Posts

Showing posts from April, 2021

விட்டுக்கொடுத்தல்

Image
வாழ்வில் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வது என்பது இன்றியமையாததாகும். விட்டுக்கொடுத்தல் என்பது மனைவிக்கு மட்டும் அல்லது கணவருக்கு மட்டும் உரியது அல்ல. இருவருக்கும் உரியதாகும். விட்டுக்கொடுத்தால் நமது பிரிஸ்டிஜ் என்ன ஆகும்? என்று யார் குடும்பத்தில் நினைக்கிறார்களோ அவர்கள் குடும்பம் சிக்கலைச் சந்திக்க நேரிடும். விட்டுக் கொடுப்பதால் ஒருவர் தாழ்ந்து விடுவதாகவும், மற்றவர் ஆதிக்கம் செலுத்துவதாகவும் நினைப்பது தவறு. நாம் செய்வது தவறு. எனவே இந்த காரியத்தில் நாம் பிடிவாதம் பிடிக்காமல் விட்டு விட வேண்டும் என்று நினைக்க வேண்டும். வறட்டு கவுரவம் பாரத்தல் கூடாது. ஆணாதிக்கச்  சிந்தனையோ, பெண்ணாதிக்கச் சிந்தனையோ வாழ்வை வாழ்வை வளப்படுத்தாது. அவை  வாழ்வை அழித்து விடும். ஒரு குடும்பம் இணைந்து வாழ வேண்டுமானால், விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வது என்பது பல்வேறு சூழலில் இன்றியமையாதது. குறிப்பாக ஒருவர் தவறு செய்தும் விட்டுக் கொடுக்கவில்லையாயினும் பிரச்சினையை அப்பொழுது தற்காலிகமாக விட்டு விட வேண்டும். ஏனெனில் கோபத்தின் விளைவாக தான் நினைத்ததை சாதித்தே ஆக வேண்டும் என்ற மனப்பான்மை ஏற்படுவது வழக்கம். கோபத்தில் எ

இருவர் உழைக்கும் குடும்பம்

Image
குடும்ப வாழ்வில் மனைவியானவள் சுவையாக உணவு செய்து பரிமாறவும், கணவன் உடையை துவைத்துப் போடவும், வீட்டைச் சுத்தமாக வைக்கவும் வேண்டும். இவர்கள் வெளி உலக நடவடிக்கைகளை அறியாதவர்களாக காணப்பட்டார்கள். இது நாற்பது ஆண்டுகளுக்கு முன். ஆண்கள் குடும்பத்திற்காக சம்பாதிக்க முயற்சி எடுப்பர். ஆணின் ஆதிக்கமே குடும்பத்தை ஆளுகை செய்யும். கணவன் எடுக்கும் முடிவே இறுதியானது. பெண் புத்தி பின் புத்தி என்பது அந்தக் காலம். இன்று பெண்கள் ஆண்களுக்கு இணையாக உழைக்கிறார்கள். உயர்ந்த இடத்தில்  இருக்கிறார்கள். இன்று ஆண்களின் பொறுப்பு, அந்தஸ்து என்பது மாற்றம் பெற்றுள்ளது என்பதை உணர வேண்டும். இன்ஜினியரான ஜோஸ்வா நல்ல வேலை பார்க்கும் பெண்ணைத் தேடிக் கொண்டிருந் தான். ஜோஸ்வா மாதம் ரூ.20,000/- சம்பாதித்தான். தனக்கு இணையாக மனைவியும் இன்ஜினியராக இருக்க விரும்பினான். அப்படியே மனைவியாக அமைந்தாள் ரூபா. ரூபா, இரவு 8:30 மணிக்கு களைப்போடு வீடு வந்து சேர்ந்தாள். வரும் வழியிலேயே தன்னுடைய இரவு உணவுக்காக தோசை மாவை கடையில் வாங்கி வந்து தோசை சுட்டு சாப்பிட்டு விட்டு டி.வி பார்த்துக் கொண்டிருந்தாள்.  ஜோஸ்வா இரவு 9:30 மணிக்கு பணி  முடிந்து கள

பிறருடன் ஒப்பிடுதல்

Image
ஐயோ பெண்களைப் புரிந்து கொள்ள முடியவில்லையே என்று முணுமுணுத்துக் கொண்டே நுழைந்தான் கிரிஸ்பஸ். புதிதாகத் திருமணமான தம்பதிகள் தான் கிரிஸ்பஸ், மெற்றில்டா ஜோடி. தாயின் உணவை உண்டு பழகிப்போன கிரிஸ்பஸ்க்கு மனைவியின் கையால் காலை உணவை உண்ண ஆசை வந்தது.  இளம் வயதிலேயே தனது திறமையாலும், கல்வியாலும், தொழிற்சாலையில் மேலாளர் பதவியைப் பெற்றவன். காலையில் குளித்து தலைவாரிக் கொண்டு காலை உணவைச் சாப்பிட உட்கார்ந்தான். புதிய மனைவி காலை உணவாக, தோசை, சட்னி, சாம்பார் பரிமாறினாள். சாப்பிட்டுக் கொண்டே கூறினான். "என்ன தோசை இது தடிதடியா, எங்க அம்மா ரொம்ப மெலிசா செய்வாங்க. அம்மா செய்கிறது ரொம்ப டேஸ்டா இருக்குமே என்றான்". மனைவியின் புன்னகை பூத்த முகம், ஒரே நிமிடத்தில் காய்ந்து போன சருகாக மாறியது. வானின் உயரத்தில் பறக்கும் பறவை போல் நினைத்தவள், சில நொடிகளுக்குள் சிறகு ஒடிந்த பறவையாய்த் துடித்தாள்.அவனோ சாப்பிட்டு விட்டுப் பணிக்குப் பறந்து சென்றான். அவளின் உள்ளத்திலோ போராட்டம் ஆரம்பித்தது. மாலையில் மனைவியைக் காணும் ஆவலில் விரைந்தோடி வந்தான். பைக்கின் சத்தம் கேட்டு வாசலில் மனைவி வந்து நின்றாள். புன்னகை பூத்தவனா

விலையுயர்ந்த முத்து

Image
தங்கத்தை உரசிப்பார்த்து இது தங்கம் தான் என்று உறுதிசெய்வர். ஆனால் ஒரு பெண்மணி குணசாலியான பெண் என்று எப்படிக் கண்டு பிடிக்க இயலும். மின்னுவதெல்லாம் பொன்னாகுமா? வெளுத்ததெல்லாம் பாலாகுமா? வேதத்தை வாசிக்கும் பெண்களெல்லாம் குணசாலிகளா? ஜெபிப்பவர்கள் எல்லாம் சிறந்த பெண்மணிகள் என்று எடுத்துக் கொள்ள இயலுமா? என்றால் கேள்விக் குறிதான். ஏனென்றால் வேதத்தை வாசிப்பவர்களுக்கும் அவர்கள் வாழ்க்கைக்கும் பொருத்தமே இல்லாமல் இருக்கிறது. ஜெபம் நாவிலிருந்து வருகிறதே ஒழிய இருதயத்திலிருந்து எழுப்புவதில்லை. எனவே குணசாலியான பெண்மணியா, சண்டைக்காரப் பெண்மணியா என்பதைத் தீர்மானிக்க திருமறை மட்டுமே நமக்கு உதவுகிறது.  உறவினர் ஒருவர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். புதிதாகத் திருமணமான போது அவரையும், அவரது மனைவியையும் சந்திக்க இயலவில்லை. எனவே எனது வேலைப்பளுவின் நிமித்தம் சில மாதங்கள் கழித்தே சந்திக்க முடிந்தது. மிகவும் அதிகமாகச் சம்பளம் வாங்கும் பெண் என்பதைக் கேள்விப்பட்டிருந்தேன். உள்ளே சென்றதும் வரவேற்ற எனது உறவினர் தனது மனைவியிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.  அவர்களுக்கு நான் புன் முறுவலோடு வணக்கம் கூறினேன். அவர் மனைவியோ

குணசாலியான பெண்

Image
திருமண வரன் பார்க்கும் போதே பெண்ணானவள் எப்படி இருக்கிறாள், அதிகமாகப் பேசுகிறாளா? எப்படி வீட்டில், வெளியே நடந்து கொள்ளுகிறாள் என்று முன்பு அதிகமாக விசாரிப்பர்.   எனவே ஒரு பெண் அதிகமாக வாய்ப்பேசினாலே உனக்கு ஒரு துணை வருமோ? வராதோ? என்று பேசுவர். ஆனால் இன்று அதைக் குறித்து விசாரிப்பது இல்லை. ரொக்கம்,  நகை, படிப்பு, வேலை இருக்கிறதா போதும் என்ற மனநிலை உள்ளது. எப்படியாவது வாழ்ந்து கொள்ளுவார்கள் எனத் திருமணத்தை முடித்து வைத்து விடுகின்றனர். திருமணத்திற்குப் பின் சண்டையிடுகிற, வீண் பிரச்சினைகளை உண்டாக்குகிற, மாமியார் மாமனாரை கண்ணிலே காணவிடாமல் மாற்றி விடுகிற, கணவனைப் பெற்றோரை விட்டுப் பிரித்து விடுகிற, கணவன் பெற்றோருக்கு உதவி செய்கிறதை மறுக்கிற, தான் என்ற அகம்பாவதத்துடன் நடக்கிற, சம்பாதிப்பதால் தானே தனியாக வாழமுடியும் என்று கணவனை மதியாத, தனக்குக் கணவன் பிடிக்கவில்லை என்று நீதிமன்ற வாசலுக்கு ஏறுகிற பெண்ணைப் பார்த்து பல ஆண்கள் மனநிலையில் பாதிப்புக்குள்ளாகின்றனர்.   திருமணம் என்ற பந்தம் இனிமையாய் இருப்பதற்குப் பதிலாகக் கசந்து விடுகிறது.   அன்பு செலுத்த வேண்டிய கணவன், வீட்டிற்கு வராமல் வேலை, வேலை எ

புத்தியுள்ள மனைவி

Image
குடிக்கு அடிமையானவர்களுக்கென்று சிறப்பு முகாம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஒரு கேள்வி கேட்கப்பட்டது. நீங்கள் ஏன் குடிக்கிறீர்கள்? இந்தக் கேள்விக்கு பெரும்பாலானவர்கள் கூறும் பதில் குடும்பத்தில் ஒரே பிரச்சினை. எனவே தான் நான் குடிக்கிறேன். இந்தப் பதில் எனக்குப் பெரிய ஆச்சரியத்தைக் கொடுத்தது. இதில் முழுமையான உண்மையில்லாவிட்டாலும் ஒரு குறிப்பிட்ட உண்மையும் இருக்கிறது என்பதை மறுக்க இயலாது. சிறிய பிரச்சினைகளை அப்படியே விட்டு விடாமல், அதைப் பெரிதுபடுத்தும் மனைவியால் குடும்பத்தில் பிரச்சினை தான். மனைவிக்கும் தன் அம்மாவுக்கும் பிரச்சினை வருமானால் அதை அவர்களே முடிந்த அளவு தீர்த்துக் கொள்ள வேண்டும் என ஆண்கள் நினைக்கின்றனர். அதைத் தீர்க்க, கணவனை நீதிபதியாக மாற்றும் போது அவர்கள் தீர்ப்பு வழங்க இயலாது தடுமாறுகின்றனர். எந்தத் தீர்ப்பும் ஒருவருக்கு சாதகமாகவும் மற்றவருக்கு பாதகமாகவும் மாறிவிடும். மகிழ்ச்சியோடு வாழ்ந்த இளைஞர்கள் இதைப் போன்ற பிரச்சினைகளால் திருமணமானவுடன் கசப்பை உணரும் நிலைக்குள் தள்ளப்படுகின்றனர். பல வேளைகளில் திருமணமான பின் ஆண்கள் நாம் குடும்பத்திற்காக அதிகமாக உழைக்க வேண்டும் என்று வேலை

சண்டையிடும் மனைவி vs குணசாலியான மனைவி

Image
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மிகப்பெரிய பாடகியின் வீட்டில் மிகப் பெரிய சோகம் ஏற்பட்டது. பாடகிக்கும், கணவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. கணவரின் விருப்பத்திற்கு மாறாக மனைவி நடந்து கொள்ளுவாள். இதனால் வீட்டிற்குள் நிம்மதியில்லை. வெளியே உழைத்துக் களைத்து வரும் கணவனுக்கு மகிழ்ச்சி நிறைந்த இடமாக வீடு இல்லாமல் நரகவேதனையை அனுபவிக்கும் இடமாக மாறிப்போனது. இந்த நரகவேதனையிலிருந்து விடுபடமுடியாமல் கூவம் நதியில் குதித்துத் தற்கொலைச் செய்து கொண்டார்.  சண்டையிடும் மனைவி, மழை காலத்தில் ஓயாமல் ஒழுகிக் கொண்டிருக்கும் வீட்டிற்குச் சமம் என்று நீதிமொழிகள் புத்தகம் கூறுகிறது. மழை காலத்தில் ஒழுகிக் கொண்டிருக்கும் வீட்டில் எப்படி மனிதன் குடியிருக்க முடியாதோ அப்படித்தான் சண்டையிட்டு எப்பொழுதும் புலம்பிக் கொண்டிருக்கும் மனைவியோடு ஒரு கணவன் குடியிருக்க முடியாது. ஒரு பிரச்சினையென்றால் அதை உடனே பேசி முடித்துவிட வேண்டும். அதை விட்டு விட்டு ஓயாமல் அதையே பேசிக் கொண்டிருந்தால் ஆண்களால் அதைக் கேட்டுக் கொண்டேயிருக்க முடியாது. உடனே அடிபிடி சண்டை வரும்.   இல்லையென்றால் வீட்டிற்கு வருவதைக் குறைத்துக் கொண்டு ப

இல்லற வாழ்வில் போதை வஸ்து

Image
காலை வேளையில் ஒரு வீட்டிற்குள் காலெடுத்து வைத்தேன். குடும்பத்தலைவரை எங்கே என்று கேட்டேன்.அவர் மனைவி கையைக் காட்டிய அறைக்குள் நுழைந்தேன்.அறைக்குள் சிகரெட் புகையாக இருந்தது. நுழைந்ததும் சற்றும் எதிர் பார்க்காத அவர் Sorry  ஐயா என்னால் விடமுடியவில்லை.அது இல்லன்னா எனக்கு பைத்தியமே பிடித்துவிடும் போலிருக்கிறது என்று கூறினார். தன்னந்தனியாக டி.வி.யைப் பார்த்துக்கொண்டே புகைத்துக் கொண்டிருந்தார். மனைவி, பிள்ளைகள் அவரைக்கண்டு கொள்ளவில்லை.அந்தப் புகை நாற்றம் எங்களுக்கு வேண்டாம் என்று கதவைப் பூட்டி வைத்திருந்தனர்.    புகைப்பிடிப்பது  ஸ்டைலுக்காக, பிறரைக் கவருவதற்காக என்று ஆரம்பிப்பவர்கள், இறுதியில் குடும்பத்தாரால் மனைவி, பிள்ளைகளால் ஓரங்கட்டப் படுகின்றனர். புகையிலை, பான், குட்கா போன்ற போதை வஸ்துக்களை உண்டால் இல்லற வாழ்க்கை சுகமாக அமையும் என்று யாராவது கூறியதை நினைத்து உட்கொள்ளுகிறவர்களே உங்கள் வாழ்க்கையை வீணாக்கி விடாதீர்கள்.  மாயையை நம்பி உண்மையிலே கிடைக்கும் சுகத்தை சிலர் இழந்து விடுகின்றனர்.   போதை வஸ்துக்களை உட்கொள்ளும்போது வாய் துர் நாற்றம் வீசும், உடல்நலம் கெட்டுவிடும்.   வீணான எரிச்சல், கோபம

இல்லறமும் மது அருந்துதலும்

Image
இல்லற வாழ்வில் ஏற்படும் சிறு சிறு பிரச்சினைகளையும் சந்திக்க இயலாமல் மது அருந்தும் ஆண்கள் பலர் இருக்கின்றனர். ஏன்? மது அருந்துகிறீர்கள் என்றால், என் மனைவி நான் சொல்வதைக் கேட்பதில்லை, என் பிள்ளைகள் எனக்குக் கீழ்ப்படிவதில்லை என்று பல காரணங்களைச் சொல்லுவார்கள். திருவிழா மிகச் சிறப்பாக ஒரு கிராமத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இரவு முழுவதும் ஊர் மக்கள் தூங்காமல் கலை நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தனர். ஆனால், ஒரு வீட்டில் மட்டும் பயங்கரச் சண்டை நடந்து கொண்டிருந்தது. காரணம் வீட்டின் தலைவர் நன்றாகக் குடித்து விட்டு பிள்ளைகள் மனைவியை அடித்து உதைத்துக் கொண்டிருந்தார்.பிள்ளைகள் பயந்து அலறிக் கொண்டிருந்தார்கள்.சில பிள்ளைகள் வீட்டின் கதவுக்குள் சென்று ஒளிந்து கொண்டார்கள்.வீட்டில் இருந்த தோசை மாவை எடுத்து மாட்டுக்கு வைத்து விட்டு மகிழ்ச்சியோடு வீட்டின் தலைவர் இருந்தார். மகிழ்ச்சியான திருவிழாவில் மனம் நொந்து காணப்பட்ட குடும்பத்தைக் காணும்போது குடும்ப வாழ்வில் ஈடுபடும் ஒரு ஆண்மகன் குடிப்பதால் மகிழ்ச்சியை இழந்து விடும் சூழல் ஏற்படுவதைக் குறித்து வருந்தினேன். குடும்ப வாழ்வில் மகிழ்ச்சி என

அன்பே பெரியது

Image
இல்லற வாழ்க்கை இனிக்க வேண்டுமானால் கணவன் மனைவி இருவரும் தங்களுடைய முழு சந்தோஷத்தை நிறைவு செய்வதில் கவனம் செலுத்தாமல் பிறர் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு முதிர்வயதான் தம்பதியினர் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு மனைவி ஒரு பிள்ளையினிடமும் கணவர் ஒரு பிள்ளையிடமுமாக இருந்தனர். அவர்களிடம் உட்கார்ந்து பேசும் போது, 'ஐயா என் மனைவி என்னைக் கவனிப்பது இல்லை. அவள் விருப்பப்படிதான் வாழ்கிறாள்' என்று குறைவுபட்டுக் கொண்டார்.   அவரின் மனைவியோ அவரைப் பார்த்து, 'அவர் சரி இல்லை. அவரோடு வாழ்வதைக் காட்டிலும் என் பிள்ளைகளோடு வாழ்ந்தால் கடைசி காலத்தில் என்னை நன்றாகக் கவனித்துக் கொள்ளுவார்கள் என்று கூறினார். 70வயதைத் தாண்டினாலும் சுயநலத்தோடே வாழ்பவர்கள் மகிழ்ச்சியில்லாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். வயதாக ஆக நல்ல நண்பர்களைப் போல மாறிவிட வேண்டும். பிறர் விருப்புவெறுப்புகளைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் வளர வேண்டும்.   நான், எனது என்ற வட்டத்திலிருந்து வெளியே வந்து நாம், நமது குடும்பம், நமது பிள்ளைகள் அவர்களது விருப்பம் என்ன என்பதைப் புரிந்து கொள்ளும் பக்குவம் வளர வேண்டும். ஒரு கிரா

அழகு

Image
மிகவும் கர்வத்தோடு, யாரையும் மதிக்காத வாலிபப்பெண் ஒருத்தி வளர்ந்து வந்தாள். அவளுடைய திருமண நாளை எட்டின போது யாரும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை.எனவே வெளியூர்களில் வாழும் மணமகனைப் பார்த்தாவது திருமணம் செய்து வைக்க நினைத்தனர். அதுவும் நடக்கவில்லை.நாட்கள் கடந்து சென்றதால், அந்த வாலிபப் பெண்மணியும் தன் அழகை இழந்து அவலட்சணமானாள்.   தனக்கு இனி ஒரு வாழ்க்கை அமையப்போவதில்லை என்று நினைத்து தன்னைப் பேணுவதையும் விட்டுவிட்டாள். ஒரு நாள் விழியை இழந்த வாலிபன் ஒருவன் அவ்வூருக்கு வந்தான்.  இதை பார்த்த அந்த வாலிபப் பெண்ணின் தந்தை தன் மகளை எப்படியாவது இந்த விழியை இழந்த மனிதனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டியது தான் என முடிவெடுத்தார்.  அதன்படியே திருமணத்தை நடத்தி வைத்தார். அந்த வாலிபப் பெண் தனக்கு கணவனாக வந்த விழி இழந்தவரிடம் தன்னை மிக அழகுள்ளவள் என்று பெருமையடித்துக் கொண்டாள்.  எதிர்பாராத விதமாக அவ்வூரில் கண்சிகிச்சை முகாம் நடைபெற்றது.  அதில் கண்பார்வை இழந்த அந்த மனிதன் கலந்து கொண்டான். டாக்டர் அவனுக்கு அறுவை சிகிச்சை செய்தால் கண் பார்வை கிடைத்து விடும் என்றார். இதைக்கேட்ட அந்த பெண்ணுக்கு வ

ஓய்விலும் உழைப்பு

Image
அமெரிக்காவைச் சார்ந்த ராக்பெல்லர் என்ற பணக்காரர் ஒருவர் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.  அவருக்கு மிகவும் வயதாகி விட்டது.  அவர் அருகில் ஒரு இளைஞன் உட்கார்ந்திருந்தான்.  அவன் ராக்பெல்லரிடம் பேசும்போது ஐயா, நீங்கள் பெரிய பணக்காரராக இருக்கிறீர்கள்.  ஆனால் இன்னும் ஏன் நீங்கள் உழைக்க வேண்டும், ஓய்வு எடுக்கக்கூடாதா? என்று கேட்டான். ராக்பெல்லர் சிரித்துக் கொண்டே நாம் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம்.  விமானம் வானத்தில் மேலே பறந்து கொண்டிருக்கிறது.  இப்பொழுது இயந்திரத்தை நிறுத்தி விட்டால் என்ன ஆகும் என்றார்?  அப்படிச் செய்தால் விபத்துக்குள்ளாகி விடும் என்றான்.  இதைப் போன்று தான் நமது உழைப்பை என்று நிறுத்துகிறோமோ அப்பொழுதே நமது மனமும், உடலும் சீர்கெட்டுவிடும் என்றார். அன்பிற்குரியோரே! உங்கள் வாழ்க்கை இன்பமாக அமைய வேண்டுமானால் எப்பொழுதும் உழைக்கிறவர்களாக இருக்க வேண்டும் சில பெரியவர்கள் VRS வாங்கிக்கொண்டு வீட்டில் இருப்பார்கள்.  இதனால் வீட்டிலே வீணாக நேரத்தைச் செலவு செய்து கொண்டிருப்பர்.  சிலர் வேறு வேலைகளில் தங்களை இணைத்துக் கொள்வர். யாரெல்லாம் தங்கள் நேரத்தைப் பயனுள்ளதாக பயன்ப

வழி நடத்தும் பெற்றோர்

Image
குடும்ப வாழ்க்கையில் பிள்ளைகளுடன் சரியான உறவு இருந்தால் தான் வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஒரு திருமண வீட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு பெண் குழந்தை தன் தாயிடம் வித்தியாசமாக நடந்து கொண்டது. அதைப் பார்த்த அனைவரும் என்ன பிள்ளை இது என்று முகம் சுளித்துக் கொண்டனர். மற்றவர்கள் முன் அவமானப்பட்ட தாய் தன் பிள்ளையைக் கூட்டிக் கொண்டு, உடனே தன் வீட்டிற்குச் சென்று விட்டார். இனி இப்படிப்பட்ட இந்த மகளை எந்த இடத்திற்கும் கூட்டிச் செல்லக் கூடாது என்று முடிவெடுத்துக் கொண்டார். மகிழ்ச்சியாகத் திருமண வீட்டிற்குச் சென்று விட்டு துக்கத்தோடு பெற்றோர் திரும்புகின்றனர் என்றால் பிள்ளைகளை நாம் எப்படி வழிப்படுத்த வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். பொது இடங்களில் சில பிள்ளைகள் மற்றவர்களுக்கு முன்பாக சண்டித்தனம் பண்ணுவதும், கீழ்ப்படியாமல் செயல்படுவதும், பொதுவான நல்ல பழக்க வழக்கங்களைக் கைக்கொள்ளாமல் இருப்பதும், பிறரோடு அனுசரித்துப் போகாமல் நடந்து கொள்வதும் உண்டு. இப்படிப்பட்ட பிள்ளைகளை நாம் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் முன்பே அவர்களுக்கு அங்கு எப்படி நடக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொட

பிள்ளைகளோடு நேரம் செலவிடுவோம்

Image
குடும்ப வாழ்க்கையில் குழந்தைகளோடு நேரம் செலவிடுவது என்பது இன்பத்தைக் கொடுக்கும் செயல். டிவியில் நேரம் செலவிடுவதால் பிள்ளைகள் மகிழ்ச்சியடைகின்றனர் என்று 24 மணி நேரமும் டிவியைப் பார்க்க வைப்பது தவறு. நாம் பிள்ளைகளுக்கு ஏற்றவாறு நமது நிலையிலிருந்து இறங்கிக் குழந்தையைப் போல் விளையாட முற்பட வேண்டும்.  குறிப்பாக நமது சிறுவர் ஊழியங்கள், VBS இயக்குநர்கள் நல்ல கதைகளைக் கூறி குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்ப இறங்கிச் செயல்படுவர். அதைபோன்று பெற்றோர் பிள்ளைகளுடன் உட்கார்ந்து படம் வரைவது, அதைப் பிள்ளைகள் கலர் அடிக்க உற்சாகப்படுத்துவது போன்று மாற வேண்டும். அப்பொழுது சிறு குழந்தைகளுக்குப் பெற்றோருடன் நேரம் செலவிடப் பிடிக்கும்.  ஒரு வீட்டிற்குச் சென்றிருந்தேன். அந்தக் குடும்பத்தின் தலைவர் தன் பிள்ளைகளோடு உட்கார்ந்து மாலையில் கேரம் விளையாடிக் கொண்டிருந்தார்.  பிள்ளைகள் மகிழ்ச்சியோடு தகப்பனோடு பேசி சந்தோஷமாக இருந்தனர். அதே வேளையில் மற்றோரு வீட்டிற்குச் சென்றிருந்தேன். அங்கேயும் கேரம்போர்டு இருந்தது. ஆனால் மூலையில் யாரும் தேடுவார் இல்லாமல் இருந்தது. டிவி தன் பணியைச் செவ்வனே செய்து குடும்பத்தைத் தன் பக்கமாய் வ

நல்லதைக் கற்றுக் கொடுப்போம்

Image
மாம்பழச்சங்கப் பண்டிகையன்று என் மகளோடு, பிறர் உதவியை நாடுகின்ற மக்களுக்கு உதவச் சென்றேன். பத்து பத்து ரூபாயாக மாற்றி வைத்திருந்தேன்.   அவைகளை எடுத்து என் மகளிடம் கொடுத்து நீ கொடு என்றேன். அவள் உற்சாகமாக ஒவ்வொருவருக்காகக் கொடுத்து வந்தாள். Daddy அந்த ஆளுக்குக் கொடுக்கல்ல.  இந்த ஆள் பாவம் என்று கேட்டு கேட்டு வாங்கிக் கொடுக்கும் போதே பகிர்ந்து கொடுக்கப் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கிறோம். தெருக்களிலே மனநிலை பாதிக்கப்பட்ட மக்கள்  நின்று கொண்டிருந்தால் என் மகள் என்னை அழைத்துச்  Daddy  இவர்களுக்கெல்லாம் வீடு கொடுக்கணும், உணவு கொடுக்க வேண்டும் என்று கூறுவாள். சிறு பிள்ளைகளுக்குப் பகிர்ந்து கொடுக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருகின்றது. வீட்டில் ஒரே ஒரு பிள்ளை மட்டும் இருக்கும். வாங்கிக் கொடுக்கும் பொம்மைகள், விளையாட்டுச் சாமான்கள் எல்லாம் அவர்களுக்கே உரியது.பெரியவர்கள் யாரும் பொம்மைகளை வைத்து விளையாடும் குழந்தைகளோடு விளையாடுவதில்லை.   ஆனால் வீட்டிற்கு அருகில் உள்ள குழந்தைகள் இந்தப் பொம்மையைக் கேட்டு விளையாட வந்தால் அவர்கள் சேர்ந்து விளையாட மாட்டார்கள். காரணம் பகிர்ந்து விளையாடும் எண்ணம் குறைந

பெற்றோர் vs தொலைக்காட்சி

Image
இளம் வயதிலேயே வலுச்சண்டையில் ஈடுபட்டுப் பிறரைத் துன்புறுத்தும் (aggressive behavior) குணம் பிள்ளைகளிடம் காணப்படுவதைக் குறித்து பெற்றோர் வருத்தப்படுகின்றனர்.  பள்ளியில் இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுவதாகத் தங்கள் பிள்ளைகளைப் பற்றி ஆசிரியர்கள் கூறினால் ஆசிரியர்களிடம் என் பிள்ளை அப்படியெல்லாம் செய்ய மாட்டான் என்று சாதிப்பர். பள்ளியில் ஒரு மாணவன் மற்றொரு மாணவனைக் கூர்மையான compassசால் குத்துவதும், பள்ளிக்குக் கத்தியைக் கொண்டு வந்து மாணவர்களை மிரட்டுவதும், ஆசிரியையே குத்திக் கொல்வதும் நடைபெறுகிறது. தான் விரும்பிய சக மாணவியைத் திருமணம் செய்ய முடியவில்லையென்றால், அவள் உயிரோடே இருக்கக் கூடாது என்ற எண்ணத்தில் செயல்படுவதும் இன்று பெருகி வருகின்றது. இப்படிப்பட்ட எண்ணங்கள் நம் பிள்ளைகளிடத்தில் வளராமல் இருக்க வேண்டுமானால் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் இடையே திறந்த மனதோடு கருத்தைப் பகிர்ந்து கொள்ளும் சூழல் வளர வேண்டும். அமெரிக்காவில் பிள்ளைகளிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.  உங்களுக்குப் பெற்றோர் முக்கியமா? அல்லது டி.வி முக்கியமா? என்று கேட்டபொழுது, 80% பிள்ளைகள் டி.வி தான் அவசியம். பெற்றோர் இல்லாவிட்டாலு

பிள்ளைகளின் எதிர்காலம்

Image
குடும்ப வாழ்க்கையில் பிள்ளைகள் மகிழ்ச்சியைக் கொடுக்கவும் செய்கின்றனர். மகிழ்ச்சியை எடுக்கவும் செய்கின்றனர். சிலர் தங்கள் பிள்ளைகளை உயர்வாகக் கருதி அவர்கள் செயல்கள் குறித்து மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால் சிலரோ ஏன் தான் இந்தப் பிள்ளையைப் பெற்றேனோ என்று கண்ணீர் வடிக்கின்றனர். பிள்ளைகள், குழந்தைகளாக இருக்கும்போது நாம் சொல்வதை வேதவாக்காக எடுத்துக் கொள்வார்கள். ஆனால் பெரியவர்களாக மாற மாற பெற்றோரிடமிருந்து சிறிது சிறிதாக விலகி நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து விடுகின்றனர். 16வயது வரும் போது தானாக முடிவெடுக்கும் நிலையை எட்டுகின்றனர். இதனைப் பெற்றோர் புரிந்து கொள்ளும் மனநிலையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பிள்ளைகளின் தனித்தன்மையைக் கண்டு பெற்றோர் போற்ற வேண்டும். அதனை நமது செயல்களாலும், பேச்சாலும் வெளிப்படுத்திப் போற்ற வேண்டும். நாம் எதிர்பார்க்கிற குணநலன்கள் தான் அவர்களில் காணப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு வித குணநலன்கள், எதிர்பார்ப்புகள், விருப்பு வெறுப்புகள் கொண்டவனாக விளங்குகின்றான். எனவே அவர்கள் வருங்காலக் கனவு நம்முடைய எதிர்பார்ப்பிலிருந்து மாறுபடலாம். அதற்காக

பிள்ளைகள் உறவில்...

Image
சில மாதங்களுக்கு முன் என்னுடைய அலைப்பேசி ஒலிப்பதைக் கேட்டு எடுத்தேன்.   ஒரு பெண்மணியின் குரல் ஒலித்தது.   ஐயா என்னுடைய மகனுக்காக நீங்க ஜெபிக்கணும் என்றார்கள். என்ன விஷயத்திற்கு? என்று கேட்டேன். அழ ஆரம்பித்து விட்டார்கள். இதுவரை அம்மா என்ற சொல்லைத் தாண்டி என் மகன் என்னிடம் பேசமாட்டான். ஆனால் இப்பொழுது கல்லூரியில் படிக்கிறான். என்னைப் பார்த்து மரியாதையில்லாமல் பேசுகிறான்.   என்னுடைய சொல்லுக்கு நேர் மாறாகப் பேசுகிறான். முன்பு, காலை எழுந்த உடன் வேதாகமும் கையுமாக இருப்பான். நன்றாக ஜெபிப்பான். இப்பொழுது டி.வி-யில் படம் பார்ப்பதும், இன்டர்நெட்டில் நேரம் செலவிடுவதுமாக இருக்கிறான். இதில் ஏன் இவ்வளவு நேரம் செலவிடுகிறாய் என்று கேட்டால் என்னை வெறுக்கிறான் எனக் கூறி தேம்பித் தேம்பித் அழ ஆரம்பித்தார்கள்.  இதைப்போன்று வேதனையடையும் பெற்றோர் பலர். இச்சூழல்களில் பெற்றோர் நம்பிக்கையற்றவர்களாக இனிப் பிள்ளைகளை நம்மால் கன்ட்ரோல் பண்ணவே முடியாது, நம் பிள்ளைகள் நம் அன்பைப் புரிந்து கொள்ள மாட்ட்டார்கள் என்ற வெறுப்புணர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்து விடுகின்றனர். பல பெற்றோர் அவர்களை அடித்துத் திருத்த நினைக்கின்றன

நேரமில்லையே...!

Image
ஆணும் பெண்ணும் பலமணி நேரமாக உழைத்து முன்னேற நினைக்கின்ற வாழ்வில் குடும்பத்தோடு நேரம் செலவிட இயலாத நிலை இருக்கிறது.  குறிப்பாக IT Fieldல் இருக்கும் தம்பதியினருக்கு நேரம் என்பது மிகவும் முக்கியமானது.  தங்களது Project Live-ல் இருக்கும் போது குடும்பத்தையே மறந்து கம்ப்யூட்டரில் மூழ்கி விடுகின்றனர்.  வெளிப்பார்வையில் இலட்சக்கணக்காகச் சம்பாதிக்கும் இவர்களில் பலர் குடும்ப வாழ்க்கையைத் தொலைத்து விடுகின்றனர்.    மனைவி, குழந்தைகளோடு நேரம் செலவிடாததால் அவர்களின் தேவைகளை, உணர்வுகளை ஒரு குடும்பத்தலைவனால் புரிந்து கொள்ள இயலவில்லை.  அதேபோன்று தன் பிரச்சினைகளை மனைவியிடம் பகிர்ந்து கொண்டு மனதை இலகுவாக்கவும் இயலவில்லை. எனவே பலர் தற்கொலைக்கு முயல்கின்றனர்.  இதற்கு மிக முக்கியக் காரணம் மன அழுத்தமே.  மனதை இலகுபடுத்துவதற்கான சூழலைக் குடும்பமோ கம்பனியோ ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. IT Fieldல் இருப்பவர்கள் மட்டுமல்ல குடும்பத்தோடு நேரம் செலவிடாத மருத்துவர்கள், பள்ளிக்கூடம், டியூசன் என்று அலையும் ஆசிரியர்கள், தொழில், பணம் என்று அலையும் வியாபாரிகள், கடைகள் நடத்துவோர், ஊழியம் ஊழியம் என்று வீட்டைக் கண்டு கொள்ளாத ஊழிய

பிள்ளைகளுடன் உறவில் விரிசலா?

Image
இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவி உறவு எவ்வளவு முக்கியமோ அதைப்போன்று பிள்ளைகள், பெற்றோர் உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.  பிள்ளைகள் இளம் பருவத்தில் பெற்றோரைச் சார்ந்து வாழ்வார்கள்.  நாளாக நாளாக வளர்ந்து வரும் பருவத்தில் அவர்களுக்கு நண்பர்கள் வட்டம் பெருகிக்கொண்டே செல்லும். ஒரு கால கட்டத்தில் பெற்றோரோடு நேரம் செலவிடுவதைக் காட்டிலும், நண்பர்களிடம் நேரம் செலவிடுவது அதிகரித்து விடுகிறது. குறிப்பாக டீன் ஏஜ் பருவத்தில் பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து விலக ஆரம்பித்து விடுகின்றனர்.  இதனைப் பெற்றோரால் தாங்கிக் கொள்ள இயலாமல் போய்விடுகிறது.  முன்பு பெற்றோர்களை விட்டுப் பிள்ளைகள் பிரிந்திருக்கும் நேரம் பள்ளிக்குச் செல்லும் வேளைதான், ஆனால் இன்று பள்ளிக்குச் செல்லும் நேரம் தவிர டியூசன் செல்லும் நேரமும் அதிகரித்து விடுகிறது.  இனி பிள்ளைகள் வீட்டிற்கு வந்தால் தூங்குவதற்குத்தான் வர வேண்டும்.  இது பறவைகளுக்குக் கூடு இருப்பது போன்று, பிள்ளைகளுக்கு இரவில் தங்கும் விடுதிபோல் வீடு மாறிவிட்டது.  எனவே பிள்ளைகள் வீட்டில் இருப்பதும், விடுதியில் இருப்பதும் ஓன்று என்பது போல் மாறிவிட்டது. வீட்டிற்கு வந்தாலும் பிள்