Posts

Showing posts from March, 2021

பிறர் தலையீடு

Image
குடும்ப வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் உதவியாக இருந்தால் வாழ்க்கை மிகவும் இன்பமாக அமையும்.  ஆனால் தவறான நபர் வாழ்க்கையில் தலையிட்டால் வாழ்க்கையே தலைகீழாக மாறிவிடும். ஒரு இளம்பெண், திருமணம் முடிந்ததும் மிகுந்த மகிழ்ச்சியோடு கணவன் வீட்டிற்குச் சென்றாள்.  வீட்டில் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.  காரணம் முழுக்குடும்பமும் மாமியார் மற்றும் மாமியாரின் தங்கை ஆகியோரால் ஆட்டுவிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.  அணுவேனும் மாமியாரின் சொல்லின்றி அசைய முடியாது.  வீட்டிற்கு வந்த மருமகள் அவள் சொந்தக் காரியங்கள் எதைச் செய்தாலும் மாமியாரின் அனுமதியோடு தான் செய்ய வேண்டும்.  சுதந்திரப் பறவையாக வாழ்ந்த பெண்ணுக்கு இது பிடிக்கவில்லை.  உடனே தன் பெற்றோருக்குச் செய்தியைச் சொல்ல, அந்த அன்பிற்குரிய பெற்றோர் உடனே தங்கள் மகளைத் தங்களோடு வைத்துக் கொண்டார்கள்.  தனித்து வாழ்வதற்கான பேச்சுக்க இடமில்லை என்று மாமியார் மறுக்க, நீதிமன்ற வாசலை மிதிக்கும் இழிவான நிலை. திருமணம் தங்கள் பிள்ளைகளின் நன்மைக்காக நடந்த்துகிறோமா அல்லது நமது சமுதாய அந்தஸ்துக்காக நடத்துகிறோமா என்ற கேள்வி எழுகிறது.  பிள்ளைகளின் விருப்பு, வெறுப்புகளை விட மாமியார

பொறுப்புணர்வு

Image
இனிதான வாழ்க்கையில் தூங்கி வழியும் ஆண்களால் குடும்பத்தில் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது.  அதைப் போன்று வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும்போது அதைக்கண்டு பயந்து ஓடிப்போகிற ஆண்களால் குடும்பத்தை வழி நடத்த இயலாது.  அப்படிப்பட்ட ஆண்களை மனைவிமார் மதிப்பதுமில்லை. ஒரு குடும்பத்தில் கடன்பாராம் அதிகமாக வந்தது.  கடன்காரர்கள் வந்து நெருங்கினர்.  உடனே அந்த ஆண்மகன் வீட்டை விட்டு மனைவியிடம் சொல்லாமலே ஓடி விட்டார்.  துன்பத்திலும், இன்பத்திலும், வாழ்விலும், தாழ்விலும், உன்னை விட்டுப் பிரியமாட்டேன் என்பது மறந்துவிட்டது.  தான் பிழைத்தால் போதும் என்ற மனநிலையுள்ள ஆண்களைப் பெண்கள் நல்ல கணவனாக நினைப்பதில்லை.  இருப்பினும் இப்படிப்பட்ட ஆண்களையும், பெண்கள் மன்னித்து வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதை ஆபிரகாமின் வாழ்விலிருந்து புரிந்து கொள்ளமுடியும்.  ஆதி.20:2இல் ஆபிரகாம் தன் மனைவியை சகோதரி என்று கூறுவது, சிக்கல் வந்தபோது தன் மனைவியை விற்றுப்போட்டது போன்ற சூழலை ஏற்படுத்துகிறது.  இருப்பினும் சாராள் தன் கணவனை மதித்து, சேர்ந்து வாழ விரும்புகிறாள்.  ஆதிகாலம் முதல் ஆண்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று துன்பங்களை எதிர்கொண்டு

தன்னம்பிக்கை

Image
இளம் வயது ஆண் ஒருவர், தன் வீட்டு நிலையை எண்ணி புலம்பிக் கொண்டிருந்தார்.  மனைவி தன்னை மதிப்பதில்லை என்றும் பிறருக்கே முக்கியத்துவம் கொடுப்பதாகவும் வேதனைப்பட்டார்.  இன்று அநேக ஆண்கள் குடும்பத்தில் மதிப்பை இழந்ததாகக் கருதி வருந்துவதற்குச் சில காரணங்கள் உள்ளன.  அதனைப் புரிந்து நிவிர்த்தி செய்தால் பிரச்சனைகளைத் தீர்க்க இயலும். அநேக ஆண்கள் தன்னம்பிக்கை இல்லாமல் வாழ்வது தான் பிரச்சனைக்குக் காரணம்.  எந்த ஒரு காரியத்திலும் தானாக முடிவெடுக்க இயலாமல் தன் பெற்றோரையோ, மனைவியையோ முற்றிலும் சார்ந்திருப்பது.  இதற்கு அவர்கள் வளர்ந்த சூழல் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.  Over care Parents என்று குறிப்பிடப்படும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு 20 வயதானாலும், 6வயது பையனைப் போன்றே அனைத்துக் காரியங்களையும் செய்வார்கள்.  எதைச் செய்தாலும் தன்னுடைய உத்தரவின்றி செய்யக் கூடாது என்று கட்டளையிடும் பெற்றோரும் உண்டு.  சிறிய பிரச்சினைகளானாலும் அதனைப் பேசி முடிப்பதற்கு பெற்றோரே முன்வருவர்.  இப்படி வளர்க்கப்படும் ஆண்கள் திருமணத்திற்குப் பின்னும் தன்னம்பிக்கையோடு ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்ய பெலன் அற்றவர்களாக மாறி வி

வருமுன் காக்க

Image
நன்கு படித்த, பணம் நிறைந்த குடும்பத்தில் ஒரு திருமணம் நடைபெற்றது.  மணமகனோ மிகவும் நல்லவர்.  நல்ல வேலை பார்ப்பவர்.  குடும்பமோ மிகவும் எளிமைப்பட்டது.  மணமகள் குடும்பம் பெரும் பணக்காரக் குடும்பம்.  திருமணத்தின் அத்தனைப் பொறுப்புகளையும் மணமகளின் வீட்டார் பொறுப்பெடுத்துக் கொண்டனர்.  மணமகள் வீட்டாருக்கு மிகவும் மகிழ்ச்சி.  விதவிதமான உணவுகள், ஆடம்பரமான செலவுகள் செய்யப்பட்டன.  படிப்பும், சம்பளமும் மணமகனுக்கும், மணமகளுக்கும் ஒத்துப் போனாலும் மனஅளவில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வும், தாழ்வு மனப்பான்மையும் சில நாட்களிலே வந்தது.  மணமகளின் ஆடம்பரச் செல்வைக் கிரகிக்க முடியாமல் அந்த ஆண் திணறினான்.  ஏதாவது சொன்னால் என்ன இது பிச்சைகாரத்தனமாக இருக்கிறது என்று ஒரே வார்த்தையில் கணவனின் வாயை மூடிவிடுவாள்.  சுதந்திரமாகப் பறந்த கிளி கூண்டுக்குள் அகப்பட்டது போன்று மணமகன் தாழ்வு மனப்பான்மையில் சிக்கித் தவித்தான். குடும்ப வாழ்வில் ஈடுபடுமுன், வரன் பார்க்கும்போதே குடும்பத்தின் அந்தஸ்தைப் பார்த்துக் கொள்ள வேண்டும்.  நாம் ஒரு குடும்பத்தில் மணமகனையோ, மனமகளையோ தேர்ந்தெடுக்கும்போது குடும்பத்தின் பொருளாதார நிலையைப் பற்றிய த

மகிழ்ச்சியான வாழ்க்கை

Image
இல்லற வாழ்க்கையில் இன்றியமையாதது எதுவெனில் உரையாடல். உரையாடல் எப்பொழுது தடைபடுகிறதோ, அப்பொழுது வாழ்க்கையில் சந்தேகம், மணமுறிவு போன்றவை ஏற்படும். கல்வி கற்ற ஒரு இளம் தம்பதியினர் இருந்தனர். மகிழ்ச்சியாக வாழ்க்கை வாழ்ந்தனர். வெளிநாடு செல்ல மணமகனுக்கு வாய்ப்பு வந்தது. திருமணமான அடுத்த மாதமே வெளிநாடு பறந்து விட்டார். தொலைபேசியில் மட்டுமே இருவரும் பேசிக் கொண்டனர். நாட்கள் செல்லச்  செல்ல பல்வேறு வேலையின் நிமித்தம் கணவன் தொலைபேசியில் பேசுவதை மறந்து விட்டார். மனைவிக்குக் கணவன் மீது ஒரு சரியான புரிந்து கொள்ளுதல் இல்லை. இந்த இடைவெளி மணமுறிவுக்கு வழிவகுத்தது. வெளிநாடு சென்று மகிழ்ச்சியாக வாழ பணம் சம்பாதிக்கப் போய், இறுதியில் பணம் வந்து சேர்ந்தது. மனைவி பறந்து போய்விட்டாள், மகிழ்ச்சி இல்லை. பணம் வாழ்க்கையாகுமா? வாழ்க்கை வாழ மட்டுமே பணம் தேவை!! வாழ்க்கையே பணமாகி விடாது. சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கோடு இருவரும் பணிக்குச் செல்லும் போது உரையாடல் சில வேளைகளில் முறிந்து விடுகிறது. software கம்பெனிகளில் பணிபுரிபவர்கள் ஏறக்குறைய பத்து மணி நேரம் வேலை செய்கின்றனர். சிலர் மூன்று ஷிப்ட் வேலைக்குச் செல்ல வேண்

சிரித்து வாழ வேண்டும்

Image
குடும்ப வாழ்க்கை சிறப்பாக அமைய கல்வியறிவு முழுவதுமாக உதவுவதில்லை. பல கண்டுபிடிப்புகள், பல திறமைகள் இருக்கும். இரவு பகலாக உழைத்து, கை நிறையச் சம்பாதிக்க இயலும். இத்தனை திறமைகளையும் மனதில் கொண்டு ஒரு மணமகனை அல்லது மணமகளைத் தேர்வு செய்கிறார்கள். ஆனால் இல்லற வாழ்க்கை என்ற பயிரானது நன்றாக வளர்ந்து பலன் கொடுக்க இயலாமல் போய் விடுகிறது. ஒரு மரத்தையோ, செடியையோ, பயிரையோ வைக்கும்போது பெரிய எதிர்பார்ப்பு உண்டு. அது பலன் கொடுக்காமல் போகும் போது நமக்கு மன வேதனையும், இழப்புகளும், வீண் செலவும் வருவது போன்று திருமண முறிவு ஏற்படும்போது, திருமண வாழ்வில் இணைந்தவர்களும், அவர்கள் குடும்பத்தினரும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களும் புது இன்னல்களை அடைகின்றனர். பள்ளிப் படிப்பிற்காக நல்ல பள்ளியைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பலரை பிடித்து ரெக்கமண்ட் வாங்கி, ஆட்டோவிலோ அல்லது வாகனத்திலோ அதிக சிரமம் எடுத்து அனுப்பி வைக்கிறோம். காரணம் நமது குழந்தை வருங்காலத்தில் சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெற வேண்டும் என்ற எண்ணம்தான். ஆனால் அக்குழந்தை அந்தப் பள்ளியில் படிக்க விரும்பாமலோ அல்லது பாடத்தில் கவனமின்றியோ இருக்குமானால் பெற்றோ

எப்பொழுதுதான் புரிந்து கொள்வது

Image
வயது முதிர்ந்த நீதிபதி அவர்கள் ஒரு சிறப்புரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது மற்றவர்களைப் புரிந்து கொள்வது என்பது கடினமாக இருக்கிறது என்று கூறிவிட்டு, நான் முப்பத்தைந்து வருடங்களாகக் குடும்ப வாழ்க்கையை நடந்த்துகிறேன். ஆனால் எனக்கே என் மனைவியைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் எந்த நேரத்தில் எனது கருத்தை ஏற்றுக் கொள்ளுவாள், எப்பொழுது அதே கருத்தைக் கேட்டு எரிச்சல் அடைவாள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை என்றார். குடும்ப வாழ்க்கையில் இருவர் சேர்ந்து வாழ்வது என்பது கஷ்டமான காரியம்தான், ஆனால் அதைவிடப் பிரிந்து வாழ்வது அதிகக் கஷ்டமானது. உலகில் கணவன் அல்லது மனைவியை உடனே புரிந்து வாழ முடியுமா என்றால் அது முடியாது. அடுத்தவர் மனநிலையை எவ்வளவு புரிந்திருந்தாலும், படித்திருந்தாலும் கடினமானதே. இயேசு கிறிஸ்துவும் தன்னைப் பற்றி மற்றவர்கள் எப்படிப் புரிந்திருக்கிறார்கள் என்று தமது சீடர்களிடம் கேட்டார். அப்பொழுது அவர்கள் சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்றும், சிலர் எலியா என்றும், சிலர் பழைய தீர்க்கரில் ஒருவர் உயிரோடு எழுந்து வந்துவிட்டார் என்றும் மக்கள் நம்புவதாகக் கூறுகின்றனர். பேதுரு மட்டும் மேசிய

பரம இரகசியம்

Image
இல்லற வாழ்க்கையில் பல மாற்றங்கள் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.   காரணம் 30 ஆண்டுகளுக்கு முன் இருந்த கலாச்சாரம் முற்றிலும் மாறிவிட்டது. முன்பு பெண்கள் படிப்பதும், வேலைக்குச் செல்வதும் குறைவு.   ஆனால் இப்பொழுது பெண்கள் வேலை பார்க்க வேண்டும் என்று ஆண்கள் விரும்புகின்றனர்.   மற்றும் பெண்கள் படித்திருப்பதால், தான் கட்டாயம் பணிக்குச் செல்வேன் என்று கூறுவதும் உண்டு.   பொருளாதார அளவில் கணவன், மனைவி இருவரும் சமமாக மாற பிரச்சினைகள் தலை தூக்குகின்றன.   யாருக்கும் யாரும் அடிமையில்லை. அதிக பணம் சம்பாதிப்பவர்கள், குறைவாக பணம் சம்பாதிப்பவர்களை அடக்க முயற்சிக்கின்றனர்.   இல்லையென்றால் அதிக பலம் உள்ளவர்கள், குறைவான பலமுள்ளவர்களை அடக்க முயற்சிக்கின்றனர்.   ஒருவர் அடங்கி மற்றவர் அதிகாரம் செலுத்துவதைப் பொறுத்துக் கொண்டால் பிரச்சினை வராது.   மறுக்கும் போது குடும்பத்தில் பிரச்சினைகள் வளரும். புதிதாக இரண்டு மாடுகள் வாங்கி ஒரு வண்டியில் இணைக்கும்போது இரண்டும் தனக்கு விருப்பமான படி ஓட ஆரம்பிக்கும்.   இவ்வாறு ஒவ்வொரு மாடும் தனது பலத்தைக் காண்பிப்பதால் அதிக சுமையை இழுக்க நேரிடும். வண்டியும் சரியாகச் செல

இனிக்கும் இல்லறம்

Image
ஆசிரியைகளின் அறையிலே சாப்பாட்டு வேளையில் உரையாடல் வளர ஆரம்பித்தது. யார் யாருடைய கணவன்மார் வீட்டு வேலைகளில் எப்படியெல்லாம் உதவி செய்கிறார்கள் என ஒவ்வொருவரும் தங்கள் கணவன் வழியாகக் குடும்பத்தில் ஏற்படும் சோகக் கதைகளையும், இனிமையான சம்பவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.ஒவ்வொருவர் மனதிலேயும் பல எண்ணங்கள் முளைக்க ஆரம்பித்தன. அடுத்தவரின் கணவன் அவ்வாறெல்லாம் உதவி செய்கிறாரே நமது கணவன் இவ்வாறு உதவி செய்வதில்லையே என்று மனதுக்குள்ளே பல்வேறு சிந்தனைகளுடன் வெளியேறினர். இருவர் பணியாற்றும் குடும்பங்களுக்கும், கணவன் மட்டும் பணியாற்றும் குடும்பங்களுக்கும் அல்லது மனைவி மட்டும் பணியாற்றும் குடும்பங்களுக்கும் பல்வேறு வித்தியாசங்கள் இருக்கின்றன. இருவர் பணியாற்றும் குடும்பமாக இருப்பின் இருவரின் பணியின் தன்மையைப் பொறுத்துத் தான் உதவிகள் செய்ய முடியும். ஒருவருக்குத் தலைவலி ஏற்படுகிறது என்றால் தலைவலிக்கு ஒரே ஒரு காரணம் மட்டும் இருப்பதில்லை. நமக்கு வரும் தலைவலி, ஒரு காரணத்தினால் இருக்கலாம். மற்றவர்களுக்கு மற்றொரு காரணத்தினால் தலைவலி ஏற்பட்டிருக்கும். ஆகவே நாம் சாப்பிடும் தலைவலி மாத்திரையை மற்றவர்களும் சாப்பிட ஆலோச

சேர்ந்து வாழ்தல்

Image
மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல என்று ஏற்ற துணையை உருவாக்கினார் ஆண்டவர். ஆனால் மனிதன் திருமணமாகி ஏற்ற துணையை அடைந்த பின்னரும் தனிமையாய் வாழ்ந்து கொண்டிருப்பது தான் இன்றைய அவலநிலை. பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு, குடும்பங்கள் அமைவதால் அன்பும், இணைந்து வாழ்வதில் ஏற்படும் இன்பநிலையும், குடும்பப் பாசப்பிணைப்பும் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. திருமணத்திற்கு முன் வரன் பார்க்கும் போதே மணமகன் வெளிநாட்டில் ஒரு லட்சம் மாதவருமானம் பெறுவதாக அறிந்து தனது மகள் மகிழ்ச்சியோடு வாழ்வாள் என்று திருமணம் செய்து கொடுக்கின்றனர்.   இப்படிப்பட்டவர்கள், தங்கள் மகளை நல்ல மணமகனுக்காகத் திருமணம் செய்து கொடுக்கவில்லை.   மணமகனின் பணத்திற்காகவே திருமணம் செய்து கொடுக்கின்றனர். வருடத்திற்கு ஒரு முறையோ, நான்கு வருடத்திற்கு ஒரு முறையோ வந்து செல்லும் மணமகன் எவ்வாறு தன் மனைவியைப் புரிந்து வாழ இயலும்?  பணம் வாழ்வின் மையமல்ல, அன்பு, பாசம், ஆதரவு இவையே வாழ்வில் முக்கியம் என்பது மறக்கடிக்கப்பட்டுள்ளது. ஏன் திருமணத்திற்குப் பின் சேர்ந்து வாழ்தல் அவசியமென்றால், சேர்ந்து வாழும்போதே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள இயலும். இல்லையென்ற

பெற்றோரின் சுயநலத்தில் பிள்ளைகளின் பங்கு

Image
திருமணத்திற்குப் பின் கணவன் மனைவியாக எங்கே, எப்படி வாழ்வது என்பது முக்கியமான ஓன்று.   அவர்கள் மணமகனின் பெற்றோருடன் சேர்ந்து வாழ்வதா அல்லது தனியாக வாழ்வதா என்ற கேள்வி அவர்கள் வாழ்வில் எழலாம்.   தனிக்குடித்தனம் சிறந்ததா அல்லது கூட்டுக் குடும்பம் சிறந்ததா என்று பட்டிமன்றம் கேட்டு, கேட்டு சிரித்த சமுதாயத்தில் சிக்கலில் இருந்து விடுபட இன்று வழி தெரியவில்லை.   இங்கு எது சிறப்பு என்று குறிப்பிடாமல் அவரவர் குடும்பச் சூழலுக்கேற்ப வாழ வேண்டும். பெற்றோரைப் புரிந்து வாழ வேண்டும் என்பதனை மட்டும் குறிப்பிடுகிறேன். இதற்கு பெரிய மனசு வேண்டும்.  எழுபத்தைந்து வயது நிரம்பிய தாயுடன் வாழும் மணமகன், திருமணமானதும் தனிக்குடித்தனமமே சிறந்தது என்று வயதான தாயைவிட்டு விட்டுத் தனியாக வாழச் செல்வது சிறப்பாகுமா? அல்லது எத்தனை வயதானாலும், நான் சாகும் வரை என் மகன் என் பேச்சைக் கேட்டே அவன் மனைவியை நடத்த வேண்டும் என்று கூறும் குடும்பம் சிறப்பாக அமையுமா? இளம் தம்பதியர், புதிதாகத் திருமணமாகப் போகிறவர்கள் சிந்திக்க வேண்டும்.  ஒரு நாள் "இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும், தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப

வேற்றுமையில் ஒற்றுமை

Image
ஆண்களும், பெண்களும் தங்களுடைய தனித்தன்மையில் முற்றிலும் வேறுபட்டவர்கள்.   ஆண்கள் தங்களைப் போன்றே பெண்களிடம் சில காரியங்களை, உணர்வுகளை எதிர்பார்க்கின்றனர்.   ஆனால் கிடைக்காமல் போவதால் வாழ்வில் கசப்புகளும் பிரச்சினைகளும் பெருகுகின்றன. நம்மைப் போலவே நமது வாழ்க்கைத் துணையும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. நாம் எதை விரும்புகிறோமோ அதைத்தான் நமது துணையும் விரும்ப வேண்டுமென நினைக்கிறோம். நாம் குறிப்பிட்ட காரியத்தில் எந்த உணர்வை, முடிவை எடுக்க விரும்புகிறோமோ அதைத்தான் தன் துணையும் உணர வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால் தான் குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படுகின்றன.   வாழ்க்கையில் ஒருவர் மீது மற்றொருவருக்குப் பல நல் எண்ணங்கள் இருக்கலாம், பல உதவிகள் செய்யலாம்.   கணவன், மனைவி இருவரும் அன்பில் வாழ்க்கையின் துவக்கத்தில் காணப்படலாம். ஆனால் அன்பு மறைவதற்கு முக்கியக் காரணம், தனது துணையின் விருப்பங்கள், வெறுப்புகள் எதிர்கால நோக்குகள் நம்மிலிருந்து வித்தியாசப்பட்டது என்ற உணர்வு வரும் போது அல்லது ஏற்றுக் கொள்ளும் போது மாத்திரமே அன்பு தொடரும். பெண்கள் தங்கள் வாழ்க்கையில் பெரிய பிரச்சினையாக நினைப்பத

மன்னிப்பு

Image
வாழ்வு இனிப்பதற்கான சில சான்றுகளைக் கொடுக்க விரும்புகிறேன். ஏனெனில் ஒளிரும் வாழ்க்கை சிந்தனையை வலுப்படுத்துவதற்காக இந்த ஒரு முயற்சி இது.   பத்துக் கட்டளை என்ற புத்தகத்தின் சாரத்தைத்  தழுவிக் கேள்விகள் அமைத்துள்ளேன். கீழே காணும் பகுதியில் எவை எல்லாம் ஆம் என்று நினைக்கிறீர்களோ அந்த அளவிற்கு நமது இல்லறம் இனிக்கிறது என்றும், இல்லையெனில் அந்த அளவிற்கு இல்லறம் கசக்கிறது என்றும் பொருள்.கிறிஸ்தவ இல்லறம் அன்பு, மன்னிப்பு, விட்டுக்கொடுத்தல்,ஒருவரை ஒருவர் தாங்குதல் என்பவற்றின் அடிப்படையில் தான் இயங்குகிறது. ஆண்களுக்கு 1. மன்னிக்க இயலாத தவற்றை மனைவி செய்தாலும் பிறர் முன்னிலையில் கடிந்து பேசாமல் இருப்பீர்களா? 2. திருமண நாள், மனைவியின் பிறந்த நாளை நினைவில் வைத்து, பரிசு வழங்குவீர்களா? 3. மனைவியின் தனிப்பட்ட செலவுக்கென்று பணம் கொடுப்பீர்களா? 4. ஓய்வு நேரத்தில் மனைவியைத் தட்டிக் கொடுத்துப் பேசி மகிழ்வீர்களா? 5. மனைவி கோபப்படும் நேரங்களில் பொறுமையுடன் சகித்துக்கொள்வீர்களா? 6. மனைவியைப் பிறருடன் ஒப்பிட்டுப் பேசுவீர்களா? 7. மனைவியின் திறமையைப் பாராட்டிப் பேசுவீர்களா? 8. மனைவியின் கருத்தை மதிப்பீர்களா? 9.

நம்பிக்கை

Image
இல்லற வாழ்க்கையில் புரிந்து கொள்ளுதல் எவ்வளவு முக்கியமோ அதே அளவு நம்பிக்கையும் மிக முக்கியமானது. இப்பகுதியில் குறிப்பிடப்படும் நம்பிக்கை என்பது, எனது இல்லற வாழ்க்கையில் என் துணைவியோடு/துணைவரோடு வாழ்வின் நிறைவு மட்டும் சேர்ந்து வாழ்வேன் என்பதாகும்.   குடும்பத்தில் எந்தப் பிரச்சினை வந்தாலும், பிரிந்து செல்வேன் என்ற மனப்பான்மை மட்டும் வரவில்லை என்றால் வாழ்க்கையில் ஒருபோதும் பிரிவினை ஏற்படாது.  ஒருவர் இரயில் பயணத்தைத் தொடரும்போது எந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டாரோ அந்த ஊர் வரும் வரையில் இரயிலில் உட்கார்ந்து கொள்ள வேண்டும்.   அப்பொழுது மட்டுமே அந்த நபர் எந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டாரோ அந்த ஊருக்குச் செல்ல முடியும்.   ஆனால் பலர் தங்கள் இரயிலில் பயணத்தைக் தொடர விரும்பாமல் பாதியிலேயே இறங்கி விடுகின்றனர்.   பின்னர் இரயிலை விட்டு விட்டோமே என்று தவிக்கின்றனர்.   சிலர் ஓடும் இரயிலில் இருந்து குதித்து விடுகின்றனர்.   இவர்கள் காயப்பட்டு வேதனைப்படுகின்றனர்.   சிலர் தன்னுடைய இரயிலை விட்டுவிட்டு மற்றோரு ரயிலில் ஏறி தடம் மாறிச் சென்று விடுகின்றனர்.  இவ்வாறு, தான் செல்ல வ

புரிந்து கொள்ளுதல்

Image
நான் சிறுவனாக இருந்தபோது எங்களது வீட்டின் முன், செடி ஒன்றை வளர்த்தோம்.   நாளடைவில் அது மிகப் பெரியதாக வளர்ந்து பூப்பூக்க ஆரம்பித்தது.  அது மாலை வேளையில் மலர ஆரம்பிக்கும்.   மாலை ஜெபத்திற்காக எங்களது வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயத்திற்கு வரும் மக்கள் அந்த மொட்டுக்கள் மலர்ந்து நறுமணம் வீசுவதை அனுபவித்து அதைப் பற்றிப் பேசிக் கொண்டே செல்வார்கள்.   மலர்கள் மலர்ந்த பின்னரே அதன் நறுமணத்தை நம்மால் உணர முடிகிறது.  அதுபோல இல்லற வாழ்க்கையில் கணவன், மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசும்போதுதான் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியும். இன்றைய இல்லற வாழ்க்கையில் புரிந்து கொள்ளுதல் சரியாக நிகழாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன.   இன்றைக்குத் திருமணத்திற்கு முன்பே, வேலை பார்க்கும் மணமகன், மணமகளாக இருக்க வேண்டுமென விரும்புகின்றனர்.   மக்களின் குறிக்கோளே பணம் தான்.  எவ்வளவு சம்பளம்? என்பதுதான் பலரின் எதிர்பார்ப்பு.   மனித வாழ்க்கையின் மகிழ்ச்சிக்கு உதவுவது பணமா?   அல்லது பணத்திற்கு வாழ்வில் முதல் இடமா? கணவனும், மனைவியும் ஒரு நாளில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உழைத்துச் சம்பாதிக்க வேண்டும்.   பொருளாதாரத்தி

இரகசியம் காத்தல்

Image
டிங்டாங்.... டிங்டாங்.... ஆலயமணி ஓசை பலமாக விழுகிறது.   மணியின் கயிற்றை மிகவும் உற்சாகமாக இழுத்து இழுத்து விடுகிறார் ஆலயப் பணியாளர் சுவிசேஷமுத்து.   சிறுபிள்ளைகள் கிறிஸ்துமஸ் நாடகங்களையும், பாடல்களையும் பாடுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டு பட்டாம் பூச்சிகளைப் போன்று அங்கும் இங்குமாக ஓடிக் கொண்டிருக்கின்றனர்.  புத்தாடை உடுத்தினவர்களாக ஆங்காங்கே பெரியவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நாடகத்தின் பாத்திரங்களுக்கேற்ப உடையை உடுத்திவிடுவதில் பெருமகிழ்ச்சியோடு அலைகின்றனர். தெருக்களெல்லாம் ஒளிவிளக்குகளும், தொடர் விளக்குகளும் மின்னிக் கொண்டிருக்கின்றன.   ஆலயத்தின் முன் சிறப்பான அலங்காரத்துடன் நாடக மேடை கெம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. பழைய சேலையுடன்,  தளர்ந்த நடையுடன் ஒரு பெண் ஆலயத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறாள்.   அருகில் வரும்போது போதகர் புரிந்து கொண்டார்.   அவள் ஆலயத்தைச் சேர்ந்த சரோஜினி.   போதகர் அமல்ராஜைப் பார்த்து, ஐயா இனி என்னால் என் கணவரோடு சேர்ந்து வாழ முடியாது என்று கூறித் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தாள்.  என்ன விஷயம் என்று கேட்க, மீண்டும் சத்தமிட்டு அழ ஆரம்பித்தாள். சிறிது நேர அமைதிக்குப் பின்..

திருச்சபையில் முதியோர்களின் பங்கு

Image
உலகிற்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்த முதியோர்களும் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின்பு வீட்டிற்குள் முடங்கிவிடும் சூழல் ஏற்பட்டு விடுகிறது.  உடலில் பல்வேறு நோய்கள் வந்து ஒட்டிக் கொள்ளுகிறது.  தாங்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்ல உடல் ஒத்துழைப்பதில்லை.  முதுமையின் காரணமாகச் சரியாக மற்றவர்கள்  பேசுவது கேட்பதில்லை.  ஆகவே அனைத்து விஷயங்களும் அவர்களிடம் பேசாமல், அவர்களுக்குக் காது கேட்காது அவர்களை விட்டு விடுங்கள் என்று கொஞ்சம், கொஞ்சமாகச் சமூகத்திலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.  மற்றவர்கள் பேசுவதைக் கேட்கமுடியாததால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.   வேலைப்பார்த்து ஓய்வுப்பெறுவதால் இதுரைப் பெற்ற மரியாதை குறைந்து விடுகிறது.  புதிதாகப் பல்வேறு மாற்றங்கள் ஒவ்வொரு துறையிலும் நடைபெறுவதால் ஆலோசனைகள் கேட்பதைக் கூடப் பலர் தவிர்க்கின்றனர்.  அவர்கள் பழங்காலத்தைச் சார்ந்தவர்கள், அவர்களுக்கு நடப்புக் காரியங்கள் தெரியாது என்று ஒதுக்கி விடுகின்றனர்.  பல்வேறு வருடங்களாக பெற்ற அனுபவங்கள் கூட அவசியம் இல்லை என்று அலட்சியப்படுத்தப்படுகிற முதியோர்கள் மீது திருச்சபை அன்பு காட்ட முன்வர வேண்டும்.   தினமும் ஆலயத்திற்

கலாச்சார நீரோடையில் அடித்துச் செல்லப்படும் திருச்சபை

Image
தொலைக்காட்சியின் வருகைக்குப் பின் திருச்சபை மக்களிடையே பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.  சிறுவயது முதற்கொண்டே மாற்றங்கள் பெருகி வருகிறது.  மாற்றம் என்பது தவிர்க்க முடியாத ஓன்று.  பூமி சுற்றுவதை நிறுத்தமுடியாதது போல், பூமியில் நடைபெறும் மாற்றத்தையும் தடைபோட்டு நிறுத்த முடியாது.  ஆனால் மாற்றம் என்பது விழுதலுக்கு நேராக இருக்கும் போது திருச்சபைக்குள்ளே விழிப்புணர்வு தேவை என்பதை மறுக்க முடியாது.   ஆராதனையில், சினிமாவில் வரும் "ஓ" போடு என்பதை அப்படியே திருச்சபையில் நடைபெறும் ஆராதனைகளில் "ஓ" போடு என்று கூறி அதற்கு "ஓசன்னா" என்று அர்த்தத்தைக் கொடுப்பதும் ஆராதனையில் நடைபெறும் தவறு என்று நினைக்கின்றேன்.  மக்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக நாங்களும் சொல்வோம்லா என்று "ஓ" போட வைத்து, மக்களைத் திசைதிருப்புவது தேவனுடையப்  பார்வையில் தவறான செயல். ஆராதனை என்ற பெயரில் பாடகளைப் பாடி அளவுக்கு அதிகமாக இசைச்சத்தத்தில் என்னப் பொருள் என்றே தெரியாமால் மக்களை ஆடவைப்பது, இன்றைய சினிமாவுடைய தாக்கமாக இருக்கிறது.  இளைஞர்கள் சினிமாவில் வரும் பாடல்கள் வரியை உணராமல்