று மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்ள உணவு வழியாக வழிகளைத் தேடிக் கொண்டுள்ளான். மனிதன் செல்லும் வழி தவறானது என்று கைகளை காட்டி மறைத்து நின்றாலும் அவனைத் தள்ளி விட்டு விட்டு, நீ ஒரு கிறுக்கன், பைத்தியக்காரன், நாகரிகமற்ற கிராமத்தான் என்று எள்ளி நகையாடி மனிதன் தன்னைத் தானே அழித்துக் கொள்ளவே விரும்புகிறான்.

"நீங்கள் பலுகி பெருகி, பூமியை நிரப்புங்கள்" என்றார் ஆண்டவர் (ஆதியாகமம் 1:28; 9:1). ஆனால் இன்று பலுகவும் முடியாது பெருகவும் முடியாது. முன்பு "நாம் இருவர் நமக்கு இருவர்" அதன் பின்பு "நாம் இருவர் நமக்கு ஒருவர்" இப்பொழுது "நாம் இருவர் நமக்கு ஏன் மற்றொருவர்" என்று திசை திரும்பிக் கொண்டிருக்கிறது. பெற்றோர் கட்டிய வீட்டில் குடியிருப்பதற்கு பிள்ளைகள் இல்லாத ஒரு காலம் வரும். கட்டிய வீடும், குடியிருக்கும் கிராமமும் குருங்காடாக மாறும் சூழல் விரைவில் வர நேரிடலாம். புற்று நோயால் மக்கள் இனமே புதைந்து போகும் காலம் வந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. திரும்புவோம் இயற்கைக்கு! இறைவன் கொடுத்த இயற்கை செல்வத்தை இரசாயணத்தினால் அழிக்காமல் பாதுகாப்போம்! தீமை விளைவிக்கும் உணவுகளை எட்டிப் பார்க்காமல் சென்று விட பழகிக் கொள்வோம்!!!

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி