Posts

Showing posts from 2021

கிரஸா சரஸா

Image
சமீபத்தில் ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சி வீடியோவாக வைரலாகி கொண்டிருந்தது. அந்த பள்ளி மாணவர்கள் கஞ்சாவை பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியையிடம் தர்க்கம் செய்யவும், அவர்களுடைய கைப்பையை எடுத்து வீசுவதும், chairயைக் கொண்டு தாக்குவதும், துப்பட்டாவை இழுத்து வீசுவதுமாக இருந்தது. இறுதியாக பள்ளி ஆசிரியை மாணவர்களால் தான் தாக்கப்பட்டதைக்  குறித்து complaint கொடுத்துள்ளதும் வெளியானது. பள்ளிக்கூட மாணவர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்தும் அளவிற்கு போய்விட்டதா என்று நீங்கள் நினைக்கலாம். இதற்கு ஆதாரமாக தினகரன் செய்திதாளில் 27-12-21ல் ஒரு செய்தி வெளியானது. “திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்யும் வகையில் பதுக்கி வைத்திருந்த 33 கிலோ போதை சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது” என. மாணவர்களை இன்று போதைக்குள் தள்ளுவதற்கான செயல்பாடுகள் மறைமுகமாக நடக்கின்றன. அதோடு மட்டுமல்லாமல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய 120 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இளம் வயதுள்ளவர்களை குறிவைத்தே பெட்டிக் கட

திறவுகோல் எங்கே?

Image
ஒரு புத்தக கடைக்கு அடிக்கடி நான் சென்று வருவது உண்டு. அவ்வாறு சென்று வரும்போதெல்லாம் சுமார் 18 வயது மதிக்க கூடிய இளைஞன் ஒரு பையில் முறுக்கு வைத்துக் கொண்டு, sir இதை வாங்குங்கள் எனக்கு பள்ளியில் fees கட்ட வேண்டும் என்று சொல்லுவான். சிலர் வாங்கிக் கொள்வார்கள், சிலர் கண்டுகொள்ளாமல் போவார்கள். ஆனால் எப்போதுமே அதை அவன் வாடிக்கையாக்கி கொண்டே இருப்பான். சில வேளைகளில் பெற்றோருடைய சூழல் நிமித்தமாக சில சிறுவர்கள் கஷ்டப்படுகிற நிலைக்குள் தள்ளப்படுகிறார்கள். சிலர் இப்படி சொல்லியே அனுதாபத்தை தேடி பிழைப்பை நடத்துகிறார்கள். இவ்வாறு செய்வதால் யாருக்கு உதவி செய்யவேண்டும் யார் தேவை உள்ளவர்கள் என்பதை கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது. கஷ்டங்களுக்கு மத்தியிலும் வாழ்க்கையில் முன்னேற வேண்டுமென்று யார் ஒருவர் மூச்சு காற்றை உள்வாங்குகிறார்களோ அவர்கள் கஷ்டங்கள், அவமானங்கள், ஏழ்மை என எல்லாவற்றையும் எருவாக்கி அழகிய விருட்சங்களாக பரந்து, விரிந்து, வளர்ந்து விடுகின்றனர். ஒரு சிறுவன் பிறக்கும்போதே ஒரு காதை இழந்து, முகம் கோணலாக பிறந்தான். ஏழு வயதாகும் போதே அவனும் அவன் சகோதரன் பிராங்கும், அவன் தாயும்  தந்தையிடமிருந்து பி

தள்ளுதல் சீட்டின் விலை என்ன?

Image
துபாய் மன்னருக்கும் அவரது மனைவியும் 2004ல் திருமணம் நடைப்பெற்றது. ஏக சந்தோஷத்தோடு வாழ்ந்தார்கள். அந்த அம்மா ஜோர்டான் மன்னரின் மகள். மிகவும் பணக்கார குடும்பம். பணம் இருந்தால் உலகத்தில் வேறு எதுவுமே தேவையில்லை என்று நினைப்போம். அது தவறு என்பதற்கு இந்த தம்பதியினர் தான் உதாரணமாக உள்ளனர். பணம் இருந்தாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருப்பதற்கு குணம் தான் அவசியம். குடும்பத்தில் சந்தோஷம் இருக்க வேண்டுமானால் மனதளவில் ஒத்துப் போகுதலும், இசைவாக நடந்துக் கொள்ளுதலும், பிறரின் மனதைப் புரிந்துக் கொள்வதும், மற்றவர்களை மகிழ்ச்சியாக வைப்பதும் போன்றவைகள் இன்றியமையாதது. குடும்பம், பிள்ளைகள் என்று வரும்போது அவர்களுடன் நேரம் செலவிடுவதும், மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொள்ளுதலும் இன்றியமையாதது. அவ்வாறு இல்லாமல் இயந்திரம் போல் வாழ்ந்தால் சிக்கல்களைத்தான் சந்திக்க வேண்டியதுள்ளது. துபாய் மன்னரின் மனைவி ஹயா மூலம் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால் மன்னர் விவாகரத்து செய்து விட்டார். ஆனால் ஹயா சரி போனால் போகட்டும் என்று விடாமல் ஜீவனாம்சம் கோரி இங்கிலாந்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய, இங்கிலாந்து நீதிமன்ற வரலாற்ற

Relax Please

Image
ஓய்வு நாள் பாடசாலையில் இரண்டு சிறு பிள்ளைகள் சண்டைப் போட்டுக் கொண்டிருந்தது. அப்பொழுது 8 வயது இருக்கும் அந்த சலோமி என்ற சிறுமி மற்ற சிறுமியைப் பார்த்து என்னிடம் பேசாதே, நான் ரொம்பவும் stress ஆகி இருக்கிறேன், என்னை tension ஆக்காதே என்று கத்தினாள். இதைக் கேட்டப் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு பெரிய வார்த்தைகளெல்லாம் எப்படி பிள்ளைகள் எளிதாக பயன்படுத்துகிறார்களே என்று மனதில் நினைத்து ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தேன். மதியம் 11 மணிக்கு திருமறைத் தேர்வு ஆரம்பமாக இருந்தது. பிள்ளைகளின் பெற்றோர் ஆலயத்திற்கு வெளிப்புறத்தில் நின்றார்கள். பிள்ளைகளெல்லாம் உள்ளே ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்பொழுது ஒரு தாய் தன்னுடைய பிள்ளையிடம் கடைசி நிமிடம் வரை  Bible யை கொடுத்து படிக்கச் சொல்லி கேள்விக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அந்த தாயைப் பார்த்தேன் மிகவும் tension ஆக இருந்தார்கள். தன் மகள் தான் முதல் மதிப்பெண் பெற வேண்டும். பக்கத்து வீட்டு அனனியாவைக் காட்டிலும் முந்தி விட வேண்டும் என்று எச்சரித்து அனுப்பினார்கள். அது வேறு யாருமல்ல சலோமியின் அம்மாதான். இன்றும் முழுகுடும்பமும் டென்சனாகவே அலைந்

திருமணத்தில் ஒரு 'கிக்'

Image
நம் இந்திய நாட்டில் பெரும்பாலோனார் பெற்றோர் வழியாகவே துணையைக் கண்டுபிடிக்கின்றனர். வெளிநாடுகளில் முற்றிலும் மாற்றாக விரும்பியே திருமணத்தைச் செய்துக் கொள்ளுகின்றனர். விரும்பி திருமணம் செய்துக் கொண்டவர்களானாலும், பெற்றோர் முடித்து வைக்கிற திருமணங்களானாலும் வாழ்நாள் முழுவதும் இணைந்து வாழ்பவர்களும் உண்டு. இடையிலே சீ சீ என்ன வாழ்க்கை இது என்று காய் சொல்லிவிட்டு பிரிந்து செல்கிறவர்களும் உண்டு. இவைகளுக்கு அடிப்படை காரணமென்ன? யாக்கோபு அழகான பெண் ராகேலை நேசித்து அவளை திருமணம் செய்துக் கொள்ள ஒப்பந்தம் செய்து ஏழு வருடம் ஆடுகளை மேய்க்கிறான். ஆனால் கூச்சப் பார்வையுடைய லேயாள் அவன் விரும்பாமலே வாழ்க்கைக்குள் நுழைகிறாள். ஆனால் இறுதி வரையிலும் இரண்டு பெண்களோடும் balance பண்ணி வாழ்க்கையை நடத்தினான். ராகேல் யாக்கோபின் பார்வையில் அழகானவளாகக் காணப்பட்டது மட்டுமன்றி அவளை அதிகமாக நேசித்தான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெறும் அழகை மாத்திரம் வாழ்வில் தூக்கிப் பிடிக்காமல் அன்பு, நேசம் என்பது தொடர்ந்து வந்துக் கொண்டே இருந்தது. இந்த அன்பு, நேசம் என்பது அழகு மறைந்தாலும் வாழ்வில் உயர்த்தி பிடிக்கும் போது மட்டும்

வெற்றியின் இரகசியம்

Image
  இளைஞன் ஒருவனை பேருந்தில் சந்தித்தேன். பேசிக்கொண்டே போகும் போது உங்கள் எதிர்கால திட்டம் என்ன என்றேன்? சிரித்துக் கொண்டு பெண் போன்று ரீத் வைத்திருந்ததை சரி செய்துக் கொண்டான். காதில் போட்டிருந்த கம்மலும் இருக்கிறதா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டு வந்து… sir, என்று இழுத்துக் கொண்டே யோசித்தான். கையில் நாய்க்கு சங்கிலி போடுவது போல் ஒரு சங்கிலி தொங்கியது, மற்றொன்று கழுத்தில் தொங்கியது, அதில் இயேசு நாதரும் தொங்கிக் கொண்டிருந்தார். பேருந்து ஒரு கல்லூரி நிறுத்தத்தில் நின்றது. அந்த கல்லூரி வளாக சுற்று சுவரில் ஒரு திருக்குறள் எழுதப்பட்டிருந்தது.   வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றவை எல்லாம் பிற. அதைப் பார்த்து, "தம்பி இதன் அர்த்தம் என்னத்தெரியுமா?” என்று கேட்டேன். அதற்கும் சிரித்துக் கொண்டே "என்ன சார் செய்ய புரியாத தமிழில் எழுதிப் போட்டு இருக்கிறாங்க.   கம்பியூட்டர் உலகில் இதுவெல்லாம் முக்கியமா? என்ன" என்றான். நானும் ஒரு நமட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே “மனதில் உறுதி தான் செயலின் உறுதியாகும். மற்றதெல்லாம் சரியில்லை” என்பது தான் விளக்கம் என்று சுஜாதா அவர்களின் விளக

பெரிய மூளை

Image
  அறிவுலகில் படித்தவர்கள் குடும்பங்களில் இருந்து தான் அறிஞர்கள் தோன்ற கூடும் என்றும் உயர் சாதியில் பிறந்தவர்கள் மத்தியில் இருந்து வருபவர்கள் தான் உயர்வான பதவிகளுக்கு ஏற்புடையவர்கள் என்ற சிந்தனையும் பலருடைய உள்ளங்களில் பதிவாகி இருக்கின்றன. கலெக்டர், நீதிபதிகள், அரசின் உயர் மட்டப் பொறுப்புள்ளவர்கள் போன்றவர்களுக்கு தகுதியானவர்கள் நாங்கள் தான் என்று சிலர் மற்றவர்களை மட்டம் தட்டி வைக்கின்றனர். ஆனால் சூழல்கள் வாய்க்கும் போது எல்லா நிலையில் உள்ளவர்களும் உயர்வான பதவிகளில் அலங்கரிக்க முடியும். இப்பொழுது பெரிய கூடுகைகள் நடக்கும் போது இலைப்போட்டு வரிசையாக சாப்பிட உட்காரவைப்பதில்லை. மாறாக ஆளுக்கொரு தட்டை கையில் கொடுத்து உங்களுக்கு எந்த உணவு எவ்வளவு வேண்டுமோ அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் என்று விட்டு விடுகின்றனர். நாம் நமக்கு விருப்பமானதை எடுத்து விளாசி விடுகிறோம். மற்றொருவர் அவருக்கு பிடித்ததை மட்டும் எடுத்து பந்தாடி விடுகிறார். நாம் எத்தனை உணவுகள் இருந்தாலும் பிடித்ததை எடுப்பது போல தான் நமது மூளைக்குள் பல காரியங்கள் சென்றாலும் சிலவற்றை மட்டும் தான் எடுத்துக் கொள்ளுகிறது. மற்றதை சீ சீ இந்த பழம் புள

Knighthood

Image
ஆசிரியர் ஒருவர் மனம் உடைந்து தன் பணியில் சலிப்புடன் புலம்பினார் . மாணவர்களுக்காகவே வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணித்து இரவு , பகலாக உழைத்தாலும் நமது பணியின் தியாகத்தைப் புரிந்துக் கொள்வதில்லை மாணவர்கள் . அதே வேளையில் மாணவர்களை என் பிள்ளைகளை போல் நினைத்து சீர்திருத்தி சரியான பாதையில் அவர்களை வழிநடத்தினால் சிறை கைதியாக மாற வேண்டிய சூழல் வந்து விடும் போல இருக்கிறதே என்று மனம் வெதும்பினார் . எத்தனை கடுமையான சூழல்கள் வந்தாலும் ஆசிரியர்கள் பிள்ளைகளை ஒழுக்கத்திலும் , உயர் மட்டத்திற்கு அழைத்துச் செல்வதற்காகவும் சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர் . அவர்கள் செயல்கள் காலங்கள் கடந்தாலும் வரலாற்றில் இருந்து மறக்க முடியாததாக மாறி விடுகிறது .             உலகம் சுற்றி சுற்றி வந்தாலும் சர் சந்திரசேகர வெங்கட்ராமன் அவர்களின் பேராசிரிய பணி விடை இன்றும் மறக்கப்பட முடியாததாகவே இருக்கிறது . இவர் அரசு துறையில் நிதி கணக்கராக இருந்து , பின்னால் கல்கத்தாப் பல்கலை கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக 1917 ல் பணியை ஏற்றவர் . அத்தோடு மன