உண்மையை உரக்க சொல்வோம்
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLDyous97kaSTP6hL6SLz_n8bwistZPBvET2zatVU-IFp0cxJBLPZiajIE4CFG-vQJ5waBZM6PYB1IqGqBr7zKXB2P1y2jlIttp5ER4VV6_5fShjnzz8cNU4K6W9l8fhxbZl44myu3i1W4M9vqMZcEMIlISp5ATIYuOm18NIx5qf9xTW_ODtkXB6GMUi_f/w640-h426/istockphoto-1355162946-612x612.jpg)
துவக்க காலங்களில் பூமியானது தட்டையாக இருக்கிறது என்று நம்பி வந்தனர் . ஆனால் பூமி ஒரு பந்து போல கோள வடிவத்தில் இருக்கிறது என்பதனை கோபர்னிகஸ் மற்றும் கலிலியோ போன்றோர்கள் உலகிற்கு அறிவித்தனர் . இதனைக் கேட்ட மக்கள் அவர்களைப் பார்த்து சிரித்தனர் . பூமி உருண்டையாக இருந்தால் மனிதர்கள் எப்படி உலகில் வாழ முடியும் என்ற கேள்வியை எழுப்பினர் . பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டும் , சூரியனைச் சுற்றியும் வருகிறது என்பது கேட்பவர்களை வியப்பிற்குள்ளாக்கியது . இதனை உலகிற்கு கூறியவர்களை உலகம் பகடி பண்ணியது . உச்சகட்டமாக கலிலியோவை சிறைக்கும் தள்ளியது . பூமி சுற்றினால் மனிதன் எப்படி உலகில் செயல்பட முடியும் என்று கேலிப்பேசி கேள்வியை எழுப்பினர் . ஆனால் தங்களது கண்டுபிடிப்புகளை மக்களுக்கு சரியாக விளக்க முயன்றனர் . உலகம் ஏற்றுக் கொள்ள முடியாத புதுமையை நிரூபித்துக் காட்டுவதற்கு காலம் எடுத்துக் கொண்டது . ஆனால் உண்மையை மறைக்கவில்லை . தெளிவுபட எடுத்துக் கூறி வரலாற்றில் நிரந்தர இடத்தைப் பிடித்துக் கொண்டனர் . இன்று தொடர்ந்து நடக