Posts

Showing posts from October, 2021

இன்னும் கொஞ்சம்

Image
ஒரு பேராயர் தன்னுடைய மனைவியின் நினைவு நாள் ஜெபக்கூட்டத்தில் பேசும் போது “தன் மனைவியுடன் நான் அதிகமான நேரத்தை செலவுச் செய்து, அன்பு செலுத்துவதற்கு நேரம் ஒதுக்கவில்லை என்ற குற்ற உணர்வு என்னை இப்பொழுது வருத்துகிறது. நான் அவளை இழந்த பின்பு தான் அதை நான் உணருகிறேன்” என்று வருந்தினார். பலவேளைகளில் நமது துணையின் அருமையை நாம் உடனே உணருவதில்லை. இவனை/ளை விட ஒரு நல்ல துணையை நாம் தேர்ந்தெடுத்தால் என்ன? என்று இருக்கிற கணவனை/மனைவியை வேண்டாம் என்று divorce பண்ணி விடுகிறோம். அவர்களை இழந்த பின்பு தான் அவர்களுடைய அருமையை நாம் உணருகிறோம். இவனை/ளைக் காட்டிலும் முதலில் நாம் திருமணம் செய்த நபரே எவ்வளவு better என்று சிலர் உணருகின்றனர்.                சிலர் இரண்டாவது திருமணம் செய்துக் கொள்ளாமல் பிள்ளைகளுடன் வாழும் போது தான், சே சே .. எவ்வளவு அவசரப்பட்டு divorce வாங்கி விட்டோம். இப்படி நாம் வாழ்வதை விட கணவனோடு/மனைவியோடு வாழ்ந்திருந்தால் எவ்வ்ளவு நன்றாக இருந்திருக்கும் என்று எண்ணி வருத்தப்படுகின்றனர். ஒரு பெண் தன் கணவனோடு கஷ்டப்பட்டு வாழ்ந்துக் கொண்டிருந்தாள். தன் கணவனை பாரமாகவும், வேண்டா வெறுப்போடும் பார்த்த

இறுதி மூச்சு வரை போராடு

Image
மனிதனின் வாழ்க்கை என்பது மனிதனுக்கு நம்பிக்கை இருக்கும் வரையில் தான். நம்பிக்கையை இழக்கும் போதே மனிதனின் பாதி உயிர் போய் விடுகிறது. மீதி உள்ள வாழ்க்கை நடைபிணமாகவே வாழ்கிறான். நெப்போலியனை எல்பா தீவில் சிறை வைத்தனர். ஆனால் அவன் தப்பி, வந்து புது படையை உருவாக்கினான். வெற்றி வாகைச் சூட வேண்டும் என்ற எண்ணத்துடன் பிரான்சுக்குள் நுழைந்தான். அவன் எதிர்பார்த்தது போல் பிரான்சு நாட்டு வீரர்கள் அவனை எதிர்கொண்டனர். இருப்பினும் நெப்போலியனின் துடுக்கான பேச்சு, வீரமிக்க சிங்க நடை, பிரான்சு நாட்டு படை வீரர்களுக்கு அதிர்ச்சியையும், மிரட்சியையும் கொடுத்தது. நெப்போலியன் கெம்பீரமாக நின்று படை வீரர்களைப் பார்த்து எப்படி கெர்ஜித்தான் என்றால் “என்னை சுடவேண்டுமானால், சுட்டுத் தள்ளுங்கள். ஆனால் நீங்கள் சுடப்போவது உங்களது மன்னன், உங்களது மாவீரன் என்பதை மறந்து விடாதிருங்கள்” என்று நெஞ்சை நிமிர்த்தியவாறு நின்றான். அந்த நெருப்பை கக்கும் பேச்சினிலே அத்தனை படைவீரர்களும் நெப்போலியனோடு இணைந்தனர். ஆட்சி நெப்போலியன் கையில் வந்து விழுந்தது. ஆனால் அதே நெப்போலியன் செயின்ட் ஹெலனாத் தீவில் அடைக்கப்பட்ட போது (Saint Helena) (அக

டென்சன் டென்சன்...

Image
சிந்துவும் அவளுடைய அம்மா சாலினியும் காலையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் போது Birthday Visitக்காக வீட்டிற்குள் நுழைந்துவிட்டோம். பார்த்த அவர்கள் ஐயா, நாங்க அவசர அவசரமாக கிளம்பிக்கொண்டிருக்கிறோம். மாலை வரமுடியுமா? என்றார்கள். Ok என்று கிளம்பும் போது நீங்கள் என் மகளுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். அவள் இன்று Exam எழுதப் போகிறாள். எனக்கு ஒரே டென்சனாக இருக்கிறது. அவளை நினைத்து நினைத்து எனக்கே எல்லா நோயும் வந்துவிடும் போல் இருக்கிறது என்று பதறிக் கொண்டே மகளுக்கு தலையை வாரிக் கொண்டு இருந்தார்கள். ஐயா எனக்காகவும் ஜெபித்துக் கொள்ளுங்கள். இவள் எழுதப்போகிற Exam யை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சு பட படவென்று எனக்கு அடிக்கிறது என்று பதறிக் கொண்டே எங்களை வழி அனுப்பினார்கள்.  எனக்கு ஒரு சந்தேகம் மகள் 2nd Std தானே படிக்கிறாள். அப்படி இருக்கும் போது இவர்களுக்கு ஏன் இத்தனை டென்சன் என்று நினைத்தவாறு இடத்தை காலி செய்தேன். வீட்டிற்கு வந்த போது இப்படிப்பட்ட வீணான டென்சனை குறைக்க என்ன வழி இருக்கிறது என்று மெதுவாக பார்த்த போது ஒரு பெண்மணி தன் வீட்டில் உள்ள மரத்தைப் பிடித்துக் கொண்டும், செடிகளைப் பார்த்துக்

My Dear Son

Image
“நாங்கள் எந்த காலத்திலும் சரணடைய மாட்டோம். நாங்கள் ஒரு வேளை அழிந்துப் போகக் கூடுமானால், இந்த உலகத்தோடு சேர்ந்து தான் அழிந்துப் போவோம்” என்று உலகையே பயமுறுத்தியவர் ஹிட்லர். கடூரமான, மூர்க்கம் நிறைந்த, யூதர்களை கொன்று குவித்த இந்த மனிதனின் இளமை காலம் என்பதே பாகற்காய் போன்று கசப்பாகவே அவருக்கு அமைந்தது. ஹிட்லரின் தந்தை அலாய்ஸ் ஹிட்லர். அவரின் தாயார் ஒரு யூதரின் வீட்டில் வேலைச் செய்து வந்துள்ளார். தந்தை யார் என்று அலாய்க்கும் தெரியவில்லை, ஹிட்லருக்கும் தெரியவில்லை. அலாய்ஸ் ஒரு சுங்க அதிகாரியாக வேலைப் பார்த்ததினால் தண்னைப் போன்று சுங்கத் துறையில் பணியாற்ற விரும்பி தன் மகன் ஹிட்லரை வளைக்க முயற்சிப் பண்ணினார். தன் மகன் ஒழுக்கமாக வாழவேண்டும் என்று over கண்டிப்பாக வளர்க்கப்பட்டார். எந்த தவறுச் செய்தாலும் அதற்கு அடிதான் பதிலாக அமைந்தது.   தகப்பனின் அன்பு, அரவணைப்பு என்பது, என்னவென்றே தெரியாமல் கண்கொத்திப் பாம்பாகவே தன் தந்தையைப் பார்த்தார் ஹிட்லர். தன் தகப்பன் தன் விருப்பத்தை தன் மேல் திணிப்பதை விரும்பாத ஹிட்லர் தன் தகப்பனையும், அவர் தன் மேல் கொண்ட கனவையும் சேர்ந்தே வெறுத்தார். உங்கள் கனவை நான்

பம்பளிமாசா? ஆரஞ்சா?

Image
இளைஞனாக இருந்தபோது ஒரு வாலிபர் கூடுகை மலைப்பாங்கான ஒரு இடத்தில் ஆயத்தமாமாக்கபட்டிருந்தது. அங்கு போவதற்காக அதிகாலமே எழுந்து உற்சாகத்துடன் வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். வாகனம் மலைச்சாரலில் ஏற ஏற உள்ளமெல்லாம் பரவசமானது. எங்கு பார்த்தாலும் பசுமை, ஆங்காங்கு வனவிலங்குகள் நடமாட்டம், பார்க்க பார்க்க மிகவும் சந்தோஷத்தினால் குதுகலித்தது. இறங்கின உடன் இளைஞர்களாக இருந்ததால் உடனே சிட்டாய் அங்கும் இங்கும் பறக்க ஆரம்பித்து விட்டனர். Control பண்ணுவதே அழைத்துவந்த தலைவர்களுக்கு கஷ்டமாகிவிட்டது. அதற்குள்ளாக சிலர் அங்குள்ள பழங்களை பறித்துக் கொண்டு வந்துவிட்டார்கள். ஏய் ஆரஞ்சுப்பழம் கிடைத்தது என்று மகிழ்ச்சியுடன் கூறிக்கொண்டு தோலை உறிக்க ஆரம்பித்தனர். ஆனால் உறிக்க முடியவில்லை. எங்கள் நிலைமையை பார்த்த மலைவாழ் மக்கள் எங்களை பார்த்து சிரித்து கொண்டே, “இது ஆரஞ்சு அல்ல, பம்பளிமாஸ், இது இன்னும் பெரிதாக வேண்டும். அப்பொழுதுதான் சுவையாக இருக்கும்” என்றார்கள். அவர்கள் சொன்னது போலவே சாப்பிட்ட பிறகுதான் தெரிந்தது சுவையின் வேற்றுமை. ஆரஞ்சு போல இருப்பதால் பம்பளிமாஸ் ஆரஞ்சாக மாறமுடியாது. ஒவ்வொன்றுக்கும் சுவை வேறு, இத

நடமாடும் திருமறை

Image
ஒரு சிறப்பு கூடுகை ஒன்றில் பல்வேறு இறையியல் கல்லூரிகளில் கலைக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஒன்று கூடினார்கள். பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தது. மாலை வேளையில் Tea Timeல் சில இளைஞர்கள் திருமறையை குறித்தும், அதன் மொழிபெயர்ப்புகள் குறித்தும், சிறப்புகள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஒவ்வொருவரும் பல்வேறு மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர்களாக தாங்கள் பின்பற்றுகிற மொழிபெயர்ப்பு தான் சிறந்தது என்று பேசினர். ஒருவர் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘King James Version’ தான் சிறப்பானது. அதற்கு நிகர் எதுவுமில்லை. மூலம் மொழியோடு மிகவும் இணைந்து செல்வது இதுதான். ஆகவே இதைத் தவிர வேறு எந்த மொழிபெயர்ப்பும் ஈடு இணை கிடையாது என்றார். மற்றொருவர் தற்பொழுது வந்துள்ள Contemporary Translation தான் சரியானது. இன்றைய இளைஞர்களுக்கு புரியும் விதத்தில் உள்ளது. இதைத்தான் எல்லாரும் பின்பற்ற வேண்டும் என்றார். தமிழ்நாட்டில், தமிழ் வழி கல்வி பயின்ற ஒருவர் கையில் பொது மொழிபெயர்ப்பு இருந்தது. அவர் நமது தாய்மொழியில் எவ்வளவு இனிமையாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதைத்தான் ஒவ்வொரு தமிழனும் வாசிப்பது சிறந்தது என்று உ

கஜானா காலி

Image
நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். வீடு மிகவும் பெரியது. அதை சுற்றிலும் அருமையான செடிகள், கொடிகள். வீட்டின் முன் விலையுயர்ந்த கார், பைக் நின்றது. வீட்டை அருமையாக கட்டியுள்ளீர்களே என்று பாராட்டினேன். கொஞ்ச வருமானத்தில் இவ்வளவு விலை உயர்ந்த கார், பைக் எல்லாம் வாங்கி இருப்பது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. பேசிக்கொண்டிருக்கும் போது தான் இருக்கிற அந்த வீடு வாடகை வீடு என்றும், கார், பைக் செல்போன் எல்லாமே EMIயில் வாங்கியது தான் என்றும் கூறி என்னை கலங்கடித்தார். கொஞ்சம் வருமானம் வருகிறது ஆனால் வீட்டில் எல்லாரும் ஆடம்பரமாக வாழ்ந்து பழகி விட்டார்கள் என்பது எனக்கு புரிந்தது. பேருந்துக்கு காத்திருக்கக் கூடாது என்பதற்காக பிள்ளைகளுக்கும் விலையுயர்ந்த பைக், கார். ஒரு நாள் மாலை வேளையிலே பேருந்து நிலையத்தில் சோகமாக அவர் நிற்பதைக் கண்டு, “என்ன இங்கே நிற்கிறீர்கள்” என்று கேட்டேன். அவரோ கண்ணீர் விட்டுக் கொண்டே, “என்ன சொல்லுகிறது என்று தெரியவில்லை. வீட்டிற்கு சரியாக வாடகை கொடுக்காததால் வீட்டை காலி செய்ய சொல்லி விட்டார்கள். காருக்கு சரியாக EMI கட்டாததால் finance காரர்கள் வண்டியை தூக்கிக் கொண்டு சென்று

நாம் நாமாக இருப்போம்

Image
நண்பர் ஒருவருடைய வீட்டிற்கு சென்றிருந்தேன். அவர் எப்பொழுதும் விதவிதமான dress அணிந்து கொண்டு தான் வருவார். விதவிதமான கூலிங் கிளாசை பயன்படுத்துவார். அருகில் சென்றாலே மணம் கப கப என்று வீசும். காலில் விதவிதமான சப்பல்கள், கேன்வாஸ் ஷூ அணிந்து கலக்குவார். கார், பைக்கை எப்பொழுதும் மாற்றிக்கொண்டே இருப்பார். புது புது ரகங்களை வாங்கி பயன்படுத்துவார். இவையெல்லாம் எனக்கு பிரமிப்பாகவே இருக்கும். வாங்குற சம்பளத்தை அப்படியே செலவு செய்து விடுவாரோ? என்று எண்ணியவாறு வீட்டு விலாசத்தை கேட்டு வீட்டை அடைந்தேன். வீட்டின் வாசலில் ஒரு பெண் உங்களுக்கு யார் வேண்டும் என்று கேட்க sir பெயரைச் சொன்னதும் உள்ளே அழைத்துச் சென்றார். வீட்டிற்குள் நுழைந்ததும் ஒரு திரைப்பட நடிகரின் படம், உள்ளே இன்னும் நுழைய பார்க்கும் இடமெல்லாம் விதவிதமான நடிகர்கள் photoவால்  அலங்கரிங்கப்பட்டிருந்தது. இந்த படங்களில் எப்படி எல்லாம் heroக்கள் இருக்கிறார்களோ அப்படி எல்லாம் இவரும் மாறி இருக்கிறார் என்பதை உணர்ந்தேன். அந்த வீட்டில் பரிதாபமாக ஒரு பெண் காட்சியளித்தார். சிறு பிள்ளைகள் பஞ்சத்தில் அடிபட்ட பிள்ளைகள் போல் என் கண்முன் தோன்றினார்கள். இவர்

எது சுதந்திர தினம்

Image
பெண் சிநேகிதிகள் இருவர் திடீரென்று ஒரு உணவு விடுதியில் சந்தித்துக்கொண்டனர். பல நாட்களுக்கு பின்பு ஒருவரை ஒருவர் சந்தித்தப் போது மிகுந்த சந்தோஷப்பட்டனர். இருவருடைய உடையிலேயும் தேசியக் கொடி இருந்தது. அன்று ஆகஸ்ட் 15, உடனே சுதந்திர தின வாழ்த்துக்கள் என்றாள் ஒரு சிநேகிதி. மற்றவள் கூறினாள், "எனக்கு உண்மையான சுதந்திரம் நாளைக்குத்தான்"  என்றாள். 'என்னடிச் சொல்லுகிறாய்', என்றாள் சினேகிதி. 'ஆமாண்டி என் அத்தை எங்களை விட்டு போன நாள், ஆகஸ்ட்  16.   அதுதான் எனக்கு உண்மையான சுதந்திர தின நாள்" என்றாள். ஆமா உனக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்துவிட்டதா என்றாள் அடுத்தவள். இவ்வாறு மாமியார் மருமகள் பல இருக்க சில உறவுகள் இனிமையானதாகவும் இருக்கத்தான் செய்கிறது. இந்திரா காந்தி அம்மையார் பிரதமராக இருக்கும் போது வெளிநாடுகளுக்கு சுற்றுப்  பயணத்தை மேற்கொண்டார். அந்த வழியாக வரும்போது தன் மகனையும் பார்த்து விட்டு சென்று விடலாம் என்று ராஜீவ் காந்தியைப் பார்க்கச் சென்றார். அந்த சமயத்தில் எதிர்பாராத ஒன்றை கேட்க ராஜீவ் திகைத்தார். இந்திரா காந்தி அவர்கள் தன் மகனைப் பார்த்து "நாளைய தினம் என

நினைவாற்றல் வேண்டுமா?

Image
மனோ கல்லூரிக்குள் கால் எடுத்து வைத்த போதே உள்ளமெல்லாம் பட்டாம் பூச்சி போல் சுதந்திரமாக பறப்பதை உணர்ந்தான். இது வரையிலும் ஆசிரியர்களும், பெற்றோர்களும் படி படி என்று திணித்தது முடிந்துப் போன உணர்வு மேலோங்கியது. காலரை தூக்கி விட்டுக் கொண்டு, கையில் நாய் செயின் போன்ற ஒன்றை சுற்றிக் கொண்டு, காளானைப் போன்று தலை முடியைத் திருத்தி, வண்ணப் பறவையைப் போன்று தலையில் சாயம் தீட்டி, கிழிந்த உயரக பேண்ட்யைப் போட்டுக்கொண்டு, சட்டை பொத்தானை மேலே சரியாக பூட்டாமல் திறந்துப் போட்டுக் கொண்டு, கழுத்தில் தாலிச்செயின் போன்று உருட்டு சங்கிலியைப் போட்டுக்கொண்டு, வாயில் எதையோ தினிக்கிறானே என்ன என்று மூன்றாம் ஆண்டு மாணவன் ரோஜரை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் மனோ. எதேட்சையாக ரோஜரின் பார்வையில் சிக்கிக் கொண்டான் மனோ. ஹலோ Bro என்ன First year ஆ? பார்த்தாலே தெரியுதே, Bro இது இவன் என்னத்தை உதட்டுக்குள் திணிக்கிறானே என்று தானே நினைக்கிற! வேறு ஒன்னும் இல்ல, இதை உதட்டுக்குள்ள வைச்சிக்கிட்டா Concentration Power அப்படி இருக்கும் !! வைச்சிப்பாருங்க bro, சின்ன வயசு, சொல்லிக் கொடுங்கப்பா !!! இல்லண்ணேன்! எனக்கு பழக்கம் இல்லை எ

கொஞ்சம் கோபப்படுங்க, Please!

Image
ஒரு முறை குற்றாலத்தில் குளிப்பதற்காக குடும்பமாக சென்றிருந்தோம். சாரலிலே நனைந்துக்கொண்டு நன்றாக குளித்து விட்டு அப்படி குரங்குகளின் சேட்டைகளைப் பார்த்துக் கொண்டே கடைகள் பக்கமாக நடந்து வந்துக் கொண்டிருந்தோம். வித விதமான பழங்கள் ஆங்காங்கே அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. எவ்வளவு தான் இருந்தாலும் குற்றாலத்தில் ஏதாவது இரண்டு பொருட்களை வாங்கினால் தான் குற்றாலத்திற்கு வந்து திரும்பிய திருப்தி என்று கடைகளுக்கு சென்று வந்துக் கொண்டிருந்தோம். பசி எடுக்க ஆரம்பித்தது. வழியே ஒரு சிறிய விளம்பர பலகை, "சூடான அல்வா கிடைக்கும்". நான் சிறு பிள்ளையாக இருக்கும் போதே ஒரு அல்வா பிரியன். வயிறு பசி வேறு. மெதுவாக கடைக்காரரிடம் அல்வா சூடாக இருக்கிறதா என்றேன். ஆமா என்று சொல்லிக் கொண்டே எடைப் போட ஆரம்பித்துவிட்டார் கடைக்காரர். இது திருநெல்வேலிகாரனுக்கே அல்வா கொடுக்கும் தென்காசி கடைக்காரர். கடை பக்கத்திலே நின்று அல்வாவைச் சாப்பிட்டு முடித்தேன். உடனடியாக கொஞ்சம் மிச்சரை எடுத்து என் கையிலே கொடுத்தார். நான் கேட்கவே இல்லை. ஆனால் கொடுத்தது ஆச்சரியமாக இருந்தது. அதையும் சாப்பிட்டபோது நன்றாக இருந்தது.   சாப்பிட்டு முட

மாறாதது எது?

Image
நண்பர் ஒருவரை சந்தித்துப் பேசி கொண்டிருந்தேன். அவர் நான் பேசிக் கொண்டிருக்கும் போது சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே இருந்தார். ஒரு சிகரெட் புகைத்து முடிந்தது. ஐந்து நிமிட இடைவெளியில் அடுத்ததை புகைத்துக் கொண்டிருந்தார். அவரிடம், "ஏன் இவ்வாறு தொடர்ந்து புகைத்துக் கொண்டே இருக்கிறீர்கள்" என்று கேட்டேன். என் மனைவி என்னை விட்டு பிரிந்துப் போனதை நினைக்கும் போதெல்லாம் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. மன அழுத்தம் எனக்கு அதிகம் அது உங்களுக்கு புரியாது. அவள் நல்லவள் தான். ஆனால் அவள் பிரிந்துப் போய் விட்டாள். என் பிள்ளைகளைப் பார்ப்பதற்கும் என்னை அனுமதிப்பதில்லை. இதை நினைத்தாலே எனக்கு mood அவுட்டாகி விடுகிறது. வேலைக்குப் போகிற மனமே வருவதில்லை. காலையிலேயே குடித்தால் தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியாக உள்ளது என்று பேசிக்கொண்டே அடுத்த சிகரெட்டை எடுத்தார். மன அழுத்தம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வருகிறது. சிலருக்கு ஓயாத வேலைப்பளு, சிலருக்கு கணவன் செயல்பாடுகளைப் பார்க்கும் போதும், சிலருக்கு பிள்ளைகள் எப்பொழுதும் Cell Phone யை பயன்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போதும், சிலருக்கு மனைவியின்

என்னவாக விரும்புகிறாய்?

Image
ஷைனியின் எதிர் காலம் இப்படி முடியுமென்று அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. விமானியாக கணவன் பணியாற்றியதால் நல்ல வருமானம், மகிழ்ச்சியான வாழ்க்கை, ஆடம்பரமான வீடு, வெளிநாட்டுப் பொருட்கள் என்று சுகபோகமாக வாழ்ந்து வந்தாள். கடவுள் குட்டி Sam  யையும் கொடுத்ததால் அவனோடு நேரம் செலவிடுவதே போதும் போதும் என்றாகி விடும் ஷைனிக்கு.  திடீரென்று வந்த cellphone அழைப்புதான் அவளை நிலைகுலையச் செய்தது. விமானம் தரையிறங்கும் போது பனி மூட்டத்தால் தடம் மாறி விபத்திற்குள்ளானதில் கணவன் இறந்து போனான் என்ற செய்தியை அவளால் நம்ப முடியவில்லை. அதைக் கேட்ட உடன் அவள் கத்தினாள், கதறினாள், வேதனைப்பட்டாள். இருப்பினும் வாழ்வை Sam க்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும் என்று மன அமைதியானாள்.  Sam வளர ஆரம்பித்தான், ஒரு நாள் தாயின்  மடியில்  உட்கார்ந்துக் கொண்டு, அம்மா நானும் flight யை உம் என்று உட்கார்ந்துக் கொண்டு ஓட்டுவேன். நீங்கள் பின்னால் உட்கார்ந்துக் கொள்ளுங்கள் என்றான். இதைக்கேட்ட ஷைனிக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. என்னப்பாடு பட்டாலும் பரவாயில்லை, தன் மகன் ஒரு விமானி ஆகக் கூடாது. என் கணவனை இழக்கக் கொடுத்த அந்த பணிக்குச

ஆயிரம் ஐடியாக்கள்

Image
மெர்ஸிக்கும் அனிஸ்க்கும் திருமணம் ஜெ ஜெ என்று நடந்தது. நண்பர்கள், உறவினர்கள் என்று பலர் வாழ்த்திச் சென்றனர். மணமககளிடம் உறவினர்கள், நண்பர்கள் பல தங்களுக்கு தெரிந்த தலையணை மந்திரங்களையும், பல ஐடியாக்களையும் காதில் சாத்தான் போன்று ஓதி விட்டு சென்றனர். நடக்க முடியாமல் காலை இழுத்து இழுத்து ஒரு பாட்டி மணமகள் அருகில் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். இப்பொழுது ஏறக்குறைய ரிசப்ஷன் முடிந்த வேளை. ஆகவே பாட்டிக்கு நல்ல வாய்ப்பாக இருந்தது.  மணமகளை பார்த்து, “உன் வீட்டுக்காரன் சரியான வெடிவாலு, ஒரு இடத்தில் இருக்க மாட்டான், ஊரை சுற்றிக் கிட்டே அலைவான். ஊதாரித்தனமாக செலவு செய்வான் அதனால நான் சொல்லுகிறதைக் கேளு, உன் பாட்டி மாதிரி சொல்லுகிறேன்” என்றாள். புதிதாக வந்த மணமகளுக்கு தன் கணவனைப் பற்றி தொடக்கத்திலே காதில் ஓதியது தலையை சுற்ற ஆரம்பித்தது. பாட்டி மீண்டும் ஆரம்பித்தார்கள், “பயப்படாதே, நான் சொல்கிறபடி செய் சரியாக வந்திடுவான். முதலிலேயே ஒரு பிடி பிடித்து விட்டால் வழிக்கு வந்து விடுவான். இவனை மாதிரி தான் என் வீட்டுக்காரரும்” என்றாள். சரி பாட்டி சரி என்று தலையை ஆட்டினாள். பாட்டி புராணம் தொடர்ந

செருப்பு தைக்கலாமா?

Image
கிறிஸ்துகுல ஆசிரமத்தின் தலைவராக இருந்த திரு.சவரிராயன் அவர்கள் பேராயர் ஜெபராஜ் அவர்களின் பங்களாவிற்கு வந்திருந்தார்கள். அன்று மிகவும் நேரமாகி விட்டதால் பேராயரின் அலுவலகத்திலுள்ள மேலறையில் தங்குமாறு பேராயர் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அவர்கள் தன்னுடைய படுக்கை அறைக்குப் போகுமுன் பேராயர் அவர்களிடம், "தன்னுடைய செருப்பு அறுந்துவிட்டது அதை தைப்பதற்கு யாராவது கிடைப்பார்களா", என்றுக் கேட்டார்கள். அதற்கு பேராயர் அவர்கள், "இப்பொழுது இரவு யாரும் வருவதற்கு வாய்ப்பில்லை, நாளைக்குத் தானே உங்களுக்குத் தேவை, பார்த்துக்கொள்ளுவோம். இப்பொழுது நீங்கள் படுக்கைக்குப் போங்கள்" என்று அனுப்பி வைத்தார்கள். காலையில் வேகமாக புறப்பட்டார்கள் திரு. சவரிராயன் அவர்கள். வெளியே வரும் போது தான் தன்னுடைய செருப்பு அறுந்துப் போய் இருந்ததே என்று யோசித்துக் கொண்டு வெளியே வந்தார்கள். ஆச்சரியம் காத்திருந்தது. அவருடைய செருப்பு நன்றாக தைக்கப்பட்டிருந்தது. அதனை அணிந்துக் கொண்டு கீழே பேராயர் அவர்களிடம், "ஐயா யாரைக் கொண்டு தைத்தீர்கள்" என்றார் சவரிராயன் அவர்கள். அதற்கு பேராயர் சிரித்துக்கொண்டே, "வே

பயனற்ற உழைப்பு

Image
ராபர்ட் தன் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று தன் பிள்ளைகள் மற்றும் மனைவியை விட்டுவிட்டு வெளிநாடு சென்றார். கை நிறைய சம்பளம் கிடைத்தது. தங்க கட்டிகளாக சம்பாதித்து அவ்வப்போது ஊருக்கு கொண்டு வருவார். பிள்ளைகளை நல்ல பள்ளிகளில் படிக்க வைத்தார். பெரிய வீட்டை கட்டினார். ஊரிலேயே பெரிய பணக்கார குடும்பமாக தலைநிமிர்ந்து நின்றது. பிள்ளைகள் வளர வளர தாயின் சொல்லைக் கேளாமல் ஊருக்குள் ஊதாரியாக சுற்றினர். பள்ளியில் படிப்பதற்கு பதிலாக பள்ளியை கட் அடித்துவிட்டு சுற்றுலா தலங்களுக்கு நண்பர்களோடு சுற்றி மகிழ்ந்தனர். தாயிடம் ஏமாற்றி பணத்தை வாங்கிக்கொண்டு ஜில் அடித்து அடித்து மகிழ்ந்தனர். தகப்பனார் சம்பாதித்து அனுப்பிய பணத்தை மனைவி வட்டிக்குக் கொடுத்து ஏமாந்தாள்.  வயதான போது ஊரில் இருந்து விட வேண்டும் என்று வந்தபோது அவர் பிள்ளைகள் போக்கிரிகளாகவும், மனைவி ஆடம்பர வாழ்விலும் குருவி சேர்ப்பது போல் சேர்த்த அவர் சம்பாத்தியம் காற்றில் பறந்து போனதைப் பார்த்து உயிரையே விட்டு விட்டார். பிள்ளைகளின் வாழ்வு அவருக்கு பெரும் சோகத்தை கொடுத்தது. இதைப் போலத்தான் பல வேளைகளில் நாம் எதற்காக உழைக்கிறோம் என்பதே தெரியாமல் கண்ம

இது உன் பிள்ளை

Image
சில பிள்ளைகள் நன்றாகப் படித்து மார்க் பெற்று விட்டால் என் பிள்ளை இப்படித்தான் படிப்பான் என்று பெருமைப்பட்டுக்கொள்வர். மாறாக பள்ளியில் ஏதாவது சேட்டை பண்ணினான் என்று complaint வரும்போது பார்த்தியா உன் பிள்ளை பண்ணின வேலையை! பார்த்தியா உன் பிள்ளை எடுத்திருக்கிற மார்க்கை! நீயே sign போட்டு விடு என்பர். பிள்ளைகள் எடுக்கிற மதிப்பெண்ணை பொருத்தே நல்ல பிள்ளை, கெட்ட பிள்ளை என்று பெற்றோர் பல வேளைகளில் தீர்மானிக்கிறார்கள். புத்தக அறிவை (Academic Intelligence) மட்டும் வைத்தே இவன் பெரிய ஆளாக வருவான் என்று தீர்மானித்து விடுகிறோம். ஆனால் பிள்ளைகள் புத்தக அறிவை தாண்டி உள்ள திறமைகளை (Non-Academic Intelligence) நாம் மறந்துவிடுகிறோம். இன்று புத்தக அறிவை மட்டும் பெற்றவர்களை விட பிறர் திறன்களை வளர்த்துக் கொண்ட பலர் உலகை ஆண்டு வருகிறார்கள். படிப்பில் மட்டுமல்லாமல் பிள்ளைகளிடம் ஓவியம் வரைதல், கம்ப்யூட்டரில் புலமை, கவிதையில் புலமை, சில வேலைகளில் பிள்ளைகளிடம் modern technology குறித்த நுண்ணறிவு இருக்கலாம். அவர்களிடம் எந்த திறமைகள் இருக்கிறதோ அதை ஊக்குவிக்கும் போது அவர்கள் வாழ்க்கையானது பிரகாசமாக அமையும். சச்சின்

புலித் தோலைப் போர்த்த எலிகள்

Image
ஹார்வார்டு பல்கலைக்கழகத்தை சார்ந்த Dr. டேவிட் மெக்லிலேண்ட் என்பவர் பல்வேறு துறைகளில் முதன்மையாக விளங்கிய மாணவர்கள் பற்றிய ஆய்வு ஒன்றை மேற்கொண்டார். கல்லூரியில் படிக்கிற போது புலிகளாக, புயல்களாக கல்லூரியில் விளங்கியவர்கள்; ஆசிரியர்களால் பாராட்டுகள் பல பெற்றவர்கள், இவர்கள் எதிர்காலம் எப்படி இருக்கிறது என்பதை பற்றி ஆராய்ச்சிச் செய்தார். காலரை தூக்கி விட்டு பல்வேறு நிறுவனங்களில், அரசின் மேல் மட்டங்களில் எல்லாம் அதிகாரிகளாக சில வருடங்களுக்குள் நல்ல படித்தவர்கள் அலங்கரித்தனர்.   ஆனால் என்ன ஆச்சுவென்று தெரியவில்லை அவர்களுக்கு அப்பணிகள் திருப்தியளிக்கவில்லை.   காரணம் அவர்கள் அங்கே நிம்மதியாக செயல்பட முடியவில்லை. அங்குள்ள பணியாட்களிடம் பண்பாக பேசி வேலை வாங்கத் தெரியவில்லை. அளவுக்கு மிஞ்சிய கோபம் வெளிப்பட stress, tension, தலைவலி எல்லாம் வந்து விட்டது. இப்படிப்பட்ட மக்களுடன் பணியாற்றுவதை விட வேற இடத்திற்கு போய் விடலாம் என்று கம்பெனி கம்பெனியாக, transfer மேல transfer வாங்கிக் கொண்டு மூட்டை முடிச்சுகளுடன் சந்தோஷம் இல்லாமல் அலைய ஆரம்பித்தனர். ஆய்வின் இறுதியில் Dr. டேவிட் மெக்லிலேண்ட் கண்டு  கொண்ட உண