Posts

Showing posts from July, 2021

வெற்றியுள்ள வாழ்வுக்காக போராடு

Image
Tom Dean என்ற பெயரை வாசித்த உடன் உங்களுக்கு நியாபகம் வருவது ஒலிம்பிக் போட்டி (2021). அதில் 200 மீட்டர்  freestyle பிரிவில் தங்கம் வென்ற வீரர் தானே என்பது உண்மை தான். ஆனால் Tom Dean ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவாரா என்பதே கேள்வி குறியாக இருந்தது.    கொரானா தொற்றினால் இரண்டு முறை பாதிக்கப்பட்டவர் தான்  Tom Dean. வயது 21 தான் ஆகிறது. ஆனாலும் உள்ளம் தளராமல் உறுதியுடன் பயிற்சி செய்து தங்கத்தை தட்ட மனவலிமை இருந்துள்ளது. துவக்கத்தில் பிரிட்டன் ஒலிம்பிக் அணிக்குள் இடம் பிடிக்க முடியுமா என்று சந்தேகித்தனர். கொரானா தொற்றினால் முதல் முறை பாதிக்கப்பட்டவர் எதிர்பாராத விதமாக இரண்டாம் முறையும் கொரானாவின் கோரப்பிடியில் மாட்டிக் கொண்டார். இதன் விளைவால் நுரையீரல் பாதிக்கப்பட்டது. இருமலால் கஷ்டப்பட்டார். நீச்சல் பயிற்சிச் செய்வதற்கு இவை மிகவும் தடையாகவே இருந்தது. ஆனால் Tom Dean உள்ளமோ எப்படியாகிலும் ஒலிம்பிக் போட்டியில் பங்கு கொண்டு வெற்றியைப் பெற வேண்டும் என்ற அவா பெருகிக்கொண்டேப் போனது. உலகில் கோடிக்கணக்கான மக்கள் கொரானாவினால் பாதிக்கப்பட்டதில் சிலர் விரக்தியடைந்து தற்கொலைச் செய்துள்ளனர், பலர் மன

On லைனில் பிள்ளைகள் Off லைனில் பெற்றோர்

Image
கூலி தொழிலாளியின் மகன் அப்பாவிடம் android போன் வாங்கி தரும்படி ஒரே தொந்தரவு செய்தான். அப்பாவிற்கு android என்றால் என்னவென்றே தெரியாது. ஒவ்வொரு நாளும் வயிற்றை கழுவுவதற்கே வேலை கிடைக்க மாட்டேங்குது. வேலைக்குப் போனாலும் சரியாக சம்பளம் கொடுக்க மாட்டுக்காங்க. கேட்டா கொரானா காலத்தில் பணம் இப்படி தான் கிடைக்கும் என்று சொல்றாங்க. எப்படியோ கஷ்டப்பட்டு cell யை வாங்கிக் கொடுத்தார். அதுக்கு அப்புறமா பிள்ளையாண்டானை கண்ணிலேயே பார்க்க முடியவில்லை. எப்பொழுதும் cellல் தான். அப்பா நினைத்தார் மகன் நன்றாக படிக்கிறான் என்று. ஒரு நாள் ஆசிரியை phone பண்ணி, sir உங்க மகன் ஆன் லைன் கிளாஸ்க்கு ஒழுங்காகவே வரமாட்டாக்கிறான். home workசெய்ய மாட்டுக்கிறான். நீங்க கவனிக்கிறது இல்லையா? என்றார்கள். அப்பொழுது தான் அப்பாவுக்கு மகன் மேல சந்தேகம் முளைக்க ஆரம்பித்தது. இன்றைக்கு ஆன் லைன் கல்வி என்பது வியாபாரமாக்குகிறவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால் சமூக மேம்பாட்டுக்கோ, குடும்ப உறவுக்கோ மிகப் பெரிய அளவில் பிரச்சனைகளாகவே மாறி உள்ளது. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளியில் படிக்கும் பிள்ளைகள் android போன் கேட்ட

தொப்புள் கொடியில் சிக்கிய பெரிய தம்பி

Image
மாலை வேளையில் பெரிய தம்பி வீட்டிற்கு சென்றிருந்தேன். தொலைக்காட்சியில் கிறிஸ்தவ நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தான். பெரிய தம்பிக்கு திருமணம் ஆகி குழந்தை குட்டிகளோடு இருக்க வேண்டும். ஆனால் திருமணமாகாமல் கடவுளே போதுமென்று நினைத்து, அம்மாவின்நிழலிலே வாழ்ந்து வந்தான். மெதுவாக தோளில் கையைப் போட்டுக்கிட்டு, ஏதாவது திருமணம் செய்துக்கொள்ளக்கூடாதா? வயசு ஆயிட்டுதே என்றேன். சிரித்தார் பதிலை காணவில்லை. தீடீரென்று உள்ளே இருந்து பதில் வந்தது. ஐயா நீங்கதான் என் மகனுக்காக ஜெபிக்கனும். ஒரு நல்ல பொன்னப் பார்த்து நீங்க தான் தரனும். ஒங்க காலத்துல எப்படியாவது திருமணம் நடக்கணும் அப்படி அம்மா சொன்னாங்க. அப்பா இல்லாத பையன் எல்லாமே நான்தான் அவனுக்கு. என் காலைத் தான் சுற்றி சுற்றி வருவான். மாசமானதும் சம்பளத்த என் கையில் தந்திருவான். பஸ்ல போரதுக்கு கூட என் கிட்ட காச வாங்கிகிட்டுத்தான் போவான். நான் எதுக்கு, எவ்வளவு செலவழிக்கிறேன்னுஒரு நாள் கூட கணக்கு கேட்டது கிடையாது. அம்மா எல்லாத்தையும் நல்லதாதான் செய்வாங்கன்னு ஊரு முழுக்க என்னைப் பற்றி பெருமையா பேசுவான். நான் கேள்வி கேட்க கேட்க பதிலை பெரியதம்பி ச

Over Sentiment Boss

Image
திருமண தகவல் மையத்தில் உட்கார்ந்திருந்தேன். ஒரு பெண்மணி உள்ளே வந்தார்கள்.   வரன்கள் பார்க்க வேண்டும் என்று கேட்டார்கள். Profile கொண்டு வந்திருக்கிறீர்களா என்ற போது, மூன்று profileயை நீட்டினார்கள். யாருக்கு பார்க்க வேண்டும் என்று மறுபடியும் கேட்டேன்? மூன்று பேருக்கும் பார்க்க வேண்டியது தான் என்று சிரித்துக் கொண்டார்கள். மூன்று பேரில் இருவர் டாக்டர், மற்றோருவர் Engineer. வயது எல்லாருக்கும் 30க்கு மேலே! ஏன் வரன் அமையவில்லையா? என்று தயங்கி கேட்டேன். அந்த அம்மா அசால்டாக ஒன்றும் சரியாக வந்து அமைய மாட்டேங்குது. ஓன்று படிப்பு சரியாக வந்தா, வீடு வாசல் ஒன்றும் இருக்க மாட்டேங்குது.  சொத்து சுகம் இருந்தா, சரியான படிப்பு இருக்க மாட்டேங்கு, இரண்டும் இருந்தா வயது சரியா பொருந்த மாட்டேங்குது என்று சிரித்தார்கள். நான் யோசித்தேன், 138 கோடி மக்கள் உள்ள இந்தியாவில் வரன் வர மாட்டேங்குது என்றால் எவ்வளவு பெரிய பொய்!   அதுவும் டாக்டர், இஞ்சினியர் என்று நன்கு படித்து கை நிறைய சம்பளம் வாங்கும் பையன்களைத் தேடி வீட்டு வாசற்படியிலே காத்திருப்பார்களே, என்ன நடந்திருக்கும் என்று யோசித்துக்கொண்டே இருந்தேன். வரன் பார்ப்

நம்மை Beat பண்ணிரும் போல!

Image
குரங்கிலிருந்து மனுஷன் வந்தானா? மனுஷனில் இருந்து குரங்கு வந்ததா? என்று பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்க, மனுஷனைக் காட்டிலும் மிருகங்கள் சிறப்பான செயல்களை வெளிப்படுத்தி மனுஷனை தோற்கடித்து விடுகிறது என்று முடிவு கட்ட வேண்டிய சூழலுக்கு வந்து விடுகிறது. ஹாரி ஹர்லோ என்ற அமெரிக்க விஞ்ஞானி தாய் சேய் உறவு எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி அறிய குரங்குகளைப் பயன்படுத்தினார். இந்த ஆராய்ச்சியின் முடிவில் சில உண்மைகள் வெளியானது. இவை மனித இனத்திற்கும் பயனுள்ள பல செய்திகளைத் தருகிறதாக உள்ளது. குரங்கு குட்டிபோட்ட உடனே குட்டியை அதன் தாயிடம் இருந்து பிரித்து தனியாக வளர்க்க ஆரம்பித்தார். குழந்தைகளுக்கு பாலூட்டுவது போன்று சரியான நேரத்துக்கு உணவையும், விளையாடுவதற்கு விளையாட்டுப் பொருட்களையும் தாராளமாக கொடுத்து உற்சாகப்படுத்தினார். ஆனால் தாய் குரங்கை மட்டும் பார்க்க வாய்ப்பைக் கொடுக்கவே இல்லை. இவ்வாறு குட்டிக் குரங்கு வளர்ந்து வந்த பின்னர் மற்ற குரங்குகளுடன் பழக அனுமதித்தார். ஆனால் இந்த குரங்கு மற்ற குரங்குகளுடன் பழகுவதற்கு விரும்பவே இல்லை. அதே வேளையில் எதிர்பாலின குரங்குகளுடன் பழகுவதற்கு அனுமதித்தபோதும் ஏறெட

அம்மா பையன்

Image
ஆண்களில் சிலர் எப்பொழுதும் அம்மாவின் சொற்படியே நடப்பவர்களாக இருப்பார்கள். திருமணமான மனைவியை விட அம்மா தான் தனக்கு முக்கியம் என்று தீர்க்கமாக இருப்பார்கள். எங்க அம்மா என்னை எவ்வளவு நேசித்தார்கள் அதற்காகவாவது நான் அவர்கள் சொல்லைக் கேட்க வேண்டியது முக்கியமல்லவா என்று பேசுவார்கள். திருமணமானவுடன் தன் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுத்து தன்னை நிராகரித்து விடக்கூடாது என்பதில் சில அம்மாகள் கவனமாக இருப்பதற்கு காரணம் என்ன? சில வேளைகளில் உலகமே சொல்லும், அம்மா பேச்சைக் கேட்டு மனைவியைத் துரத்தி விட்டு விட்டானே! இவன் எல்லாம் மனுஷனா? என்று கூறினாலும் அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் அடிக்கப்படுகிற ஆட்டுக்குட்டிப் போல தாயின் பின்னால் தலையை ஆட்டி ஆட்டிச் செல்லும் திருமணமான ஆண்கள் எத்தனைப் பேர். எங்க அம்மா பேச்சைக் கேட்டு இந்த வீட்டில் இருக்க வேண்டுமானால் இரு அல்லது உங்க வீட்டுக்குப் போய்  விடு என்று கணவன் மனைவியிடம் எச்சரிக்க காரணம் என்ன? இவைகளுக்கான காரணத்தை டாக்டர்.ஷாலினி அவர்கள் குறிப்பிடும் போது சில பெண்கள் ஆண்களைச் சார்ந்து வாழும் சூழல் இருக்கும். அப்படி கிடைத்த கணவர் சரியாக குடும்பத்தின் தேவைகளை சந்

நம்ம கெத்தக் காட்டணும்

Image
ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் 1936ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைப்பெற்றது. ஹிட்லரின் ஆதிக்கம் கொடி பறந்த காலம் அது. தன்னுடைய நாஸிகளின் கொளகையை தூக்கிப் பிடித்து தன்னுடைய இனம் தான் உலகத்திலே உயர்ந்தது என்பதை காட்ட முயன்று கொண்டிருந்தார். அதை வெளிப்படுத்த நாஸிகள் அதிகமான பதக்கங்களை குவிக்க வேண்டும் என்ற நோக்கில் இருந்தார். ஹிட்லரில் நாஸிசக் கொள்கையையும், அவரின் எண்ணத்தையும் தவிடுபொடியாக்க மறைமுகமாக உள்ளத்தில் உறுதிப் பூண்டார் ஆப்ரிக்க அமெரிக்கரான ஜெஸி ஓவன்ஸ். கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு உடலைப் பக்குவப்படுத்தி வைத்திருந்தார். ஆனாலும் போட்டியின் போது பதட்டம் உள்ளத்தில் தாண்டவமாட ஆரம்பித்தது. சொந்த நாட்டில் விளையாடிய லஸ் லாங் முதல் முயற்சியிலேயே தகுதி சுற்றுக்கு தகுதிப் பெற்று ஹிட்லர் உள்ளத்தில் பாலை வார்த்தார். ஆனால் ஜெஸி இரண்டாவது முறையும் தோல்வியுற்று பதட்டத்தில் இருந்தார். லஸ் லாங், ஜெஸியிடம் வந்து பதட்டப்படாதே என்று தைரியமூட்டினார். தைரியம் கொண்டு களமிறங்கிய ஜெஸி தகுதி சுற்றில் வெற்றி பெற்று உள்ளே நுழைந்தார். அதன்பின் இறுதி போட்டி வரையிலும் டாப் கியரில் இயங்கிய ஜெஸி இறுதிப் போட்டிய

அன்பில் மயக்கம்

Image
சிலர் தங்கள் கணவர்/மனைவி மிகவும் மோசமானவனா/ளாக இருக்கிறார்களே மாறவே மாட்டார்களா? என்று புலம்பலாம். முள்ளை முள்ளால் தான் எடுக்கவேண்டும். எனவே சண்டையிடும் கணவனோடு/மனைவியோடு சண்டையிட்டால் தான் முடிவு வரும்,   வீட்டைப் பற்றி கவலைப்படாத கணவனைப் போன்று நாமும் வீட்டைப் பற்றிக் கவலைப்படாமல் சுற்றி வந்தால் தான் திருந்துவார் என்று மனைவி முடிவு கட்டினால் திருந்தி விடுவாரா? எதிர்மறையான அணுகு முறையால் குடும்பம் தான் பாதிக்கப்படும். நாம் பயணம் செய்கிற படகை நாமே சேதப்படுத்துவது போல் ஆகிவிடும். அன்பு ஓன்று தான் மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதை புரிந்து செயல்பட வேண்டும். அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாநிலத்தில் ஒரு சிறைச்சாலை இருக்கிறது. இதன் பெயர் 'சிங் சிங்' என்பதாகும். இந்த சிறைச்சாலையில் கொடிய தவறு செய்தவர்களை அடைத்து வைப்பார்கள். இந்த சிறைச்சாலை 1826 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 19ம் மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் இங்கு உள்ள கைதிகள் மிகவும் கடினமாக நடத்தப்பட்டார்கள். இந்த சிறைச்சாலையின் இயற்பெயர் மவுண்ட் பிளசென்ட் சிறைச்சாலை (Mount Pleasant Prison) என்பதாகும். இந்த சிறைச்சாலை சிங்

பேசாமல் தூங்குங்க

Image
இறைவனின் பணிகளை மேற்கொண்டு வரும் ஒரு இறை ஊழியர் இருந்தார். ஆனால் அவர் உள்ளத்தில் கவலைக்குடிக் கொண்டிருந்தது. ஆகவே அன்று இரவு தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தார். காரணம் சில முக்கியமான தீர்மானங்களை தன்னுடைய திருச்சபையிலே நிறைவேற்ற வேண்டியதிருந்தது. அதற்கு சபைக்குழு சம்மதிக்குமோ? மறுக்குமோ? என்று உள்ளத்தில் சிந்தித்துக் கொண்டே இருந்தார். மெதுவாக வீட்டின் மாடியில் ஏறி அங்கும் இங்குமாக உலாவிக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு சத்தம் அவர் செவியில் தெளிவாய் ஒலித்தது. “Little John go to sleep”(என் சிறு மகன் ஜாண் போய் தூங்கு). அங்கும் இங்கும் பார்த்தார். இது தன் தாயார் குரல் போல் அல்லவா இருக்கிறது! ஆனால் என் தாயார் இறைவனிடம் போய் சேர்ந்து விட்டார்களே என பின்பு தான் உணர்ந்தார். என் ஆண்டவர் தான் என்னை இப்படி அன்புடன் அழைக்கிறார் என்று பின்பு புரிந்துக் கொண்டார். உடனே வேகமாக மாடியில் இருந்து இறங்கி வீட்டிற்குள்ளே வந்தார். அவர் உள்ளமெல்லாம் மிகுந்த சமாதானத்தால் நிரப்பப்பட்டிருப்பதை உணர்ந்தார். படுக்கைக்குச் சென்றார். கவலையை மறந்து அப்படியே நிம்மதியாக உறங்கி விட்டார். காலையில் எழுந்து சபைக்கூடுகைக

சுபாவத்தை மாற்ற இயலுமா?

Image
எல்லா உயிரினங்களையும் நேசிக்கும் நல்ல மனிதர் ஒருவர் ஆற்றில் குளிப்பதற்காக இறங்கினார். ஆற்று வெள்ளத்தில் நீராடிக் கொண்டிருக்கும் போது அவர் அருகிலே தேள் ஓன்று தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. மனம் வருந்தினவர் அந்த தேளைக் காப்பாற்ற விரும்பி தன் கைகளைக் கொண்டு தூக்கினார். அவ்வளவு தான் அந்த தேள் தன்னுடைய கொடுக்கினாலே கொட்டியது. வலி தாங்க முடியாமல் ஐயோ என்று அதை உதறினார். மீண்டும் தேள் தண்ணீரில் தத்தளிக்க ஆரம்பித்தது. மனம் தளராமல் மீண்டும் அந்த தேளை தன் கைகளால் தூக்கி காப்பாற்ற முற்பட்டார். தன்னைக் காப்பாற்றுகிறாரே என்ற உணர்வு இன்றி மீண்டும் தன் கொடுக்கால் கொட்டியது.  ஐயோ என்று கையை உதறினார். இந்த நிகழ்வைப் பார்த்துக் கொண்டிருந்த அவரின் நண்பர்கள் அவரைப்பார்த்து நீ நல்ல முட்டாள். தேளைப்போய் காப்பாற்றி இப்படி கொட்டு வாங்க வேண்டுமா? என்று கிண்டல் செய்தனர். அவரோ பொறுமையுடன் நான் எல்லா படைப்பையும் நேசிக்கிறவன். ஆகவே என் சுபாவம் உதவிச் செய்வது தான். அதே வேளையில் தேளின் குணம் கொட்டுவது தான். அது நான் எவ்வளவு தான் உதவிச் செய்தாலும் அது கொட்டத்தான் செய்யும். நான் என் கையினால் காப்பாற்றாமல் ஒரு ம

குடும்ப பொறுப்பு யாருக்கு?

Image
குடும்பத்தை முன்னெடுத்துச்செல்வது ஆணா அல்லது பெண்ணா? குடும்பத்தின் முடிவுகளை எடுப்பது யார்? குடும்பத்தில் வரும் பிரச்சனைகளை, பொருளாதார தேவைகளை சந்திப்பதில் யார் முக்கிய பங்கு ஆற்ற வேண்டும்? போன்ற கேள்விகளை எழுப்பினால் நிரந்தரமான பதிலை அளிக்க இயலுமா என்றால் இயலாது. ஒவ்வொரு குடும்பத்திற்கு ஏற்ப மாறுபடும். சில குடும்பத்தின் தலைவர்கள் திருமணமான பின்பும் வாலிபர்களைப் போன்றே அலைவார்கள். அவர்களுக்கு எந்த பள்ளியில் பிள்ளையைப் படிக்க வைக்க வேண்டும்? அடுத்த வாரம் Fees கட்டவேண்டுமே அதற்கு என்னச் செய்ய வேண்டும்! பிள்ளைகள் பெரியவர்களாக மாறிவிட்டார்களே திருமணம் செய்து வைக்க வரன் தேட வேண்டுமே? போன்று எதையும் சிந்திக்கவும் மாட்டார்கள். இது ஒரு விதமான பொறுப்பற்ற குடும்ப தலைவர்கள். மற்றொரு புறத்தில் பிள்ளைகளைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் பெற்றோர் வீட்டிற்கு பிள்ளைகளை விட்டு விட்டு நினைத்தவுடன் கிளம்பி விடும் பெண்கள். இவ்வாறு பொறுப்பு இல்லாமல் நடந்துக் கொள்ளும் குடும்ப தலைவர், தலைவி இருக்கும்போது பொறுப்புக்காக போட்டியிடும் குடும்ப தலைவர், தலைவிகளும் அதிகரித்து வருகின்றனர். அகங்காரமும், ஆணவமும், உயர்ந்து

எந்த வேலை எனக்கு காட்டினும்

Image
குடும்ப வாழ்விற்குள் நுழையும் முன் அட்டைப் பூச்சுகளாய் பெற்றோரை ஒட்டிக்கொள்ளலாம். ஆனால் குடும்பம் பிள்ளைகள் என்று வந்த பின் தனித்து செயல்பட வேண்டிய சூழல் வந்து விடுகிறது. பிள்ளைகளை காப்பதற்காக, குடும்பத்தை நடத்துவதற்காக எப்பாடுபட்டாலும் குடும்பத்தை எடுத்து நிறுத்த வேண்டும் என்ற மனநிலை உறுதியாகி விடவேண்டும். அதில் சோர்ந்து போகக் கூடாது. வாழ்க்கைப் போராட்டத்தில் குறிப்பாக மன உறுதியை மட்டும் விட்டு விடாமல் பெண்கள் இருக்க வேண்டும். வாழ்க்கையை வாழமுடியாது என்று கோழைத்தனமாக முடிவு எடுக்காமல் எந்த வேலையையும் செய்து குடும்பத்தைக் காப்பதற்கு உறுதி பூண்டுக் கொள்ள வேண்டும். ராஜஸ்தான் மாநிலத்தில் ஆஷா கேந்திரா என்ற பெண்ணிற்கு 40 வயது. இவருக்கு இரண்டு குழந்தைகள், கணவர் இல்லை. ஆஷாவோ கல்லூரி படிப்பை இடையிலே விட்டு விட்டு வந்தவர். ஆனால் வாழ்க்கையில் தென்றலிடும் என்று நினைத்த ஆஷாவிற்கு புயலடித்து விட்டது.   ஆனால் மனந்தளராத ஆஷா கல்வியை தொடர்ந்து படித்தார். அது மட்டுமல்லாமல் நாள்தோறும் எட்டு மணிநேரம் அரசு பணியில் கால் வைத்து விட வேண்டும் என உறுதியாக உழைத்தார். 2019 ம் ஆண்டு நடைப் பெற்ற முதல்நிலை அரசு பணிய

திருப்பிக் கொடு

Image
திருமணம் என்பது தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் அதிக அளவில் பெற்றோராலேயே உறுதிப்படுத்தப்படுகிறது. மேலும் மாவட்டங்களுக்குள்ளேயே 80% திருமணங்கள் நடந்து வருவதையும் நாம் காண முடிகிறது. இன்னும் நன்றாக உற்று நோக்கினால் 95% மேல் அந்தந்த சாதியினருக்கிடையே தான் திருமணங்கள் நடந்தேறி வருகின்றன. இவ்வாறு திருமணங்கள் மிகவும் கட்டுக்கோப்பாக நடந்து வருவதால் வரதட்சணை என்பது மறைமுகமாகவோ அல்லது நேரிடையாகவோ தழைத்து வளர்ந்து வந்து விடுகிறது. புதிய சிந்தனைகளுடன் வரதட்சணை வாங்குவது தவறு என்று சிந்திக்கிற இளைஞர்கள் கூட தங்களது சிந்தனையின் அடிப்படையில் வெற்றி பெற முடியாத அளவிற்கு பெரியவர்கள் silent ஆக முடித்து விடுகின்றனர். நாங்கள் வரதட்சனை ஒன்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் தங்கள் குடும்பம் எப்படிப்பட்டது என்பதை விலாவாரியாக உரித்துக்காட்டி எங்கள் குடும்பத்திற்கு ஏற்ப செய்யுங்கள் என்று தங்களது demandயை  போட்டுவிட்டு போய்விடுவார்கள். வெளியே வரதட்சனையை நாங்கள் கேட்கவில்லை அவர்களாகவே மணமகனுக்கு ஒரு காரை அனுப்பி விட்டார்கள், Bankல் 10 லட்சம் டெபாசிட் செய்து விட்டார்கள், ஒரு பங்களாவை எழுதிக் கொடுத்து விட்டார்கள் என்று

இன்னும் சந்தேகமா?

Image
கணவன் மனைவியின் உறவானது பிற உறவுகளைக் காட்டிலும் சிறந்தது, உன்னதமானது. அந்த உன்னதமான உறவை சந்தேகப்படும் போது தாங்கிக்கொள்ள முடிவதில்லை. எத்தனை முறை தான் நான் நல்லவன், நல்லவன் அல்லது நல்லவள், நல்லவள் என்று விளங்க வைப்பது. இனி இவருக்கு/இவளுக்கு புரிய வைப்பது முடியாத  காரியம்! என்று புலம்புவது உண்டு. ஆனால் தென்காசி மாவட்டத்தில் புரிய வைத்துத் தோற்றுப் போன ஒரு பெண் தன்னையும், தன் பிள்ளைகள் வாழ்வையும் பரிதாபமாக முடித்துக் கொள்ள முடிவெடுத்தது இதயத்தை உருக்கி விடுகிறது. தென்காசி மாவட்டத்தில் ஒரு இளைஞன் தன் இளம் வயதின் மனைவியோடு மகிழ்ச்சியாகத்தான் வாழ்க்கையை ஆரம்பித்தான். இரண்டு சிறு குழந்தைகளைக் கர்த்தர் கொடுத்து ஆசீர்வதித்தார். ஆனால் அந்த இளைஞனுக்கு சந்தேகம் அடிக்கடி ஏற்பட்டு மனைவியை அடித்து துவைக்க ஆரம்பித்துள்ளார். துன்பம் தாளாது பலரிடம் முறையிட்டுப் பார்த்தார். இறுதியாக தன் சொந்த வீட்டிற்கே போய் விட்டார். இளைஞன் உறவினர்கள் மூலம் சமாதானம் பேசி மீண்டும் குடும்பத்தை நடத்த ஆரம்பித்தார்.  மீண்டும் சந்தேகம் அவனை ஆட்டிப்படைக்க மீண்டும் துன்பம் குடும்பத்தில் துளிர்விட்டது. இனி எந்தவிதத்திலும் இந்

Youtube சமையல்

Image
என் பிள்ளை நன்றாக சமையல் செய்வாள். உங்கள் குடும்பத்திற்கு ஏற்ற மருமகளாக இருப்பாள் என்று பெருமைப்பட்டது அந்த காலம். இப்பொழுது என் மகள் சமையல் கட்டுப்பக்கம் வந்ததே கிடையாது. காப்பி போடக் கூடத் தெரியாது. எல்லாம் சமையல்காரியே பார்த்துக் கொள்வாள் என்று பெருமையாக நினைக்கிற காலம் இது. காலத்தின் மாற்றமோ என்னவோ தெரியவில்லை. கொரானாவின் தாக்கத்தினால் வேலைக்காரிகள் வீட்டு வேலைக்கு வர இயலவில்லை. அப்படியே வருகிறேன் என்றாலும் சும்மா வருகிறாளா அல்லது கொரானாவோடு வருகிறாளோ, தெரியவில்லையே என்று நானே வீட்டு வேலையைப் பார்த்துக்கிறேன் என்று சொல்லும் அளவிற்கு வந்து விட்டது. எவ்வளவு தான் படித்தாலும் வீட்டு வேலைகளை, சமையல்களை கொஞ்சம் ஆண்களும், பெண்களும் கற்றுக் கொள்வது ஒன்றும் தவறில்லை. இப்படிப்பட்ட கொள்ளை நோய் தாக்கங்கள், எதிர்பாராத sickness கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ வரும்போது உதவியாக இருக்கும். ஏதாவது ஒரு சூழலில் கொஞ்சகாலம் தனித்து இருக்கவேண்டிய சூழல் வரும்போதும் உதவியாக இருக்கும். தென்னிந்தியாவின் முதன் "Diamond Play Button" அந்தஸ்தைப் பெற்றுள்ளது தமிழ் நாட்டைச் சேர்ந்த 'Village Cooking'

சிந்தனைச்செய் மனமே

Image
  உத்திரபிரதேச மாநிலத்த்தில் மக்கள் தொகை எண்ணிக்கை 23 கோடியாகும்.   இந்தியாவின் மக்கள் தொகை தற்பொழுது 138 கோடி. சீனாவின் மக்கள் தொகை 144 கோடி. 2027ம் ஆண்டு சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்திற்கு வந்து விடும் என்று கணிக்கப்படுகிறது. இச்சூழலில் உத்திரபிரதேசத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த புதிய மசோதா கொண்டு வரப்பட உள்ளது. மக்கள் அரசின் கட்டுப்பாட்டிற்கு கீழ்படிய வேண்டும் என சலுகைகள் வாரிவழங்கப்பட்டுள்ளது.   குறிப்பாக குறைந்த வட்டியில் வீட்டுக்கடன், ஒரு குழந்தையை பெற்றுக்கொள்வோருக்கு ரூ 80,000/- ஊக்கத்தொகை, முதல் குழந்தை பெண் குழந்தையாய் இருக்கும் போது குடும்ப கட்டுப்பாடு செய்துக் கொண்டால் ரூ 1 லட்சம் ஊக்கத் தொகை என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். அதே வேளையில் குழந்தைகளை அதிகம் பெற்றால் அரசாங்க சலுகைகள் ரத்து என்று அதிர்ச்சி வைத்தியமும் கொடுத்துள்ளார் ஆதித்யநாத். உதாரணமாக இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் உள்ளாட்சி தேர்தலில் நிற்க தகுதியை இழக்கிறார். மூன்றாவது பிள்ளையைப் பெற்றுக்கொண்டால் பதவி உயர்வுக்கு சான்சே கிடையாது.   இதெல்லாம் சொல்லியும் கேட்காவிட்டால் நான்கு

வேண்டுதல் வேண்டுமா?

Image
இறைவனிடம் பல்வேறு சூழல்கள் ஏற்படும் போது நாம் வேண்டுதல்கள் செய்கிறோம். சில வேளைகளில் பொருத்தனைகள் செய்துக் கொள்ளுகிறோம். கடவுளே நீர் இதைச் செய்தால், நான் உமக்கு இதைச் செய்வேன் என பேரம் பேசிக்கொள்ளுகிறோம். சில பொருத்தனைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியது. சில ஏற்புடையது அல்ல. கரூர் மாவட்டத்தைச்சார்ந்த ஒருவர் அரசு பணிச் செய்து நிறைவுச் செய்தவர். இவர் ஒரு அரசியல் கட்சியிலே தீவிர பற்றுள்ளவர். அந்த பற்றினால் இறைவனிடம் ஒரு வேண்டுதல் செய்துள்ளார். அந்த வேண்டுதல் நிறைவேறுமானால் நான் என் உயிரையே உமக்கு தந்துவிடுவேன் என்று தீர்மானித்துள்ளார். அவர் வேண்டுதலின் படியே நடந்தது அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதே வேளையில் தான்  தீர்மானித்ததின்படியே கோயில் வளாகத்திலே தீக்குளித்து இறந்துவிட்டார். அவர் இறக்குமுன் ஒரு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் எனது வேண்டுதல் நிறைவேறியதால் சுய நினைவுடன் இறக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.  இப்படிப்பட்ட முடிவுகள் பரிதாபத்திற்குறியது. நாம் இவ்வாறான பொருத்தனைகளை இறைவனிடம் செய்யக்கூடாது. திருமறையிலும் எப்தா என்ற நீதிதலைவர் ஒரு பொருத்தனையை ஏறெடுக்கிறார். அந்த பொருத

இல்லறத்தின் இலக்கணம்

Image
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் பிரேசில் அணியை அர்ஜென்டினா அணி வீழ்த்தி 28 ஆண்டுகளுக்கு பின் சாம்பியனாகி சாதனைப் படைத்தது. ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள மரக்கானா மைதானத்தில் தென் அமெரிக்க நாடுகளுக்கிடையே நடந்து வந்த இந்த தொடரின் இறுதிக் கட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரேசிலுடன் அர்ஜென்டினா அணி மோதியது. இவ்வணிகளின் மிகச்சிறந்த வீரர்களான லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா), நெய்மர் ஜூனியர் (பிரேசில்) இருவரும் இப்போட்டியில் எதிர் எதிர் அணிகளில் களமிறங்கி ரசிகர்களின் இருக்கையில் இருக்க விடாமல் செய்தனர். அனல் பறந்த இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி ஒரு பந்தை வலைக்குள் திணித்து வெற்றியை வசப்படுத்தியது. 28 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வெற்றியை முற்றமிட்ட அர்ஜென்டினா வீரர்கள் அமர்களத்தில் இறங்க, பிரேசில் அணியினர் வெளிவரமுடியாத அதிர்ச்சியில் தலையை பிய்த்துக்கொண்டனர். பிரேசில் வீரர்கள் உணர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தனர். இதில் நெய்மரும் அடங்குவார். ஆனால் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மெஸ்ஸிக்கு வாழ்த்துத் தெரிவித்தார். இருவரும் கட்டியணைத்தபடியே சில நிமிடங்கள் அமைதியாக