Rock and Roll

Rock and Roll நடனத்தின் மூலம் உலகத்திலுள்ள இளைஞர்களையெல்லாம் கட்டி தன் பக்கமாக இழுத்தவர் எல்விஸ் பிரெஸ்லீ. 1935 ம் ஆண்டு பிறந்தவர். 20ம் நூற்றாண்டில் இசை பதிவுகளிலேயும், திரைப்படங்களிலேயும், மேடை மற்றும் தொலைக்காட்சிகளிலும் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்தவர். தன்னுடைய இனிய குரல் வளத்தால் பல விருதுகளை சொந்தமாக்கிக் கொண்டவர்.

21 ஆம் வயதில் நடன கலை உலகிற்குள் அடியெடுத்து வைத்தவர் இவர். 1977 ம் ஆண்டிற்குள்ளாக நூறு கோடி டாலர்களை மலைப் போல் குவித்தார். 'rock and rollன்' மன்னன் என்று புகழப்பட்டார். பாடகராகவும், நடிகராகவும், இசை கலைகளில் வல்லவராகவும் வலம் வந்தார். Guitar, pianoவை இசைப்பதில் ஈடு இணையற்றவராக காணப்பட்டார்.

அவருடைய இனிய குரல் வளத்தால் கிறிஸ்தவ இசை, புறஸ் இசை என்று பல்வேறு வடிவங்களில் பாடல்களைப் பாடி உள்ளங்களை கொள்ளையாக்கி கொண்டார்.

இளம் வயதிலே புகழின் உச்சிக்கு சென்ற அவர் போதைப் பொருள்களுக்கு அடிமையானார். வணிக ரீதியாக வெற்றி பெற்ற அவர் போதை மாத்திரைகளுக்கு அடிமையாகி தள்ளாட ஆரம்பித்தார்.

"செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளத்தைலத்தை நாறிக் கெட்டுப் போகப் பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர் பெற்றவனை சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும்" (பிரசங்கி 10:1) என்று திருமறைக் கூறுவது போல தவறான பழக்க வழக்கத்தால் உலகில் நிலைத்து நிற்க முடியாமல் மிக குறைந்த வயதில், அதாவது 42 வது வயதில் 1977 ஆகஸ்ட் 16ல் அஸ்தமானார்.   

பணம் இளம் வயதில் இளைஞர்கள் கையில் சிக்கிக் கொள்ளும் போது, போதைப் பொருள்களை எடுத்து சந்தோஷத்தை அனுபவித்தால் என்ன? என்ற எண்ணம் உருவாகிறது. பணக்கார இளைஞர்களை இப்படி போதை என்ற குழிக்குள் தள்ளி ஆதாயம் பெற பல நண்பர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேல்தட்டு வர்க்கத்தினர்கள் குறிப்பிட்ட வயதுக்குப் பின் தங்கள் பிள்ளைகளை தங்கள் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர். அவர்கள் கைகளில் தேவைக்கு அதிகமான பணம் புழங்குவதால் நண்பர்கள் வட்டம் அவர்களை தாங்கள் விரும்பியபடியெல்லாம் அலைக்கழிக்க ஆரம்பிக்கின்றனர். நண்பர்களுக்கு மத்தியில் தன்னை ஒரு தாதா போல் காட்டிக் கொள்வதற்காக போதைப் பொருள்களைப் பயன்படுத்தி உயர்த்திக் காட்ட விரும்புகின்றனர். ஆனால் நாளடைவில் போதைப் பொருள் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

பெற்றோர்கள் இப்படிப்பட்ட சூழல்களுக்குள் பிள்ளைகள் சென்று விடாதபடிக்கு நல்ல உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகள் வெளியே நண்பர்களுடன் அல்லது கல்லூரிக்குச் சென்று வரும் போது அவர்கள் பகிர்ந்துக் கொள்ளும் தகவல்களை காதுக் கொடுத்துக் கேட்டு அவர்களோடு பேசி மகிழ வேண்டும். பிள்ளைகள் தடம் மாறி விடக் கூடும் என்ற சூழல் ஏற்பட்டால் பிள்ளைகளுக்கு பக்குவமாக எடுத்துக் கூறவேண்டும். சில வேளைகளில் பெண் பிள்ளைகளும் போதைப் பொருள்களுக்கு ஆளாவதைத் தடுப்பதில் பெற்றோரின் குறிப்பாக அம்மாக்களின் பங்கு அதிகம் இருக்கிறது. அவர்கள் தங்கள் குடும்பத்தின் நெறி முறைகளையும், நல் ஒழுக்கத்தைப் பற்றி தனிப்பட்ட விதத்தில் பேசி மூளையில் பதிய வைக்க முற்பட வேண்டும்.

போதைக்குள் மாட்டிக் கொண்டால் அதிலிருந்து விடுதலைப் பெறுவது என்பது மிகவும் கஷ்டமான காரியம். அதில் மாட்டிக் கொள்ளாமல் அதை எப்படி தவிர்க்க வேண்டும் என்று பேச வேண்டும். அதை விட முக்கியமானது தங்கள் பிள்ளைகளுக்கு முன் மாதிரிகளாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர் கெளதம் தாஸ் என்ற மனநல மருத்துவர் கூறுகிறார்.

இந்த தின தியான செய்தியை உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள். 

எழுதியவர் : அருள்திரு.ஸ்டீபன் முல்லர்
புத்தகம் :  என் ரூபவதியே
வெளியீடு : நல் ஆலோசனை திருப்பணி ஊழியங்கள், CSI திருநெல்வேலி திருமண்டலம் 

உங்கள் பிள்ளைகளுக்கு திருமணத்திற்கு ஏற்றதுணையை எளிதாக கண்டுபிடிக்க இன்றே பதிவு செய்யுங்கள் www.TdtaChristianMatrimony.Com/register-profile.php

Comments

Popular posts from this blog

நற்கிரியை செய்யும் பெண்

பொறுமையுள்ள பொறுப்புள்ள மனைவி

புத்தியுள்ள மனைவி