Posts

Showing posts from May, 2021

அம்மா பொய் சொல்றீங்க

Image
உத்திரபிரதேச மாநிலத்தில் இரட்டையராக பிறந்த 24 வயது நிறைந்த இருமகன்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். இருவரும் 3 நிமிட வித்தியாசத்தில் பிறந்தவர்கள். ஒரே மாதிரியான உடை, ஒரே பள்ளி, ஒரே கல்லூரி என வாழ்க்கை முழுவதும் ஒன்றாகவே பயணித்தனர். இருவரும் ஐதராபாத்தில் வேலைப்பார்த்து வந்தனர். கொரோனா நிமித்தமாக வீட்டிற்கு வந்து, வீட்டிலிருந்தே அலுவலகப்பணி செய்துக்கொண்டிருந்தனர். எதிர்பாராதவிதமாக இருவருக்கும் தொற்று ஏற்பட்டது. இருவரில் ஒருவர் எதிர்பாராதவிதமாக இறந்தார். மற்றவர் போனில் தாயாரிடம் தன் சகோதரன் எப்படி இருக்கிறான் என்று விசாரித்தபோது மனதைக்கட்டுப்படுத்தி, அழுகையை கட்டுப்படுத்தி  அவனை டெல்லி மருத்துவமனைக்கு மாற்றிவிட்டோம் என்று கூறினார். அதற்கு அவன் "ஏம்மா பொய் சொல்றீங்க என்று உடைந்துப் போய் பேசி போனை வைத்துவிட்டான். " சிறிது நேரத்தில் அவனும் இறந்துவிட்டான். பிள்ளைகளுக்கு நேர்மையையும், உண்மையையும், நீதியையும் கொடுத்து வளர்த்தாலும் சில வேளைகளில் நாம் பொய் சொல்ல வேண்டிய சூழல் வருகிறது. ஆனால் இவைகளை நாம் ஏற்றுக்கொள்ளுகிறோம்.  ஆனால் பெற்றோர்கள் நம்முடைய பிள்ளைகளுக்கு நல்ல மதிப்பீடுகளையோ

உயிரை வேட்டையாடும் பண ஆசை

Image
மலையாளப்படங்களில் நடித்து வந்த நடிகர் தன் மனைவியிடம் வரதட்சணைக் கேட்டுத் தொந்தரவு செய்துள்ளார். தொல்லைத்தாங்காமல் தன் பெற்றோர் மற்றும் சகோதரனிடம் சொல்லியுள்ளார். ஆனால் அவர்கள் கேட்ட பணத்தைக்கொடுக்க முடியாமல் திணறியுள்ளனர். இந்நிலையில் தொந்தரவுத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் இன்றும் படித்த, உழைக்கும் குடும்பங்களில் நிகழ்வது நமக்கு வேதனையைக் கொடுக்கிறதாக உள்ளது. பணக்காரர்கள் இன்னும் பணம் வேண்டும் என்றும், ஏழையாய் இருக்கிறவர்களும் ஏழையாய் இருக்கிறவர்களிடம் எவ்வளவு பறிக்க முடியுமோ அவ்வளவு பறித்துக்கொள்ளுவதும் வரதட்சணையின் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. வரதட்சணைக் கேட்டு தொந்தரவுச் செய்பவர்கள் பிச்சையெடுப்பதற்கு சமம். உழைப்பதற்கு மறுத்து அடுத்தவர் உழைப்பை சுரண்டி சாப்பிட வேண்டும் என்று நினைப்பது தவறு.   தென் மாநிலத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் நன்றாக படித்து முன்னுக்கு வந்தவர்கள் அதிகமாக உள்ளனர். ஆனால் பண ஆசையால் பிள்ளைகளை விலைப்பேசுகிறவர்களாக இருக்கின்றனர். பண ஆசை எல்லா தீமைக்கும் வேறாயிருக்கிறது என்று திருமறை எச்சரிக்கை செய்கிறது. ஒருவரின் உயிரையே பறித்து விடுகி

ஒரே சரீரம் இரு சிந்தனை

Image
ஜீன் ரூஸ்ஸோ என்ற பிரெஞ்சு நாட்டு அறிஞர் ஒருவர் இருந்தார். அவருடைய கருத்துக்கள் அந்த நாட்டை அரசாளுபவர்களுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. நாளாக நாளாக அவருடைய கருத்துக்கள் மிகவும் முரண்பட்டுப்போகவே அவரை கொலைச்செய்வதற்கு ஆணைப் பிறப்பிக்கப்பட்டது. இதைக்கேட்டு என்னச்செய்வதென்று அறியாமல் இருந்தபோது, அதே நாட்டைச் சார்ந்த வால்டேர் என்ற மற்றொரு அறிஞர் ஒரு ஆளை ரூஸ்ஸோவின் வீட்டிற்கு அனுப்பி, தன் வீட்டில் வந்து ஒளிந்துக்கொள்ளுமாறு அழைத்தார். ரூஸ்ஸோவும் வால்டேர் வீட்டில் போய் அடைக்கலம் அடைந்தார். அவர் வீட்டிற்குள் நுழைந்த போது வால்டேர் இவ்வாறு கூறினார். "உம்முடைய கருத்துக்கள் எதனுடனும் எனக்கு சிறிதும் உடன்பாடு கிடையாது. இருப்பினும் உம்முடைய கருத்தைச் சொல்ல உமக்கு உரிமையிருக்கிறது . அதற்காக என் உயிரைக்கொடுத்தாவது நான் உம்மைக் காப்பேன்." என்றார். இதனை "மனிதர்கள் மரபுகள் மதிப்பீடுகள்" என்ற புத்தகத்தில் வாசித்த போது ஒரு உண்மைப் புலப்பட்டது. குடும்ப வாழ்வில் கணவனும் மனைவியும் ஒரே எண்ணத்தில் இருந்தால் மட்டும்தான் வாழ முடியும் என்று நினைப்பது தவறு. வெவ்வேறு இடங்களில் கல்வி கற்று, வெவ்வேறு

Selection எப்படி

Image
திருமண தகவல் மையத்திற்கு ஒரு நண்பர் அடிக்கடி வருவார். அவர் நன்றாக படித்து அரசு துறையிலே மிகவும் உயர்ந்த பதவியில் இருந்தவர். தன்னுடைய பிள்ளைகளையும் நன்றாக படிக்கவைத்து அழகு பார்த்தார். இன்னும் பிள்ளைகள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வரன் பார்க்க திருமண தகவல் மையத்திற்கு வருவார். எல்லா பிள்ளைகளின் தகவல்களையும் பார்ப்பார். தொலைப்பேசி எண்களை எல்லாம் குறித்துக்கொண்டு போவார். மீண்டும் அடுத்த வாரம் வருவார், தொலைப்பேசி எண்களையெல்லாம் குறித்துக்கொண்டு போவார். சார், கடந்த வாரம் எடுத்துச்சென்ற தொலைப்பேசி எண்களில் பேசிப்பார்த்தீர்களா? ஏதாவது ஒழுங்காகவில்லையா என்றால் பதில் என்ன வரும் என்றால் "ஒன்றும் சரியில்லை சார்... நாம எதிர்பார்க்கிறது மாதிரி ஒன்றும் சரியாக அமைய மாட்டேங்கே" என்று வருத்தப்படுவார்.  நடையாக நடந்து நடந்து திருமண வரன்களைப் பார்த்தவர், பணி நிறைவுப்பெற்றார். ஆனால் திருமண தகவல் மையத்திற்கு அவர் வருவது மட்டும் நிறைவடையவில்லை.   தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல துணையைத் தேர்ந்தெடுப்பதில் பெற்றோருக்குத்தான் எவ்வளவு அக்கறை என்பதை நான் உணர்ந்து பார்த்தேன். இவ்வளவு அக்கறைக்கொண்டு பெற்றோர் வ

சிறந்த உறவு

Image
உலகத்தில் நாம் பலரோடு உறவுகளை வைத்துக்கொள்ளுகிறோம். அதில் சில உறவுகள் நாம் நன்றாக இருக்கும்போது தானாக வந்து ஒட்டிக்கொள்ளும், நம்மிடம் உள்ள இரத்தத்தை உறிஞ்சி குடித்த பின்பு தானாக சிறகடித்துப் பறந்து போய் விடும். உடல் கவர்ச்சியாயிருக்கும்போது தேடி தேடி வந்து ஹீரோவாக, ஹீரோயினாக நடிக்க அழைக்கப்படுவார்கள். உடற்கவர்ச்சி குறையும் போது வாய்ப்பு கிடைக்காதா என்று தேட வேண்டிய சூழலுக்கு உள்ளாவர்கள். அழகுக்காக, பணத்திற்காக தேடிவரும் உறவுகள் குடும்ப வாழ்விலேயும் குறிப்பிட்ட காலங்களுக்குப் பின் பஞ்சாக பறந்து போய் விடும். ஆனால் உலகமே என் காலுக்குள் என்றும் இருக்கும் என நினைத்து சிறந்த உறவுகளை இழந்துவிடக்கூடாது. சில பெண்கள் அல்லது ஆண்கள் எளிதாக திருமண உறவை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு பெற்றப் பிள்ளைகளையும் எனக்கு வேண்டாம் என்று உதாசீனப்படுத்திவிட்டு செல்வதைப் பார்க்க முடிகிறது. பெற்ற பிள்ளைகளின் அருமை என்பது உடலில் வலு இருக்கும் போது தெரியாது. என்னால் தனித்து வாழ இயலும்! மனைவி எதற்கு? கணவன் எதற்கு? பிள்ளைகள் எதற்கு? பெற்றோர்கள் எதற்கு? நான் தெரிவு செய்துள்ள அந்த குறிப்பிட்ட நபரே எனக்கு எல்லாவற்றையும் ப

பார்வைகள் பலவிதம்

Image
விருந்து ஒன்று அமெரிக்காவில் நடைபெற்றது. அதில் பல விஞ்ஞானிகள் பங்குக்கொண்டனர். இதில் விஞ்ஞானி ஐன்ஸ்டீனும்   போயிருந்தார். எதிர்பாராதவிதமாக அவருடைய மனைவி அதில் பங்கேற்க முடியாமல் போய் விட்டது.  விருந்தில் பங்குபெற்று விட்டு ஐன்ஸ்டீன் வீடு திரும்பினார் . மனைவி அவரைப்பார்த்து விருந்து எப்படி இருந்தது என்று கேட்டார். ஐன்ஸ்டீன் பதிலாக நன்றாக இருந்தது என்று கூறிவிட்டு தான் சந்தித்த விஞ்ஞானிகளிடம் பேசின முக்கியமான விஷயங்களைப்பற்றி விளக்க முற்பட்டார். மனைவிக்கு கோபம் தலைக்கேறியது! நான் இந்த அறுவையை எல்லாம் கேட்கவில்லை. அங்கு வந்த பெண்கள் எப்படிப்பட்ட மாடல்களில் டிரஸ் அணிந்திருந்தார்கள், அதைப் பற்றிச் சொல்லுங்கள் என்றாள்.  ஐன்ஸ்டீனுக்கு தலைச்சுற்றியது. தன் மனைவியைப்பார்த்து விருந்தில் பங்குகொண்ட பெண்களின் முகம் மட்டுமே மேசைக்கு மேலே என் கண்களுக்குப்பட்டது. அவர்கள் அணிந்திருந்த ஆடையை நான் பார்க்க முடியவில்லை. உன் விருப்பத்தை நான் நிறைவேற்ற விரும்பினால் மேசைக்கு கீழே நான் குனிந்து தான் பார்த்திருக்க வேண்டும். ஆனால் அது அவ்வளவு கவுரவமாய் இருந்திருக்காது என்று முடித்தார். இதைக் கேட்டு அவர் மனைவி வி

போதும் என்ற மனமே

Image
துருக்கி நாட்டை சார்ந்த நஸீம் ஹிக்மத் என்ற ஓவியர் ஒருவர் தன்னுடைய ஓவியத்தில் மகிழ்ச்சியான குடும்பம் எப்படியும் இருக்கலாம் என்பதை வரைந்துள்ளார். அந்த ஓவியம் எப்படி வரையப்பட்டிருக்கிறது என்றால் ஒரு குடும்ப அங்கத்தினர்கள் மகிழ்ச்சியான முகத்துடன் தூங்கிக்கொண்டிருக்கின்றனர். அந்த அறையானது மழையில் ஒழுகிக்கொண்டு இருக்கிறது. அந்த மழை விழாமல் இருக்க ஒரு குடை. ஒரே படுக்கையில் முழு குடும்பமும் படுத்து இருக்கிறது. அவர்களோடு அவர்கள் வீட்டு நாயும் படுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால் அவர்கள் முகத்திலோ மகிழ்ச்சி காணப்படுகிறது. மகிழ்ச்சி என்பது துன்பங்கள் இல்லாமல் இருப்பது அல்ல. அதை ஏற்றுக்கொள்வது தான் வாழ்க்கை என்பதை சொல்லுகிறது. "சதுர முட்டையும், சங்கடமில்லாத வாழ்க்கையும் இல்லை" என்பது முதுமொழி. இன்றைய தலைமுறை சங்கடமில்லாத வாழ்க்கையை எதிர்பார்க்கிறது. சிறிய பிரச்சனை, பொருளாதார குறைவு ஏற்பட்டாலும் பிள்ளைகள் தத்தளிப்பதைக்காட்டிலும் பெற்றோர் தான் அதிகமாக தத்தளிக்கின்றனர். ஐயோ பிள்ளை என்னச்செய்வாள்/ன் என்று போன் மேல் போன் போட்டு இப்படியெல்லாம் நீ அந்த வீட்டில் வாழ முடியாது. பேசாமல் நம்ம வீட்டுக்கு

குடும்பங்களை குலைக்கும் கடன்

Image
கொரோனா காலங்களில் அநேக குடும்பங்கள் கடன் பாரத்தினால் தவிக்கிறார்கள். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திணறுகிறார்கள். குறிப்பாக மதுரை மாவட்டத்தில் நடந்த சம்பவம் நமது உள்ளத்தை உலுக்கியது. "ஒரே குடும்பத்தை சேர்ந்த 5பேர் தற்கொலை"  என்பதற்கு முக்கியமான காரியம் கடன். தன்னுடைய வியாபாரத்தை விரிவாக்குகிறதற்காக சிறுக சிறுக கடன் வாங்கியுள்ளார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக வட்டியைக் கட்ட முடியாமல் தவித்தார். கொரோனா கால ஊரடங்கு மேலும் நஷ்டத்தை உருவாக்கியது. கடன் கொடுத்தவர்கள் நெருக்கவே மூன்று சிறு குழந்தைகளுடன் கணவன், மனைவியும் விஷம் அருந்தி தற்கொலைச் செய்து கொண்டனர். கடனால் ஏற்பட்ட மன உளைச்சலைச் சரிசெய்ய ஒரே வழி தற்கொலை என்ற எண்ணம் தான் குடும்பத்தை கவிழ்த்துப்போட்டது. வறுமை என்பது குடும்பங்களில் மிகுந்த மன உளைச்சலை உருவாக்கிவிடுகிறது. சரியான உடையில்லை, உணவுக்கு வழியில்லை, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப போதிய பணம் இல்லை, மற்றவர்களைப்போல் ஆடம்பரமாய் வாழமுடியவில்லை என்ற எண்ணம் அதிகம் வர வர மன உளைச்சல் பெருகிக்கொண்டே போகிறது. இயேசு கிறிஸ்துவின் வாழ்வை நாம் உற்றுப்பார்த்தால் இயேசு ஒரு பணக்க

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு

Image
தினசரி பத்திரிகையில் அடிக்கடி இடம் பிடிக்கிற ஒரு செய்தி "தங்களைத் தாங்களே மாய்த்துக்கொள்ளுதல்" (தற்கொலை) சிறு பிரச்சனையோ பெரிய பிரச்சனையோ அதற்கு முடிவு எடுக்க நேரம் கொடுக்காமல் இனி வாழ முடியாது என்ற முடிவுக்கு வருவதால் தற்கொலை செய்துக்கொள்ளுகின்றனர். பெரிய பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளுகிற மக்கள் கூட அவைகளை பொறுமையோடு கையாளும்போது, ஒன்றுமில்லாத காரியங்களுக்கு தற்கொலையை சிலர் தெரிவுச்செய்து விடுகின்றனர். குறிப்பாக குடும்ப வாழ்வில் கணவன் மனைவியிடையே ஏற்படும் சிறிய சண்டைகளுக்கும் முடிவு தற்கொலை என்று நினைக்கின்றனர்.  இதனை எழுதும் போது என்னுடைய மேசையிலே உள்ள தினசரிப் பத்திரிக்கை இவ்வாறு கண்ணீர் வடிக்கிறது. "இரட்டை குழந்தைகளுடன் தீக்குளித்து தாய் தற்கொலை" திருமணமாகி 5 வருடங்கள் தான் உருண்டோடியுள்ளது . இரு குழந்தைகள் உள்ளனர் . தன் சகோதரன் மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் அதைப்  பார்க்க விரும்பியுள்ளார். ஆனால் கணவன் அனுமதிக்கவில்லை. உடனே வாக்குவாதம் வளர்நது  தீக்குளித்து இறந்துள்ளார். குழந்தைகள் பரிதாபமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . சிறு பிரச்சனைகளையும்

சரியானதைத் தெரிந்தெடு

Image
வலைத்தளங்கள் பெருகிய பின் குடும்பவாழ்வில் பல்வேறு விதமான மாற்றங்களும், தாக்கங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக கூட்டுக்குடும்பங்கள் மறைந்தபின் இளம் தம்பதியினர் வாழ்க்கையானது பல்வேறு சூழல்களுக்குள் கடந்துச் சென்றுவிடுகிறது. முறையற்ற, வரைமுறையற்ற வாழ்க்கையானது எளிதில் சாத்தியமாகிறது. இதனால் குடும்பங்களில் பிரச்சனைகளும், கொலைவெறித்தாக்குதல்களும் நடந்து விடுகிறது. மதுக்கடைகள் தாராளமாக திறந்துவிடப்பட்டதால் "பார்ட்டி" என்ற பெயரில் குடித்துவிட்டு, மனைவியை நண்பர்களுக்கு தானம் பண்ணுகிற வாழ்க்கைமுறையும் அரங்கேறுகிறது. குடிக்கு அடிமைகளாக பெண்களும் மாறுவதால் முறையற்ற வாழ்க்கைமுறை கட்டுக்கடங்காமல் சென்றுவிடுகிறது. இவ்வாறு செல்லும் நபர்களால் பல்வேறு குடும்பங்கள் சிதைந்துவிடுகின்றன. இன்றல்ல மன்னர்கள் காலத்திலேயும் இப்படிப்பட்ட தாறுமாறான வாழ்க்கையால் உயிரை இழந்த வரலாற்றை "துரோக சுவடுகள்" என்ற புத்தகத்தில் வாசித்தேன்.அது இன்றைய குடும்பங்களுக்கு விடும் எச்சரிக்கையாக உள்ளது. காண்டிலிசஸ் என்ற மன்னன் லிடியாவை ஆண்டுவந்தான். தன் மனைவியின் அழகில் மிகவும் பெருமைக்கொண்டான். தன்

பொருந்தாத, பொருந்தும் திருமணம்

Image
உத்திரபிரதேசம் மாநிலத்தில் மாப்பிள்ளைக்கு இரண்டாவது வாய்ப்பாடு தெரியவில்லையென்று மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார். திருமணத்தன்று தான் மணமகனிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்ததும் போய், மணக்கோலத்தோடு வந்த மணமகனிடம் ஒரு கேள்வியைக்கேட்டார். " 2ம் வாய்ப்பாட்டை கொஞ்சம்சொல்லுங்க" திகைத்தார் மணமகன். படிக்காத மாப்பிள்ளையை கட்டிவிடக்க்கூடாது என்று நினைத்த மணமகள், 2ம் வாய்ப்பாட்டை சொல்லத்தெரியாத மாப்பிள்ளையை reject செய்தாள். பள்ளிக்கூடம் பக்கம் தலைவைத்து படுக்காதவரோடு திருமணம் செய்யமாட்டேன் என்று உறுதி பூண்டாள். மணப்பெண்ணின் குடும்பத்தினர் மணமகளை சமாதானம் செய்ய முயற்சித்தும் தோல்வியுறவே திருமணத்திற்கு வந்தவர்கள் வருத்தத்தோடே நடையை கட்டினார்கள். இது தினசரி நாளேட்டில் வெளிவந்த செய்தி. படித்தவர்கள் படிக்காதவர்களோடு திருமணம் செய்தால் சிக்கல்கள் வரலாம். ஆனால் எல்லாருக்கும் வருவதில்லை. திருமணத்திற்கு முன்பே தான் படிக்காத மாப்பிள்ளையைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறோம், சம்பாதிக்கிறார், திறமை இருக்கிறது போதும் என்ற மனப்பான்மையுடைய பெண்கள் திருமணம் செய்து வெற்றிகரமாக வாழ்வதை நாம் காண இயலுகிற

பொறுத்தார் குடும்பத்தை ஆள்வார்

Image
தமிழக தலைமைச்  செயலராக வெ.இறையன்பு அவர்கள் பொறுப்பேற்றபோது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது. குடும்ப வாழ்விற்கு ஏற்ற ஒரு கதையை அவர்கள்  "அன்பே அமிர்தம்" என்ற தலைப்பில் எழுதியிருந்தார்கள். அது ஒவ்வொருவருடைய குடும்ப வாழ்விலும் கடைபிடிக்கவேண்டிய ஒன்று. ஒரு மலையடிவாரம் அருகில் சாது ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த மருத்துவராகவும், சிறந்த ஆலோசனைகள் கூறுகிறவராகவும் இருந்து வந்தார். ஒரு இளம் பெண் அவரைத் தேடி சென்று தன் கணவன் மிகவும் முரடனாகவும், கோபக்காரராகவும் இருக்கிறார். எனவே அவரை சரிசெய்ய ஏதாவது நல்ல மருந்து ஒன்றைத்  தருமாறுக் கேட்டுக்கொண்டாள்.   அவளின் நிலைமையை உணர்ந்த அந்த சாது, அந்த மருந்தை தன்னால் உருவாக்கித் தர இயலும். ஆனால் அதற்கு புலியின் மீசை ஒன்று கண்டிப்பாக வேண்டும் என்றார் . அதைக் கேட்ட அந்த பெண் அதிர்ந்து போனாள். இதுவெல்லாம் முடியாத காரியமாயிற்றே என்றாள். ஆனால் அவரோ புலியின் மீசை முடியில்லாமல் அதை உருவாக்குவது சாத்தியமல்ல என்று உறுதிபடக்கூறவே காட்டிற்கு செல்ல தீர்மானித்தாள்.   புலியிடமிருந்து மீசை பிடுங்குவதற்கு திட்டமிட்டு, குறிப்பிட்ட காட்டின் பகுதிக்குள்  சென்று,

குடும்பத்தில் சமத்துவம்

Image
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மணமகன் மணமகளுக்கும் , மணமகள் மணமகனுக்கும் தாலி கட்டியுள்ளனர். மணமகன் சமுதாய வழக்கப்படி திருமணச்  செலவை மணமகள் வீட்டாரே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் மணமகனோ அதை விரும்பாமல் திருமணச்  செலவில் பாதியை கொடுத்துள்ளார். இவ்வாறு இன்றைய திருமணங்கள் சமத்துவம் வேண்டும் என்று முற்போக்கு சிந்தையுடன் செய்துவருகின்றனர். திருமறையும் “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.” (ஆதியாகமம் 1:27) என்று கூறுகிறது. ஆணுக்கு அடிமை வேலைச் செய்ய பெண்ணை படைக்கவில்லை. சமமாக படைத்தார். ஆனால் காலம் காலமாக ஆண்கள் வெளியே வேலைக்குச் செல்வதும், பெண்கள் வீட்டு வேலைகளைச் செய்வதுமாக மாறிவிட்டனர். ஆகவே ஆண்கள் குடும்பத்திற்கு  வேண்டிய தேவைகளை சந்திக்க வெளியே போய் வேலை செய்வதால் முக்கியமானவனாகவும், வீட்டிலே சமைப்பவர்கள் முக்கியமற்றவர்களாயும் கருத ஆரம்பித்துவிட்டனர். ஆதிமனிதன் வேட்டையாடியபோது பாகுபாடு பார்க்கவில்லை. இடைப்பட்ட காலத்தில் பெண்களை குறைத்து மதிப்பிட்டதால் மீண்டும் பெண் சமுதாயம் சமத்துவம் வேண்டும் என்று ச

தியாகமும் அன்புதான்

Image
என் நண்பர் தியாருவின் எழுத்தில் புத்தரின் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றை வாசித்தேன்.அது புத்தரின் வாழ்வில் நடந்த கடைசி நிகழ்ச்சி.   புத்தர் ஒரு கிராமத்தில் தங்கியிருந்தபோது ஏழை மனிதன் அவரை தன் வீட்டில் உணவு அருந்துமாறு கூப்பிட்டான்.   உணவாக நாய்குடைகளை சமைத்து பரிமாறினான்.   இவைகளில் சில வகைகள் விஷமாக மாறிவிடக்கூடியவைகள்.   இவைகளை அறியாமல் அந்த ஏழை விஷத்தன்மையுள்ள நாய்குடைகளை நன்றாக சமைத்து அன்போடு பரிமாறினான்.   அவர் அதை எடுத்து உண்ட போது கசப்பு தெரிந்தது.   ஆனால் அந்த ஏழை அவர் அருகில் நின்றுக் கொண்டு விசிறி  ஒன்றினால் வீசிக்கொண்டு மகிழ்ச்சியோடு அவர் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டு இருந்தான்.   அவர் சாப்பிட்டு முடித்ததும் மன நிறைவோடு புத்தரை அனுப்பி வைத்தான்.  தன்னுடைய இருப்பிடத்திற்கு சென்ற புத்தர் சற்று நேரத்திற்குள்ளாக தன்னுடைய சுய நினைவுகளை இழக்க ஆரம்பித்தார்.   வைத்தியர்கள் விரைந்து வந்து அவரை பார்த்த போது அவர் பிழைப்பது கடினம் என்றனர். உண்ட உணவில் தான் விஷம் இருந்திருக்க வேண்டும் என்று கருதினர். ஏழைக் கேள்விப்பட்டு ஓடி வந்தான், கதறினான்.   புத்தரோ கண்களை மெதுவாக பார்த்த போது ஏழை அரு

தியாகமும் அன்புதான்

Image
என் நண்பர் தியாருவின் எழுத்தில் புத்தரின் வாழ்வில் நடந்த சம்பவம் ஒன்றை வாசித்தேன்.அது புத்தரின் வாழ்வில் நடந்த கடைசி நிகழ்ச்சி. புத்தர் ஒரு கிராமத்தில் தங்கியிருந்தபோது ஏழை மனிதன் அவரை தன் வீட்டில் உணவு அருந்துமாறு கூப்பிட்டான். உணவாக நாய்குடைகளை சமைத்து பரிமாறினான். இவைகளில் சில வகைகள் விஷமாக மாறிவிடக்கூடியவைகள். இவைகளை அறியாமல் அந்த ஏழை விஷத்தன்மையுள்ள நாய்குடைகளை நன்றாக சமைத்து அன்போடு பரிமாறினான். அவர் அதை எடுத்து உண்ட போது கசப்பு தெரிந்தது. ஆனால் அந்த ஏழை அவர் அருகில் நின்றுக் கொண்டு விசிறி  ஒன்றினால் வீசிக்கொண்டு மகிழ்ச்சியோடு அவர் சாப்பிடுவதை பார்த்துக் கொண்டு இருந்தான். அவர் சாப்பிட்டு முடித்ததும் மன நிறைவோடு புத்தரை அனுப்பி வைத்தான்.  தன்னுடைய இருப்பிடத்திற்கு சென்ற புத்தர் சற்று நேரத்திற்குள்ளாக தன்னுடைய சுய நினைவுகளை இழக்க ஆரம்பித்தார். வைத்தியர்கள் விரைந்து வந்து அவரை பார்த்த போது அவர் பிழைப்பது கடினம் என்றனர். உண்ட உணவில் தான் விஷம் இருந்திருக்க வேண்டும் என்று கருதினர். ஏழைக் கேள்விப்பட்டு ஓடி வந்தான், கதறினான். புத்தரோ கண்களை மெதுவாக பார்த்த போது ஏழை அருகில் நின்று ஏன் இத

கருப்பே அழகு

Image
என் நண்பன் ஒருவன் முகத்தில் புண்களாக இருக்கக்கண்டு அவனைப் பார்த்து ஏன், எப்படி இவ்வளவு வந்தது என்றேன். சிரித்துக் கொண்டே சொன்னான். அழகாய் இருப்பதற்காக "கிரீம்" ஒன்றைப் போட்டேன். அது ஒத்துக்கொள்ளாமல் புண்ணாக மாறிவிட்டது என்றான். இன்றைய ஆண்களுக்கும், பெண்களுக்கு எப்படி அழகாக மாறுவது? கடவுள் ஏன் என்னை இப்படி கருப்பாக படைத்துவிட்டார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். மற்றொரு புறம் அழகாய் இருப்பதற்கு பல்வேறு விளம்பரங்கள் வந்து மனதை உருட்டுகிறது. ஒரு வாரத்தில், நான்கு வாரத்தில் மாற்றங்கள் தெரியும் என்று பல்வேறு "கிரீம்"கள் போட்டிப்போட்டு விளம்பரங்கள் செய்கின்றன. இவைகளை மனதில் கொண்டு, விளம்பர யுக்திகளைப் புரியாமல் பல யுவதிகள் மாட்டிக் கொள்ளுகின்றனர்.  தங்கள் கரங்களிலே எப்பொழுதும் மேக்கப்பை சுமந்துக் கொண்டே செல்லுகின்றனர். ஒரு முறை அண்டங்காக்கை ஓன்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது. தனக்கு கிடைக்கும் மீனையோ, சிறிய பூச்சிகளையோ உண்டு வாழ்வதை இனிதே கழித்தது. ஒரு நாள் ஒரு குளத்தில் ஒரு அன்னப் பறவையைப் பார்த்தது. அது வெண்மையாக இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டது. அந்த அன்னப்பறவை குள

துணையே துணை

Image
கொரானா காலத்தில் தான், தான் திருமணம் செய்த துணை எவ்வளவு முக்கியம் என்பது புரிகிறது. துன்பம் வரும்போது தான் நல்ல நண்பன் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியும் என்பர். அதேப் போல் தான் துன்பம் வரும் போது எத்தனை நண்பர்கள் நம்மிடம் நிற்கிறார்கள், எத்தனைப் பேர் நம்மை நட்டாற்றில் விட்டு செல்கிறார்கள் என்பது புலப்படும். கொரானா மிகுந்த இக்கால கட்டத்தில் ஒரு வயதானவர் தன் மனைவியை இழக்கக் கொடுத்து விட்டார். அந்த பெண்மணியை அடக்கம் செய்யவோ, உயிரை இழந்த பெண்மணியைப் பார்க்க மருத்துவமனைக்கோ யாரும் வரவில்லை. மனைவியை வீட்டிற்கு கொண்டு செல்லக்கூடாத நிலையில் தன்னுடைய சைக்கிளில் இறந்த மனைவியை வைத்து தள்ளிக் கொண்டே போகிறார். போகிற வழியில் நிலை தடுமாறி சைக்கிள் விழ, தான் நேசித்த இறந்த மனைவியின் சடலமும் கீழே விழுகிறது. தூக்கி வைக்கவோ, சைக் கிளைத் தள்ளிச் செல்லவும் முடியாமல் மனைவியின் அருகில் உட்கார்ந்து அழுதார். இது பலரின் உள்ளத்தை உருக்கியது. கணவன் / மனைவியின் முக்கியத்துவம் நமக்கு எப்பொழுது புரியும் என்றால் இப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் தான். கணவன் / மனைவி என்ற உறவானது மிகவும் நெருக்கமானது. இந்த நெருக்கத்தை எந

குடும்பத்தில் பணிந்து நடப்பது கோழைத்தனமல்ல

Image
குடும்பத்தில் கணவனுக்கு அல்லது மனைவிக்கு பணிந்து நடந்தால் மற்றவர்கள் கோழைத்தனம் என்று கருதுவார்கள் என்று சிலர் எண்ணுகின்றனர். எனவே மற்றவர்கள் சொல்லுகிறபடி நாம் நடக்கக் கூடாது அவர்கள் கட்டளையிடுகிற காரியங்களை எல்லாம் நாம் கேட்கக் கூடாது. அடிக்கடி நான் ஒன்றும் உன்னுடைய கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவன்/ள் அல்ல என்பதை நிரூபிக்குமாறு எதிர்த்துப் பேச வேண்டும் என்று எண்ணுகின்றனர். அதே வேளையில் திமிராக நடந்துக் கொள்ளுவது தான் வீரம் என்று ஆணோ/பெண்ணோ நினைத்து செயல்படுகின்றனர். நானும் உன்னைப்போல கைநிறைய சம்பளம் வாங்குகிறேன். உன்னை விட நான் பணிபுரிகிற இடத்தில் உயர்ந்த அந்தஸ்து இருக்கிறது. நான் கூப்பிட்டால் ஓடி வந்து என்ன என்று கேட்பதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஒரு "பெல்" அடித்தால் அத்தனை ஊழியர்களும் என்னுடைய மேசைக்கு முன் வந்து நிற்பார்கள். அப்படியிருக்க நான் ஏன் உன் முன் தாழ்மையுடன் நடந்துக் கொள்ள வேண்டும். நான் இப்படி திமிராகத் தான் நடந்துக் கொள்ளுவேன் என்று தன்னுடைய வீரத்தை காண்பிக்கிற ஆண் மகனையோ அல்லது பெண் பிள்ளைகளையோ காணமுடிகிறது. இப்படிப்பட்ட சிந்தையுள்ளவர்கள் இணைந்து வாழ்வதில் சிக்கல