Posts

Showing posts from January, 2021

நாங்க Robot இல்லங்க

Image
          பிள்ளைகள் exam என்றவுடன் பயந்து போய் மம்மி எனக்கு வயிறு வலிக்கிறது, தலைவலியாக உள்ளது, மயக்கம் வருவது போல் உள்ளது என்று கூறுகிறீர்களா? எனக்குப் பயமாக உள்ளது நான் exam எழுதப் போகவில்லை என்று கூறுகிறீர்களா? எனக்குப் படித்தது எல்லாம் மறந்துவிட்டது நான் fail  ஆகிவிடுவேன் என்று புலம்புகிறார்களா? நான் டாக்டர்க்கு படிப்பதற்கு லாயக்கற்றவள்? எனக்கு அந்த திறமையெல்லாம் கிடையாது என்று புலம்புகிறார்களா? என்னை நீங்க படி படி என்று சொன்னா நான் வீட்டை விட்டு எங்காவது ஓடிப்போய் விடுவேன் என்று சண்டையிடுகிறார்களா?  நீங்க எனக்கு அம்மாவும் இல்ல, அப்பாவும் இல்ல எப்பப் பார்த்தாலும் என்ன படிக்கச் சொல்லி நச்சரித்துக் கொண்டு இருந்தா?      இப்படியெல்லாம் பிள்ளைகள் புலம்புகிறார்கள் என்றால் பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.       பிள்ளைகள் அதிகமாக மார்க் வாங்க வேண்டும் என்று நினைப்பது தவறல்ல.  அதற்காக பிள்ளைகளை exam-க்கு ஆயத்தப்படுத்துகிறேன் என்று "பார்த்துக்க என் மானத்தை  வாங்கிராதே நான் உன் மார்க்க பார்த்துதான் தலைநிமிர்ந்து நடக்கணும், இல்லன்னா எங்க ஆபீஸ்ல தலை காட்ட முடியாது" என்று உங

பொன்னான காலங்கள்

Image
          மாணவர்கள் மத்தியில் உள்ள நட்பு என்பது மிகவும் ஆழமானது.  இதனைப் பிரிக்க இயலாது.  ஒருவர் மற்றவருக்காகத் தங்கள் உயிரைக்  கொடுக்கும் அளவிற்குத் துணிந்து நிற்பர்.  ஒருவர் கஷ்டத்தில் மற்றவர்கள் பங்கெடுப்பது மற்றவர்கள் குடும்பத்தில் நடக்கும் இன்ப, துன்பக் காரியங்களிலே பங்கு கொள்வதும் அதிகமாக இருக்கும்.        மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரியிலிருந்து பிரிந்து செல்லும் போது வருத்தத்தோடு பிரிவு உபசார விழாவை நடத்துவர். Golden Days எது என்றால், அது கல்லூரி வாழ்க்கை என்றே பலர் கூறுவர். காரணம் அவ்வளவு சந்தோஷத்தை அனுபவித்து மகிழும் பருவம் தான் மாணவப் பருவம்.             NSS.,  scout, sports  என்று பல்வேறு விதங்களில்  மாணவர்கள் ஓன்று சேர்ந்து செயல்பட்டு வந்தது.  மகிழ்ச்சியையும், மனபலத்தையும் ஒற்றுமை உணர்வையும் ஊக்கப்படுத்தியது.  ஆனால் இன்றைய மாணவப் பருவத்தில் ஜாதி உணர்வு, தலைதூக்கி வருவது வருத்தத்தைக் கொடுத்து வருகிறது.  மாணவப் பருவத்தில் நல்ல நண்பர்களைச் சம்பாதிப்பதற்குப் பதில் எதிரிகளை சம்பாதித்து வருகின்றனர்.        என்ன மச்சான், என்ன Bro. என்று பழகி, மற்றவர் சாப்பாட்டை உண்டு, ஜாலியாகக்

எதிரும் புதிரும்

Image
     வாலிப தம்பி ஒருவர் மிக நேர்த்தியாக உடை அணிந்து மிகுந்த மகிழ்ச்சியோடு ஆலயத்திற்கு வந்திருந்தார்.  ஆராதனை முடிவுற்றதும் அவருடைய பேண்ட் மிக அழகாகவும், அதிகமான பாக்கெட் உள்ளதாகவும் இருக்கிறதே என்று கூறினேன்.  எல்லா பொருட்களையும் நீ பத்திரமாக பாக்கெட்டில் வைத்துக் கொள்ளலாம்.  எதையும் கையில் தூக்கிச் செல்ல வேண்டிய அவசியம் என்று நான் கூறியதும் விழுந்து விழுந்து சிரித்தான்.  உங்களுக்கு கூட பிடிச்சிருக்கு ஆனா எங்க அம்மா அப்பாவிற்குப் பிடிக்கல என்ன சொல்ல என்று வருந்திக் கொண்டான்.  சற்று தொலைவில் அவன் பெற்றோர்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.  அவர்களிடத்திற்குப் போய் உங்கள் மகன் மிக அழகான பேண்ட் அணிந்திருக்கானே என்று கூறினேன்.        அந்த காண்ட்ராவிய ஏன் கேட்கறீங்க. அழகான பேண்ட் அவங்க அப்பா வாங்கிக்கொடுத்ததை வேண்டாம் என்று கூறிவிட்டு இதை எடுத்து வைத்துக் கொண்டான்.  அதனால் அவங்க அப்பாவும், மகனும் பேசமாட்டாங்க  என்று வருத்தத்தோடு பையனின் அம்மா கூறினார்.  பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையேயான உறவு நிலைகளில் பல இடங்களில் விரிசல் காணப்படுகிறது.  பையனின்        fashion           என்று எடுத்துக் கொள்ள

சீசீ இந்தப் பழம் புளிக்கும்

Image
     இளம் பெண் ஒருவருக்கு வரன்பார்த்துக் கொண்டிருந்தனர்.  பல வரன்கள் வந்தும் வரதட்சணையால் திருமணம் தள்ளிக் கொண்டே போனது.  உறவினரின் வீட்டுத் திருமணவைபவத்திற்குச் சென்ற போது இந்த இளம்பெண் ஒரு பணக்காரவீட்டாருக்கு முன் தென்பட்டார்.  இரண்டே நாளில் வீடு தேடிவரன் வந்தது.  நகை, ரொக்கம் எதுபற்றியும் கவலைப்பட வேண்டாம்.  பெண்ணைத் தந்தாலே போதும் என்றனர் அந்த பணக்காரவீட்டார்.   கைகால் புரியாமல் பெண் வீட்டார் இருந்தார்கள்.  சொத்து, சுகம், கார், பங்களா என்று ஏகப்பட்ட வசதிகள்.  மகள் பெரிய பணக்காரியாக வாழப்போகிறாள் என்று ஊர் முழுவதும் தம்பட்டம் அடித்தனர் பெற்றோர்.  திருமணம் மிகச் சிறப்பாக மாப்பிள்ளை வீட்டாரின் செலவிலேயே நடைபெற்றது.      நாட்கள் சில ஓடின, பெற்றோர் தங்கள் மகளைப்பார்க்க ஒரு நாள் போயிருந்தனர்.  அங்கே அவர்களை மதிப்பாக நடத்தவில்லை.  மருவீட்டிற்கு மருமகனை அழைத்ததற்கு நல்ல மெத்தை இல்லை வீட்டில் ஏ.சி. இல்லை என்று கூறி, வர மறுத்துவிட்டார்.  மருமகனை மருமகனாகப் பார்க்க முடியவில்லை கலெக்டரிடம் பழகினதுபோல் பழக வேண்டிய சூழல் ஏற்பட்டது.  இந்த பெண்ணுக்கு உதவிச்செய்யவோ, அவளுக்காகப் பரிந்து பேசவோ அங்கு

திருமணம் அவசியமா?

Image
அன்று பாலிய திருமணம் நடைபெற்றது. இன்று காலம் தாழ்த்திய திருமணம் நடைபெறுகிறது.          ஒரு வீட்டிற்கு ஜெபிக்கச் சென்றிருந்தேன். ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினார்.  அனைவரும் 30 வயதிலிருந்து 40 வயது உடைய பெண் மற்றும் ஆண் பிள்ளைகள்.  யாருக்கெல்லாம் திருமணமாகி விட்டது என்று கேட்டேன்.  அதற்கு ஒருவருக்கும் திருமணமாகவில்லை.  ஜெபியுங்கள்.  கர்த்தர் காட்டுவார் என்றனர்.  எனக்கு ஒரு பெரிய கேள்வி, நன்கு படித்த பிள்ளைகள், ஆனால் அந்தப் பெற்றோர் தங்களுக்கு ஆண்டவர் சிறந்த மருமக்களைத் தருவார் என்று காத்திருப்பது ஆச்சரியமாக இருந்தது. படிப்பிற்காக வருடங்களை செலவழித்து விட்டனர் என்பதை உரையாடல் மூலம் தெரிந்துக் கொண்டேன்.   திருமணம் என்பது வாழ்விற்கு அவசியம்தானா என்ற கேள்வியை இளைஞர்கள், இளம் பெண்கள் பலர் எழுப்புகின்றனர்.  கலாச்சார மாற்றத்தினால்,  கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதினால் அதிவேகமாக காலங்கள் சென்றுவிடுகின்றன.  வேலைக்கேற்ற கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கும், திருப்தியடைவதற்குமே நாட்கள் சென்று விடுகின்றன.  இதனால் திருமணத்தைப் பற்றி யோசிப்பதற்கே வயது 27-யைத் தாண்டிவிடுகிறது.  இது ஆண்களுக்குப் பிரச்

சேட்டிங்கா சீட்டிங்கா! [Chatting or Cheating]

Image
       இணையதளம் தகவல்களை உலகஅளவில் பரிமாறிக்கொள்ள உதவுகிற மிகப்பெரிய  சக்தியாகும்.  இது கடந்த நூற்றாண்டில் சிந்தித்துப் பார்க்க இயலாத மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கியுள்ளது.  ஒரு மூலையில் சிறிய தொழில் செய்பவரும்  உலகத்திற்கு தம் பணியைச் சொல்வதற்கு ஏற்ற ஊடகம், அதே வேளையில் பல்வேறு தகவல்களை உட்கார்ந்த இடத்திலேயே பெற்றுக் கொள்ளக்கூடிய நுலகமாகவும் காட்சியளிக்கிறது.  தனிமையில் வாடுகிறவர்கள், நண்பர்கள் இல்லாமல் இருப்பவர்கள் Social Media உலகத்திற்குச் சென்றால் நேரம் தெரியாமலே பேசிக்கொண்டிருக்க முடிகிறது.  தொலைபேசி செலவையும் நமக்கு மிச்சமாக்குகிறது. இப்படிப்பட்ட நன்மைகள் இருப்பினும் டீன் ஏஜ் மக்கள் படு குஷியாக உள்ளே போய் கலக்கிவிட்டுப் பின் வெளியேற கரை தெரியாமல் விளிக்கின்றனர்.  இதனைப் பற்றி தெளிவான முடிவெடுக்க வேண்டியது அவசியம்.  இணையதளமும் வசதியும்  இணையத்தில் செல்ல பல வழிகள் இன்று உள்ளன.  பல இடங்களில் பொது இணைய மையங்களில், பள்ளிகளில், நூலகங்களில் இணையதளத்தில் உலாவ வாய்ப்புள்ளது.  நண்பர்கள் வீடுகளிலுள்ள கணினியை பயன்படுத்தவும் வாய்ப்புள்ளது.  பிள்ளைகள் தங்கள் வீட்டிலேயே கல்வி சம்பந்தமான தகவல்க

மனிதனை மனிதனாக்குவோம்

Image
   பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் தனது மகளைப் பார்த்து நீ நமது குடும்பத்தில் மருத்துவராக வேண்டும்.  முதல் ரேங்க் எடுப்பதில் கருத்தாக இருக்க வேண்டும் என்றனர் பெற்றோர்.  பள்ளியிலும் "மதிப்பெண் ஒன்றுதான் வாழ்க்கை" என்பதை எழுதாத சட்டமாக வைத்திருக்கின்றனர்.  பெற்றோரின் விருப்பப்படியே மிகவும் கஷ்டப்பட்டு அந்த மாணவி முதல் இடத்தை தக்கவைத்து இருந்தான்.  இறுதி வருடத்து தேர்வில் மதிப்பெண் குறைந்து விட்டது.  ஆசிரியர்கள் பல வார்த்தைகளால் திட்டினார்.  வீட்டிற்கு மாலையில் வந்தவள் தன்பெற்றோர் இனிப் பேசப்போவதை நினைத்துப் பயந்து வேதனைப்பட்டாள்.  படிப்பின் மீது பெரிய வெறுப்பு வந்தது.   தற்கொலைக்கு  முயன்றாள்.  ஆனால் பெற்றோர் தீடீரென்று பார்த்து அவளை காப்பாற்ற முற்பட்டனர்.  ஏன்  இதை செய்தாய் என்று கேட்ட போது, நீங்க திட்டுவீங்க என்று பயந்து இறந்திடலாம் என்று முடிவு செய்தேன் என்று கூறி கண்களை மூடினாள்.    அன்புக்குரியோரே கல்விகற்கும் மாணவர்களின் திறமைகளை உணராமல் மதிப்பெண் பெறுவதையே குறிக்கோளாய் வலியுறுத்தி மாணவப் பருவத்தையே கசப்பாக மாற்றுவது நியாயமா? இன்று பள்ளிச்சூழலும், கற்பிக்கும் முறைகளும், தி

என் செல்லமே

Image
  பெற்றோர்களின் வாழ்க்கை பிள்ளைகளின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.  ஒரு ஆம்புலன்ஸ் போகும் போது அதனுடைய சத்தத்தைக்கேட்டுப் பேருந்தில் சென்றுகொண்டிருக்கிற ஒரு குழந்தை கண்களை மூடிக்கொண்டிருந்தாள்.  என்ன செய்கிறாய் என்று கேட்ட பொழுது அந்த ஆம்புலன்ஸில் போகிறவர்களுக்காக ஜெபிக்கிறேன் என்றாள்.  ஆம்புலன்சில் போகிறது யார் என்றேன்.  யார் என்று தெரியாது.  யாராயிருந்தாலும் பிழைக்க வேண்டும் என்று ஜெபிக்க அம்மா சொல்லியிருக்கிறார்கள் என்றாள்.  நம் பிள்ளைகள் நம் கைகளில் உள்ள களிமண் போன்றவர்கள்.  அவர்களை நாம் விரும்புகிறபடி குறிப்பிட்ட காலங்களில் நல்ல பழக்கங்களை அவர்கள் மனதில் பதிக்கவைக்க  முடியும்.  இது அவர்கள் வாழ்க்கையில் நல்ல குணாதிசயங்களைப் பிரதிபலிக்கிறவைகளாக மாறும். திருடன் வீட்டில் வளருகின்ற பிள்ளை, திருடனாக மாற வாய்ப்பு அதிகம் உள்ளது.  புகைபிடிப்பவர்களின் பிள்ளைகள் புகைபிடிப்பவர்களாக எளிதாக மாறலாம்.  குடிக்கிறவர்களின் பிள்ளைகள் அதிகபட்சம் குடிக்கிறவர்களாக மாற இயலும்.    காரணம் நாம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுப்பதைக்காட்டிலும் நமது வாழ்க்கையின் செயல்பாடுகளே அவர்கள் வாழ்க்கையில் பெர

உள்ளம் கொள்ளை போகுதே

Image
  ஐயா நான் பெண்ணைத் திருமணம் செய்யவில்லை, பிசாசை திருமணம் செய்துள்ளேன், ஆகையால் என் வாழ்க்கையே கசப்பாக உள்ளது என்று கத்தினான் திருமணமான ஒரு இளம் ஆண். பதிலுக்கு அந்தப் பெண் நான் ஏமாந்து போய் விட்டேன் என்று கத்தினாள். வாழ்க்கையில் அனைவரும் விரும்பினது போன்று வாழ்வு அமைந்து விடுகிறதா என்ற கேள்வியை எழுப்பினாலோ அல்லது நாம் நினைத்த அத்தனை குணமும் எதிர்பார்ப்பும் நமது துணையிடம் இருக்கிறதா என்றாலோ இல்லை என்பதே நமது பதிலாகும். அப்படி என்றால் சேர்ந்து வாழ இயலாதா? சேர்ந்து வாழ்கிறவர்கள் எல்லாரும் அவர்கள் விரும்பியபடி அமைந்துவிட்டதால் தான் சந்தோஷமாக வாழ்கிறார்களா என்றால் இல்லை. வாழ்க்கையை நரகம் ஆக்குவதும் பரலோகம் போன்று மகிழ்ச்சியாக வைப்பதும் நம் கையிலேதான் உள்ளது. ஒருவர் மற்றோருவரிடம் "நமது மனைவியை விட்டுக்கொடுப்பது, தட்டிக்கொடுத்து எது நல்லது" என்றார். அதற்கு மற்றவர், "தட்டிக் கேட்டுப் பாருங்கள் பதிலுக்கு முறைத்தால் விட்டுக் கொடுத்து விடுங்கள்" என்றார். இப்படிப்பட்ட சுழலில் வாழ்க்கையை எப்படி கொண்டு செல்வது என்பதற்கு சில குறிப்புகள். ஒரே குறிக்கோளுடன் வாழ வேண்டும்

குணசாலியான பெண்ணும், அவர் பிள்ளைகளும்

Image
  என் மகள் என்னையே சுற்றி சுற்றி வருவாள், நான் செல்லாத இடத்திற்கு அவள் செல்லவே மாட்டாள்.  ஒரு நாள் கூட என்னை விட்டுப் பிரிந்து இருந்த பழக்கம் இல்லை.  அவள் விரும்பினபடியெல்லாம் விதவிதமான உணவைச் சமைத்துக் கொடுப்பேன்.  100 ரூபாய் கேட்டால்  200 ரூபாய் கொடுத்து பள்ளிக்கு அனுப்புவேன். நம்மையே சுற்றி வரும் இவள் எப்படித்தான் வாழப் போகிறாளோ என்று கவலைப்பட்டேன்.  ஆனால் சில நாட்களாகவே அவள் போக்கில் மாற்றம் இருக்கிறது.        என் அரவணைப்பை அவள் விரும்ப வில்லை.  என்னைக் காட்டிலும் நண்பர்களுடன் செல்போனில் அரட்டை அடிப்பதையே  விரும்புகிறாள்.  அவள் படிக்கும் அறைக்குள் போனால் வேண்டா வெறுப்பாகப் பார்க்கிறாள்.  வீட்டில் இருப்பதைக் காட்டிலும் வெளியே தங்கினால் ஜாலியாக இருக்கலாமே என்று எங்களைப் புறக்கணிக்கிறாள்.  எங்கள் மனம் கஷ்டப்படுகிறது.  எங்கள்  மகளா இப்படிப் பேசுகிறாள். நடந்து கொள்கிறாள் என்று எங்களுக்கே ஆச்சரியமாக இருக்கிறது என்றார் திருமதி. ஷாலினி.       இளம் வயதில் இருந்து டீன் ஏஜ்க்குள் நுழையும் போது பிள்ளைகளுக்குள் ஏற்படும் மாற்றங்கள் என்பது வித்தியாசமானது.  அதனை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். 

குணசாலியான பெண் தன் வாழ்வை மோட்சமாக்குகிறாள்

Image
  பரலோகத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை போதகர் அடிக்கடி பிரசங்கத்தில் கூறிவந்தார்.  போதகரும் ஒரு நாள் மரித்தார்,  பிரசங்கத்தைக் கேட்ட சபையாரும் மரித்தார்கள்.  மரித்த சபையார் பரலோகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.  வழியிலே நரகம் இருந்தது.  அங்கு உற்றுப் பார்த்தனர். அங்கு போதகர் நின்று கனி தரும் மரங்களை நட்டுக் கொண்டிருந்தார்.  உடனே சபையார் போதகரைப் பார்த்து நரகத்தில் நின்று கொண்டிருப்பது ஏன் என்று கேட்டனர்.  போதகர் கூறினார்.  "நான் நரகத்தை மோட்சமாக மாற்ற கனி தரும் செடிகளை நட்டுக் கொண்டிருக்கிறேன்" என்றார்.        அன்பிற்குரியோரே குடும்பவாழ்வில் நாம் அடியெடுத்து வைத்ததும் தொட்டதெல்லாம் துலங்கும் என்றோ, துன்பமே அல்லாத பரலோகம் என்றோ அடியெடுத்து வைக்க முடியாது.  குணசாலியான பெண் ஒரு குடும்பத்தில் காலடி எடுத்து வைக்கும் போது நரகமாய் காணப்பட்டாலும்,  அதை மோட்சமாக மாற்றிக்கொள்ள முடியும்.  ஏனென்றால் பலர் மற்றவர்களை சரிப்படுத்துகிறேன் என்று குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிற படியால் தங்கள் வாழ்க்கையையே நரகமாக மாற்றிக் கொள்ளுகிறார்கள்.  பிறரைக் குற்றம் பார்க்கிறவர்கள் தங்கள் உள்ளத்தில் பொ